Tuesday, 28 December 2021

அதிகாரம் 56 கொடுங்கோன்மை CHAPTER 56 - TYRANNY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 56 கொடுங்கோன்மை
CHAPTER 56 - TYRANNY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிமக்களின் உரிமை பறித்து உடைமை பறித்து கோலாட்சி புரியும் வேந்தன் கொலை தொழில் செய்பவனைவிட கொடியவனாவான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who rules miserably his country by plucking rights and belongings of people is worse than commercial killers.
MAHENDIRAN V
------------------
குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆட்சி அதிகாரத்தில் குடிமக்களை பொருள் தரசொல்லி கட்டாயப்படுத்துதல், இரவில் திருடன் கோல் கொண்டு வழிப்பறி செய்வது போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The dominant action of a king like compelling people to pay money unreasonably is equallent of the action of road side robber who stands at night with stick and plucking things.
MAHENDIRAN V
------------------
குறள் 553:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாட்டின் தீமைகள் களைந்து முறையாக ஆட்சி செய்யத் தவறும் மன்னன் சிறுக சிறுக தீங்கு பெருகி தன் நாட்டை இழப்பான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who rules without considering to remove evils that tend in his nation would lose his nation gradually due to cummulation of penance.
MAHENDIRAN V
------------------
குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செங்கோல் தவறி கொடுங்கோல் புரியும் அரசன் தன் பொருளையும் இழப்பான், குடிகளும் கெட்டுப் போகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who runs his reign without justice and by tyirannising would lose his nation as well as people would be spoilt.
MAHENDIRAN V
------------------
குறள் 555:
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடுங்கோல் பலனால் குடிகள் அழும் கண்ணீர் வெள்ளமே அக்கொடுங்கோல் அரசனின் செல்வத்தை அழிக்கும் படையாக அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The tears of people who are suffering due to tyranny of the reign of a king would be a troop to kill such king and his wealth.
MAHENDIRAN V
------------------
குறள் 556:
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மன்னனின் ஆட்சிமுறை செழுமையாய் இருந்தால் அவன் புகழுடன் வலம் வருவான். இல்லேல் புகழ் சரிந்து அவப்பெயர் எடுப்பான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who reigns his nation on the justicious path would get all prides, otherwise, he would lose his pride and earn badwill.
MAHENDIRAN V
------------------
குறள் 557:
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மழையின்றி மக்கள் படும் அவதி எவ்வாறோ அது போல் தான் அருள் இல்லா மன்னனின் ஆட்சி குடிமக்களை துன்பமடையச் செய்யும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The stand of people suffering because of not having graces from their king is equallent to suffering of people due to no even a drop of rain.
MAHENDIRAN V
------------------
குறள் 558:
இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடிமக்கள் பொருள் நிறைந்து வாழ்ந்தாலும் அவ்வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியில் கீழ் அமைந்தால் அது துன்பத்திலும் துன்பமாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if people have a big wealth but if they are ruled by a tyranny king, there wouldn't be as a great penance as it is.
MAHENDIRAN V
------------------
குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மன்னனால் முறை தவறி செய்யப்படும் ஆட்சியின் துன்பம், பருவத்தில் மழை பெறாமல் படும் அவதியை போன்றதாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
People's suffering because of immoral reign of their king is equallent to the suffering of people due to get unseasonable rain.
MAHENDIRAN V
------------------
குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காவலனாகிய மன்னன் மக்களை காக்கத் தவறும் ஆட்சி தந்தால், பசு தரும் பாலின் பலன் குன்றும், ஞானிகளும் ஞானம் மறப்பர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a king who is liable to protect people fails to protect people and nation, the milk obtained from cows would be invalid, and the wisdomed people would lose their wisdom.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


You can avail these E-books through your email against your payment by Gpay






You can avail these E-books through your email against your payment done by Gpay. If you wish to buy, please contact me by mentioning the title of the book. Thanks. 

MAHENDIRAN V 

AUTHOR

MOB. 91-9842490745

poigaimahi@gmail.com



 

அதிகாரம் 55 செங்கோன்மை. CHAPTER 55 GOOD REIGN. 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 55 செங்கோன்மை.
CHAPTER 55  GOOD REIGN.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
------------------
குறள் 541:
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தனிப்பட்ட காழ்ப்பு ஏதுமில்லாமல், குற்றம் எதுவென்று ஆராய்ந்து உறுதியாய் நடுவாய் நின்று வழங்குவதே உண்மையான நீதியாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The virtue justice is that not laying any side and examining the actual crime and justifying correct judgment for the sake of people's life.
MAHENDIRAN V
------------------
குறள் 542:
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வானத்தின் கொடையான நீரை/மழையை நம்பி வாழ்வதை போல், மன்னனின் செங்கோல் தவறாத ஆட்சியையும் நம்பித்தான் வாழ்கிறார்கள்.
வை.மகேந்திரன்

Explanation in English:
People live by believing the honest reign of a king as if they live by believing the sky for rain.
MAHENDIRAN V
------------------
குறள் 543:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு அரசனின் ஆட்சி அந்தணர்கள் போற்றும்/ கடைபிடிக்கும் அறம் சார்ந்த வேதத்திற்கும் முதன்மையானதாத இருக்க வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king's reign ought to be primer than the verdicts of vedic and epics sloganed by vedic readers.
MAHENDIRAN V
------------------
குறள் 544:
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களை அரவணைத்து நல்லாட்சி புரியும் ஒரு அரசனை மக்கள் அடி பிறழா பின் தொடர்வர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Surely a king who rules an honest reign by hugging people would be obeyed by people without fouling the king's foot print.
MAHENDIRAN V
------------------
குறள் 545:
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீதி வழுவா நல்லாட்சியை ஒரு அரசன் தருங்கால், பருவமழை தானாய் பொழியும் நிலபுலன்கள் சீராய் விளையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a king reigns his country so honestly, it would be raining itself and crops would cummulate over-all.
MAHENDIRAN V
------------------
குறள் 546:
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மன்னனின் வெற்றியை தீர்மானிப்பது அவன் எறியும் வேலை (ஆயுதம்) காட்டிலும் அவன் செய்யும் நீதி வழுவா ஆட்சி முறையே.
வை.மகேந்திரன்

Explanation in English:
Jawline thrown by a king does not determine the victory of him, only the reign done by him without fouling justice.
MAHENDIRAN V
------------------
குறள் 547:
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வையகத்தை அரசன் காப்பான். அந்த அரசை காப்பதுவோ அவன் செய்யும்  குறையில்லா ஆட்சி முறையே.
வை.மகேந்திரன்

Explanation in English:
The world might be protected a king but he is protected by his faultless good reign.
MAHENDIRAN V
------------------
குறள் 548:
எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களின் குறையறிந்து நீதி வழங்காது, கற்றோர் கருத்து கேளாமல் ஆட்சியாளும் அரசனும் கெடுவான் அவனது ஆட்சியும் கை கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king who rules his nation without lending his ears for the pleads of people, and rules without hearing suggestions from well-versed people would be affected, and his reign too would fall down.
MAHENDIRAN V
------------------
குறள் 549:
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர் வருத்தும் பழியிலிருந்து மக்களையும் தன்னையும் காத்து, பழி செய்வோரை ஆராய்ந்து கடும் தண்டனை வழங்கி ஆட்சி செய்வது ஒரு அரசனின் கடமை.
வை.மகேந்திரன்

Explanation in English:
A king's prime duty is that he ought to protect people from evils raised from out, and to sentence a big punishment to ones who does very much miseries.
MAHENDIRAN V
------------------
குறள் 550:
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொலை பாதகம் செய்வோரை தண்டித்து மக்களை காப்பது என்பது  பயிர்களை காக்க களைகளை பிடுங்குவதுதற்கு ஒப்புமையாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It's just like a plucking weeds for the growth of crops what a king  protects people by giving big punishment to murderers for people's sake.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work is reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE