Monday, 31 January 2022

திருக்குறள். அதிகாரம் 92. வரைவின் மகளிர் CHAPTER 92. WANTON WOMEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 92.
வரைவின் மகளிர்
CHAPTER 92.
WANTON WOMEN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 911:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பு என்பது அறவே இல்லாமல், பொருளை மட்டும் குறிவைத்து இனிதாக பேசும் விலைமகளிரின் செயல் இழிவானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The acts of wanton women done without love but speaking sweetly only for focusing price is the most immoral one.
- MAHENDIRAN V
------------------
குறள் 912:
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பயன் என்ன என்பதை மட்டும் மனதிற்கொண்டு பயனடைய அன்பாய் பேசும் பண்புள்ள விலை மகளிரை விரட்டிடுக.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Push out the wanton women who approach with cunning smile for  their own gain. It's like a devil approach.
- MAHENDIRAN V
------------------
குறள் 913:
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விலை மகளிர், பொருளுக்காக மட்டும்  கட்டித் தழுவுவதென்பது, இருட்டறையில் இனம் தெரியா பிணத்தை தழுவுவதற்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of hugging of wanton woman only for money is like hugging an anonymous dead body in the dark room.
- MAHENDIRAN V
------------------
குறள் 914:
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அருட்பொருள் யாது என்று ஆராயும் நல்லோர்கள் அற்ப இன்பம் தரும் விலை மகளிரின் சிறுமையை விரும்ப மாட்டார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who are always thinking about the nature grace would never like the lust given by the silly wanton women.
- MAHENDIRAN V
------------------
குறள் 915:
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கற்றறிவும் பட்டறிவும் பெற்ற பெரியோர் விலை மகளிரின் அற்ப சுகத்தை விரும்ப மாட்டார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have knowledge learned through experience and academy would never like the silly lust.
- MAHENDIRAN V
------------------
குறள் 916:
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அழகையும் திறமையையும் காட்டி செருக்குடன் ஈர்க்கும் விலை மகளிரிடம், ஒழுக்கமே உயர்வு எனும் பெரியோர் மயங்க மாட்டார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who think always that only morality is great would never be attracted by the fake pretty wanton women who act proudly.
- MAHENDIRAN V
------------------
குறள் 917:
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதை  நிலை நிறுத்த தெரியாத மதிகெட்டோர் தான் விலைமகளிரின் விற்பனையில் வீழ்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ignorants who do not know to stabling the mind would fall on the sales of wanton women.
- MAHENDIRAN V
------------------
குறள் 918:
ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதையும்  ஆராய்ந்து நோக்கா அறிவிலார், விலைமகளின் வஞ்சனை அணைப்பை மாய மயக்கம் என்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the ignorants who do not know to examine which is right and false would say that the hug of wanton woman is a pleasant dizzy.
- MAHENDIRAN V
------------------
குறள் 919:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வரையறை இல்லா விலைமகளிரின் மென்மையான தோள்களில் தீ மக்கள் சாய்ந்து கிடப்பது நரகத்தில் இருப்பதற்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Being laid of illy people on the soft arms of immoral-wanton women is equallent to being laid in the hell.
- MAHENDIRAN V
------------------
குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கள்ளம் கபடம் கொண்ட பெண்ணிடமும், கள், சூது இவைகளிடமும் நாட்டம் கொண்ட மனிதர்கள் மரியாதை கெட்டவர்களாவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People those who are eager to be with the woman who has characteristics like lie, hypocrisy, and drugs, gambling are known as disrespected men.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


திருக்குறள். அதிகாரம் 91. பெண்வழிச் சேறல் CHAPTER 91. THE EFFECTS OF DOMINATION OF FEMINISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 91.
பெண்வழிச் சேறல்
CHAPTER 91.
THE EFFECTS OF DOMINATION OF FEMINISM
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 901:
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லறம் முக்கியம் தான் என்றாலும், மனைவியின் வாக்கு படியே நடக்கும் ஒருவன் தன் செயலில் சிறப்பாக பணியாற்றிவிடுவான் என்று சொல்ல முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although Living kindly with wife is important, it is not possible to say that a man who obeys his wife's words will do well in his work.
- MAHENDIRAN V
------------------
குறள் 902:
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கடமையேதும் ஆற்றாது மனைவியின் பெண்மையே பெரிது என்றிருப்பவனின் ஆக்கங்கள் வெட்க்கத்துக்குறியதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The prides earned by one is shameful if the one thinks that only his wife is prime without doing his duties to the society.
- MAHENDIRAN V
------------------
குறள் 903:
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நலம் தரும் என்று எண்ணி, இல்லத்தரசியிடம் மிகவும் தாழ்ந்து நின்று வாழ்பவன் நல்லோர் முன் நாணி நிற்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who thinks that it is good and lives very lovely to the housewife will stand shamefully in front of the good people.
- MAHENDIRAN V
------------------
குறள் 904:
மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியிடம் அஞ்சி அதன் பிரதிபலன் நன்மையாகும் எனில் அது நன்றே. ஆயினும் அது பாராட்டத்தக்கது அல்ல.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although obeying wife's words is good and its reputation seems to be beneficial, it is not appreciable.
- MAHENDIRAN V
------------------
குறள் 905:
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியின் சொல்லுக்கு பயந்து நடப்பவனுக்கு, நல்லோர்க்கு நற்செயல் செய்யும் வாய்ப்பு கிடைக்காது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who is afraid of his wife's words will not have the opportunity to do virtual helps to society.
- MAHENDIRAN V
------------------
குறள் 906:
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்
அமையார்தோ ளஞ்சு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியின் அன்பு இனிமை- இவற்றை மட்டும்  விரும்பி ஒருவர் தேவர்கள் போல் வாழ்ந்தாலும், அவர் சமூகத்தில் தன் பெருமையை இழப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only wife's love is sweet- even if one lives like heaven by thinking only this way of life is right, he will lose his pride in society.
- MAHENDIRAN V
------------------
குறள் 907:
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவி தன் ஏவலினால் கணவனின் ஆளுமையில் பங்கு கொண்டு பெருமை கொள்வதை விட, வெட்க்கம் அடக்கம் தன்மையை காட்டி பெருமையடைவதே சிறப்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To a house wife, Rather getting prides by showing shyness and obedience is greater than getting prides from her husband's brave activities that are done because of her directions.
- MAHENDIRAN V
------------------
குறள் 908:
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங் கொழுகு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனைவியே எல்லாம் என்று அன்பொழுக வாழ்பவன், நட்புக்கும் உதவி செய்ய மாட்டான், நல்லோர்க்கும் நற்பணியாற்றமாட்டான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who lives in love that his wife is everything, would not forward to help to his friends and any other good people.
- MAHENDIRAN V
------------------
குறள் 909:
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெண் பேச்சு கேட்டு நடப்பவர் அறச்செயல்கள் செய்யமாட்டார். இவரால் பொருள் உதவியோ அல்லது பிற உதவியோ பிறர்க்கு செய்ய முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The one who listens to female's speech cannot do any virtual deeds. Also he cannot do any kind of assistance to others.
- MAHENDIRAN V
------------------
குறள் 910:
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன்கு சித்திக்கும் எண்ணமும் பெருஞ்செல்வமும் பெற்றிருப்போர் மனைவியின் சொல் கேட்டு நடக்க விரும்ப மாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who are well in thinking for good and being financially well would not want to listen to their wives' words.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Sunday, 30 January 2022

திருக்குறள். அதிகாரம் 90. பெரியாரைப் பிழையாமை CHAPTER 90. NOT TO BLAME PERSONS THE GREAT 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 90.
பெரியாரைப் பிழையாமை
CHAPTER 90.
NOT TO BLAME PERSONS THE GREAT
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 891:
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்து முடிக்கும் வல்லோரின் ஆற்றல் திறமையை பார்த்து இகழாமல் போற்றுதல் வேண்டும். அவ்வாறு போற்றுபவரே அறிவிற்சிறந்தவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One must praise, instead of criticising, ones who do their work that is done well towards their goal. Only then, the one who praises is the person the great.
- MAHENDIRAN V
------------------
குறள் 892:
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா இடும்பை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவிற் சிறந்த பெரியோரை மதித்து வணங்காவிடின், அப்பெரியோர்களாலேயே மதியார்க்கு துன்பம் வரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's must to respect and obey the rythotrical scholars. If not, would cause miseries a lot to them from the scholars at any way.
- MAHENDIRAN V
------------------
குறள் 893:
கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையை அழிக்கும் வல்லவரை பழித்து பேசுபவன், நீதி நூல்களுக்கு புறம்பாக நடந்து கொள்கிறான் என்றர்த்தம். தன் அழிவை அவனே தேடிக் கொள்கிறான் என்றும் அர்த்தம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one blames the ones who do powerfully some acts against enemity, it means that he goes against the principles of matters written in the epics. Also it means that he earns destruction for himself.
- MAHENDIRAN V
------------------
குறள் 894:
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்
காற்றாதார் இன்னா செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மூன்று வகை திறமும் படைத்த வலியோர்க்கு வலிமையில்லாதோர் தீங்கு செய்தால், தனக்கான தீமையை தானே தேடிக் கொள்பவராவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the weak persons do harm to those who have three kinds of talents, it means that the weak persons seek his own evil.
- MAHENDIRAN V
------------------
குறள் 895:
யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரசனின் கடும் கோபத்துக்கு உள்ளானவன் இவ்வுலகில் எங்கு சென்றாலும் அவன் உயிர் வாழ வாய்ப்பே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one earns a severe anger from his king, he can never be alive wherever he wishes to move.
- MAHENDIRAN V
------------------
குறள் 896:
எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தீயில் எரிந்து காயப்பட்டவன் கூட தப்பித்துக்கொள்ள முடியும். ஆற்றல் நிறைந்த வல்லோரிடம் பகைத்துக் கொண்டவன் பிழைப்பதென்பது அரிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even someone who has been burned to death too can escape. But It is hardly to survive for a person who hates the powerful wisdomed.
- MAHENDIRAN V
------------------
குறள் 897:
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குணம் நிறைந்த நல்லோரை ஒருவன் பகைத்துக் கொண்டால், அவனிடம் நிலைத்திருக்கும் பொருள் பணம் எல்லாம் வீணாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a person hates a good hearted ones, all the material money that he has solidly is wasted.
- MAHENDIRAN V
------------------
குறள் 898:
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலை போல் ஓங்கி நிற்கும் பெரியோரை அழிக்க நினைக்கும் ஒருவனின் புகழ் பொருள் குடி அனைத்தும் கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reputation, wealth and entire family of someone who thinks of destroying great persons who rises like a mountain will ruin.
- MAHENDIRAN V
------------------
குறள் 899:
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயரிய கொள்கை கொண்ட ஆற்றலுடைய வல்லோர் சினம் கொண்டால், ஒரு அரசனின் அடக்குமுறை ஆட்சி கூட அழிந்து போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even the tyrannical rule of a king too will be destroyed if the mighty warriors with high policy get angry.
- MAHENDIRAN V
------------------
குறள் 900:
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தவ வலிமை மிகுந்து வலிமை பெற்ற பெரியோர் சீறி எழுந்து சபித்தால், அரண் படை பொருள் நிறைந்திட்ட அரசனும் அழிந்து போவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a man of great strength rises up and curses severely, the king, who is full of bulwark material, would also get ruined.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


திருக்குறள். அதிகாரம் 89. உட்பகை CHAPTER 89. INTERNAL ENEMIOUSNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 89.
உட்பகை
CHAPTER 89.
INTERNAL ENEMIOUSNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 881:
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிழலும் நீரும் துன்பம் தராத வரை அவை  நல்லவையே அதுபோல் சுற்றமும் நட்பும் தொல்லை தராதவரை நல்லவர்களே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Shadow and water are good as long as they do not cause misery as well as relatives and friendship as long as they do not cause trouble.
- MAHENDIRAN V
------------------
குறள் 882:
வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் என பறைச்சாற்றி பகைமை கொள்வோரிடம் கூட பயம் கொள்ள வேண்டியதில்லை, நண்பர் என்று சொல்லி நயவஞ்சகம் செய்வோரிடம் தான் எச்சரிக்கையாய் இருந்தல் வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no need to be afraid of those who frankly claim to be enemies, but should be careful to those who deceptively pretend to be friends.
- MAHENDIRAN V
------------------
குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடனிருந்து உறவாடி அசரும் நேரத்தில் பகை செய்வோர், களி மண் பானை உருவாகி வரும் நேரம் அருத்தெறியும் கருவிக்கு ஒப்பாவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who are being with us and behaving as a silent enemies are equallent to a kind of tool which dissects the clay pot when it is being made.
- MAHENDIRAN V
------------------
குறள் 884:
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மணம் திருந்தா உட்பகை உறுதியாக உள்ளிருந்தால், வந்த நட்பும் விலகும் வரும் நட்பும் கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is an internal issue strongly in a domain or at a family, existing friendship would go away and the coming friendship too would be spoiled.
- MAHENDIRAN V
------------------
குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உறவுமுறையில் உட்பகை உடனிருக்கும் நிலை ஏற்பட்டால், உயிர் போகும் வரை அப்பகை உபத்திரவம் தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is any crack in the intimacy in the internal relationship, it will cause a big misery till the one is breathing last.
- MAHENDIRAN V
------------------
குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒற்றுமையாய் இருந்தவர் ஒட்டாமல் பகைக்கொண்டால், அழிவு வரும் நிலையை அகற்றுவது அரிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the one who was cooperative hate unfortunately, it is rare to eliminate the state of destruction in life.
- MAHENDIRAN V
------------------
குறள் 887:
செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செப்புடன் மூடி இணைந்திருப்பது போல் தோன்றினாலும் மூடி விலகி விழாது என்றில்லை அது போல் தான் உட்பகையும் நட்பாய் நடித்து இறுதியில் நச்சாய் விளங்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if the lid appears to be attached to the copper, can't say that the lid does not fall off, just like that, the pretending, internal relationship would be known as toxic in final.
- MAHENDIRAN V
------------------
குறள் 888:
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொரு
துட்பகை உற்ற குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரம் தொடர்ந்து தேய்க்குமானால் இரும்பும் தேய்ந்து போகும். அது போல் தான் உட்பகை கொண்ட குழுமம் வலிமையிழந்து போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a saw (tool) is constantly rubbing an iron, the iron too would get rubbed. Likewise, a domain or a family or an emperor would get weakened if there is snow war internally.
- MAHENDIRAN V
------------------
குறள் 889:
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எள்ளின் பிளவு போல் உட்பகை பிளவு சிறிதாக இருந்தாலும் அது பெரும் பிளவை ஏற்படுத்த வல்லது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although the internal issues seems to be as small as a sesame clevage, it can cause major fissures in the future.
- MAHENDIRAN V
------------------
குறள் 890:
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போ டுடனுறைந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரே வீட்டில் உடன்பட்டு வாழாதோர் வாழ்க்கை பாம்புடன் ஒரு குடிலில் பயந்து வாழும் வாழ்க்கைக்கு ஒப்பானது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Living in the same house with a buch of controversial issues is like living fearfully in a hut with a snake.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Saturday, 29 January 2022

திருக்குறள். அதிகாரம் 88. பகைத்திறம் தெரிதல் CHAPTER 88. KNOWING THE STRENGTH OF ENEMY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 88.
பகைத்திறம் தெரிதல்
CHAPTER 88.
KNOWING THE STRENGTH OF ENEMY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 871:
பகையென்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையுணர்வு பண்பற்றது. விளையாட்டாக கூட அதை விரும்பும் எண்ணம் வந்து விடக் கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The sense of hatred is immoral. One should not want this thought even playfully.
- MAHENDIRAN V
------------------
குறள் 872:
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வில் கொண்டு போராடும் வீரனிடம் பகைகொள்வதில் தவறில்லை. ஆனால் சொல்லாடல் கொண்ட அறிஞர்களுடன் பகை கொள்ளக் கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Do not fail to enmity with the warrior who fights with the bow. But do not quarrel with rhetorical scholars.
- MAHENDIRAN V
------------------
குறள் 873:
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
யாரையும் அண்டாது தன்னந்தனியே இருக்க விரும்புபவன் பித்தனிலும் பித்தன் ஆவான், பகைபவர்களையும் சம்பாதிப்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who wants to be alone and not to want support from anyone  is an utter mad and would earn enemies.
- MAHENDIRAN V
------------------
குறள் 874:
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையையும் நட்பாக்கி கொள்ளும் வித்தை தெரிந்தவன் உலகத்தால் போற்றப்படுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who knows the tactics for befriending enemies would be admired by the world.
- MAHENDIRAN V
------------------
குறள் 875:
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரு வெவ்வேறு பகைவர்கள் மன்னனை முற்றுங்கால், துணையில்லா பட்சத்தில் ஒரு பகையை நட்பாக்கி கொள்ளும் சூட்சுமம் தெரிதல் வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If two different enemies besiege the emperor, the king should have the subtlety of befriending an enemy incase of absence of support.
- MAHENDIRAN V
------------------
குறள் 876:
தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வரும் பகைவர், மன்னனுக்கு அறிந்தவரோ அறியாதவரோ, நாட்டில் தெளிவு நிலை இல்லையென்றால், பகைக்க வேண்டாம், பகையை முறிக்காமல் கிடப்பில் வைக்க வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The coming enemy, whether known or unknown to the emperor, should not be hated if there is no clarity in the country, and the enmity should be put to rest without breaking.
- MAHENDIRAN V
------------------
குறள் 877:
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவன் தன் துன்பநிலையை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. அது போல், தான் பலவீனமாக இருப்பின், பகைவன் அதை அறிந்து கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is not good for a king to share his misery with his friends. Likewise, if he is weak, he should not create the situation in which the enemy knows it.
- MAHENDIRAN V
------------------
குறள் 878:
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு அரசன் தன் ரகசியம் காத்து படைபலத்தை பெருக்கிக் கொண்டால், பகைவனின் செருக்கு/ஆணவம் தானாய் அழியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a king keeps his secret and multiplies his creativity, the  arrogance of the enemy would automatically disappear.
- MAHENDIRAN V
------------------
குறள் 879:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முள் மரத்தை வளரவிட்டால் ஆபத்து என்பதனால் முனையிலேயே கிள்ளி எறிவது போல், பகை வளர்வதற்கு முன்பே அதை  அடக்கியாள வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The eneminess must be suppressed before it grows up as if a thorn tree is pinched at the tip because it is danger if it grows up big.
- MAHENDIRAN V
------------------
குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆணவம் கொண்ட பகைவரின் படையை சிதிலமாக்க திராணியில்லாத மன்னன், மூச்சு விடுவதனால் மட்டும்  உயிரோடு இருப்பதாகிவிடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a king who doesn't have power to control and not able to collapse the arrogant enemy's troops, It doesn't mean that he is alive because of only he is breathing.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

திருக்குறள். அதிகாரம் 87. பகை மாட்சி CHAPTER 87. HOSTILITY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 87.
பகை மாட்சி
CHAPTER 87.
HOSTILITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 861:
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வலியாரை எதிர்த்தலை தவிர்ப்பது நலம். என்றாலும், எளியார் எதிர்க்கும்கால் எதிர்ப்பது நலம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is better to avoid to oppose the strong ones. However, it is better to oppose weak ones if they wish to oppose.
- MAHENDIRAN V
------------------
குறள் 862:
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மக்களின் அன்பும் இல்லை, அரவணைக்க துணையும் இல்லை, வலிமையான படையும் இல்லை- இவ்வரசன் ஆற்றல் மிக்க எதிரியை வீழ்த்துவது அரிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no love of the people, no support to comfort, no strong army- it is rare for this king to defeat a powerful enemy.
- MAHENDIRAN V
------------------
குறள் 863:
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அச்சம் மிகுதி, அறிவு இல்லை, அன்பும் இல்லை பண்பும் இல்லை, ஈகையும் இல்லை. - இவ்வரசன் எதிரியிடம் வீழ்ந்துவிடுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Having fear a lot, ignorant, no  love from people, no good character, no helping tendancy to people. - This king will fall to the enemy.
- MAHENDIRAN V
------------------
குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சினம் தவிர்க்க தெரியாத, மனத்தை கட்டுப்படுத்த தெரியாத அரசனை எந்நேரத்திலும், யாராலும்  வீழ்த்துவது எளிது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is easy for anyone, at any time, to overthrow a king who doesn't control his anger and doesn't know how to balance his mind.
- MAHENDIRAN V
------------------
குறள் 865:
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பழி மட்டும் நிறைந்திருந்து, நற்பண்பும் இல்லாது, நல்வழியில் செல்லாத அரசனை வீழ்த்துவதை இனிய தருணமாக கருதுவான் பகைவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The enemy would consider that it is a happy moment to overthrow a king who is full of crimes and without virtue and does not go in the right direction.
- MAHENDIRAN V
------------------
குறள் 866:
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அளவற்ற சினம் கொண்டு, மிகுதியாய் பேராசை பிடித்து ஆளும் அரசனை எதிர்கொள்ள, எதிரி விரும்பி செயல்படுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The enemy would act willingly to confront the ruling king who has an infinite anger and excessive greed.
- MAHENDIRAN V
------------------
குறள் 867:
கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூடவே இருந்து ஒவ்வாத வினை செய்து அழிவுக்கு வழிவகுக்கும் ஒருவனை பொருளழித்தாவது பகைவனாக்கிக்கொள்ள வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even by losing cost, one must make the enemy the one who causes the opposite reaction and leads to destruction being beside.
- MAHENDIRAN V
------------------
குறள் 868:
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனாம் ஏமாப் புடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குணம் கெட்டுப் போய் குற்றமும் பல புரிந்தவன், துணையின்றி தவிப்பான். ஆகையால் எதிரியிடம் அவன் ஏமாந்து நாட்டை இழப்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who has lost his good trait and committed many crimes, will suffer without co-operation from people. Therefore he would be very much disappointed by the enemy and would lose the nation.
- MAHENDIRAN V
------------------
குறள் 869:
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அஞ்சும் குணமும் அறிவற்ற நிலையிலும் இருக்கும் அரசனை வீழ்த்தும் பகைவன், போரில் ஆனந்தம் காண்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The enemy who overthrows the king who is fearful and ignorant would find joy in battle.
- MAHENDIRAN V
------------------
குறள் 870:
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்தவர் தவறு செய்தாலும், பழகிய நட்பின் இலக்கணமாய் அன்பு கொண்டவராயிருந்தால், பகைவனால் பாராட்டப்படுவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If he who left from one makes a mistake but has intensively love with him from whom he left would be appreciated by the one.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Friday, 28 January 2022

திருக்குறள். அதிகாரம் 86. இகல் Chapter 86. HATING CHARACTERISTIC 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 86.
இகல்
Chapter 86.
HATING CHARACTERISTIC
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 851:
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எல்லா உயிர்களையும் சமமாக கருதாத  பண்பு ஒரு தீய குணமாகும். மனித உயிர்க்கு மற்ற உயிர்கள் மாறுபட்டது என்பது இகல் ஆகும். இது ஒரு வஞ்சனை குணமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The characteristic of not treating all living things equally is an evil trait.  This type of character means that human life is different from other living things. This is a kind of is a treacherous characteristic.
- MAHENDIRAN V
------------------
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தம் கருத்தோடு ஒவ்வாத ஒரு வினையை ஒருவர் செய்யுங்கால், அவ்வேற்றுமையை கருதி அவருக்கு துன்பம் தருதல் கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one commits an act contrarily to our own opinion, we should not make misery to him by means of different opinion.
- MAHENDIRAN V
------------------
குறள் 853:
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் மாறுபட்ட கருத்தை உடையவராதலால் அவர் மீது வெறுப்பு காட்டும் புத்தியை ஒருவர் அகற்றிவிட்டால் அவரின் புகழ் கூடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a person gives up the mind that hates one because of his different opinion, the person's reputation would raise up.
- MAHENDIRAN V
------------------
குறள் 854:
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவருக்கு அடுத்தவர் மீது காட்டும் வெறுப்பே பெருந்துன்பமாகும். அத்துன்பத்தை நீக்கிவிட்டால், ஈடில்லா இன்பம் வந்துசேரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The big suffering is the hatred of one person over another. If such suffering is removed from the mind, pleasure will cummulate immeasurably.
- MAHENDIRAN V
------------------
குறள் 855:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் மீது வெறுப்பை உமிழாமல் சாய்ந்தொழுகும் பண்பை பெற்று விட்டால், வல்லோரையும் வெல்வராகிவிடுவார் அவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one acquires the habit of leaning on someone's thoughts (but it should be the right one) without spitting hatred on another, he will become a winner over the world.
- MAHENDIRAN V
------------------
குறள் 856:
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மாறுபட்ட கருத்துடையவரிடம் வெறுப்புடன் வாழ்ந்து வென்றுவிடலாம் என்று எண்ணி வாழ்பவரின் வாழ்க்கை விரைவிலேயே கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The life of a person who thinks that he can live and win with hatred towards a person who has different opinion will soon be ruined. (This matter is depending upon the good quality of the opinion the other person)
- MAHENDIRAN V
------------------
குறள் 857:
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையுணர்வும் வெறுப்பும் கொண்டோர், அதை விட்டால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்கிற நீதியை அறியாதவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have hatred and enmity are ignorant of the justice that can only succeed in life if it is left out.
- MAHENDIRAN V
------------------
குறள் 858:
இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாங் கேடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெறுப்பு உமிழ்ந்து வாழும் பண்பிற்கு எதிராக நடப்பது இனிமைக்கு வழிவகுக்கும். இல்லை, அதுவே சரியென்று வாழ்வோரின் வாழ்வு கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Living against the habit of spewing hatred can lead to sweetness. The life of one being against this said principle would be collapsed soon.
- MAHENDIRAN V
------------------
குறள் 859:
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆக்கம் நிறைந்து வாழ்பவர் இகல் பண்பை நோக்க மாட்டார். மாறாராக இகல் பண்பை அனைத்துக்கொண்டால், துன்பத்தை வரவேற்கிறார் என்றர்த்தம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The one who lives full of creation will not look at the character of hatred. On the contrary, if he looks at the same, that means that he welcomes suffering himself.
- MAHENDIRAN V
------------------
குறள் 860:
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இகல் எனும் பகையுணர்வு வாழ்க்கை, அல்லலுக்கு வழிவகுக்கும். இகல் இல்லாத வாழ்க்கை புகழ் எனும் பெருமை தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The life of the one having hating characteristic will lead one to misery full life. Life without such illy character gives glory and  fame.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Wednesday, 26 January 2022

அதிகாரம் 85. புல்லறிவாண்மை Chapter 85. THE STANCES OF FOLLYNESS (IGNORANCE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 85.
புல்லறிவாண்மை
Chapter 85.
THE STANCES OF FOLLYNESS (IGNORANCE)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 841:
அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உலகிலேயே பெரிய இல்லாமை என்பது அறிவில்லாமை தான். அறியாமையை மிஞ்சிய இல்லாமை எதுவும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The greatest lackness in the world is of course ignorance. There is nothing lacking beyond ignorance.
- MAHENDIRAN V
------------------
குறள் 842:
அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவில்லாதவன் தரும் கொடை சிறப்பிற்குரியது அதை பெருபவன் பெறும் பேறு பெற்றவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The prise given by the ignorant is special one. And the one who receives it is the one who has done penance.
- MAHENDIRAN V
------------------
குறள் 843:
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவில்லாதவன் தான் தன்னைத்தானே வன்மையாக துன்புறுத்திக்கொள்வான். பகைவன் கூட அவ்வாறு அவனை துன்புறுத்த முடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only ignorant would persecute himself severely. Even the enemy too cannot persecute him in such a way.
- MAHENDIRAN V
------------------
குறள் 844:
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெண்மையின் (அறிவின்மையின்) உள் அர்த்தம் என்னவென்றால், தனக்குத்தானே தன்னை அறிவாளி என்று பீற்றிக்கொள்வதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The actuy meaning of ignorance is to praise oneself very much proudly as intelligent.
- MAHENDIRAN V
------------------
குறள் 845:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கல்லாததை கற்றது போல் நடிப்பர் அறிவிலார். போதாதென்று, அரைகுறையாக கற்றவைகளிலும் வீணான சந்தேகத்தை கிளப்பிவிடுவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ignorant would pretend that he has learned a lot. Moreover, he would raise doubts unnecessarily from his little learned.
- MAHENDIRAN V
------------------
குறள் 846:
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றம் என்று அறிந்த பின்பும் அதை நீக்கா தன்மை, உடலை மறைக்க உடை உடுத்துவதற்கு முரணானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if knowing that it is wrong and being not to try to remove such wrong is contrary to wearing clothes to cover the body.
- MAHENDIRAN V
------------------
குறள் 847:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடையவர்களின் கூற்றை ஏற்று நடக்காத அறிவிலியின் செயல், தனக்கு தானே துன்பத்தை தேடிக் கொள்வதற்கு சமமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The act of ignorance that does not accept the sayings of the wise is equallent to seeking misery for oneself.
- MAHENDIRAN V
------------------
குறள் 848:
ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தானும் திருந்தாது, பிறர் கூறும் நற்கூற்றுகளையும் ஏற்க தயங்கும் அறிவிலாதவன் உயிர்விடும்வரை நோயை பெற்றவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
An ignorant person who does not change himself and refuses to accept the good doctrines (advices) of others is a person who gets sick till he dies.
- MAHENDIRAN V
------------------
குறள் 849:
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுள்ளவனை அறிவற்றவன் என்பதோடல்லாமல், தான் தான் அறிவுள்ளவன் என்று வாதிடுவான் அறிவற்றவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ignorant would not only argue a wise is ignorant but also he would strongly argue that only he is wiser than any other.
- MAHENDIRAN V
------------------
குறள் 850:
உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இருக்கிறது என்று உலகமே அறிந்த பின்பும் அது இல்லை என்று வாதிடும் அறிவற்றவன் பேய்க்கு சமமானவன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When even the world says a thing is existing, If an Ignorant guy strongly argues that is not existing, he is equallent to demon.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Tuesday, 25 January 2022

அதிகாரம் 84. பேதைமை CHAPTER 84. THE STANCE OF IGNORANCE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 84.
பேதைமை 
CHAPTER 84.
THE STANCE OF IGNORANCE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 831:
பேதைமை என்பதொன் றியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வருவாயை விட்டு விட்டு வராததை தேடி அலைவதே அறியாமை எனப்படுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Instead of looking for the sources of revenue, searching for something for uncoming one is known as stupidness.
- MAHENDIRAN V
------------------
குறள் 832:
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தனக்கு ஒவ்வாத/தன்னால் செய்ய இயலாத  விஷயங்களில் கவனம் செலுத்தி நேரம் செலவழிப்பதே அறியாமையிலும் அறியாமை ஆகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Doing an act that is completely apart from one's skill or doing an inappropriate act and wasting the time is the prime ignorance of ignorance.
- MAHENDIRAN V
------------------
குறள் 833:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெட்கப்பட வேண்டிய விஷயங்களுக்கு வெட்கப்படாமலிருத்தல், விரும்பியவற்றை நாடாதிருத்தல், அன்பு என்றால் என்ன என்று அறியாதிருத்தல், காக்க வேண்டியவற்றை காத்துக்கொள்ள தவறுதல்-இவையே அறியாமையின் சிறப்பியல்புகள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What the principles of ignorance are, 'Being not to shy for an act for what one must shy; Being not to be trying to get one on which one is interested; The stance of not knowing the meaning of kindness, and the stance of failing to protect one which must be protected.
- MAHENDIRAN V
------------------
குறள் 834:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நூல்கள் நிறைய படிப்பர்; அதன் பொருள்களையும் அறிவர்; பிறருக்கும் அறிவுரை கூறுவர்; ஆனால் தன் வாழ்க்கையில் அதை கடைபிடிக்க மாட்டார்- இவரை போல பேதையர் (அறிவிலி) உலகில் வேறு யாரும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One would be well literate by reading books a lot; he would be good in meanings; would advise to others; but would not follow those principles in his life. - Can you see any other ignorance as he is?
- MAHENDIRAN V
------------------
குறள் 835:
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவற்ற செயல் செய்வோர்க்கு, இப்பிறப்பு என்றில்லை, ஏழு பிறவி எடுத்தாலும் அதன் துன்பத்தின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To those who do ignorant activities, misery would be tending not only in this birth but also in his seven births.
- MAHENDIRAN V
------------------
குறள் 836:
பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த வழி எதுவென அறியாது செயலாற்ற துவங்குபவனின் செயலும் பாழாகும் அவனும் கெடுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who starts a work without knowing which is the best way to do would be spoiled, also his work would be collapsed.
- MAHENDIRAN V
------------------
குறள் 837:
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவிலாதோர் திரட்டும் செல்வம் சம்மந்தமில்லாதவர்களால் அனுபவிக்கப்படுமானால், அவன் உற்றாரும் உறவினரும் வருந்தி அழுவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When the wealth earned by an ignorant man is enjoyed by anonymous, the relative circle of the ignorant person would be worried out and crying.
- MAHENDIRAN V
------------------
குறள் 838:
மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பேதையின் கையில் ஒரு அரும்பொருள் கிட்டிவிட்டால்,  அதை பயன்படுத்தும் அறிவு இல்லாததனால், கள் உண்ட பித்தன் போல் கூத்தாடுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If an enormous wealth or thing is found to an ignorant guy, since he doesn't know how to utilise it, he would be jumping from the earth to sky like a drunken mad person.
- MAHENDIRAN V
------------------
குறள் 839:
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவற்றவர்களுடன் நட்பு பெறும் சூழ்நிலை துன்பமேதும் தராது என்றாலும், இழப்பதனால் இன்பம் ஒன்றும் பறிபோய்விடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though no misery would tend if one makes an ignorant as a friend, no pleasance would go away if one quits him from friendship.
- MAHENDIRAN V
------------------
குறள் 840:
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மெத்த படித்த சான்றோர் கூடத்தில் பேதை ஒருவன் நுழைவதென்பது, கழுவாத காலுடன் படுக்கையில் ஒருவன் நடப்பது போன்றதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The stance of ignorant person's entering into the domain of literate people is equallent to a guy is walking on the bed without washing the feet.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Monday, 24 January 2022

அதிகாரம் 83. கூடா நட்பு CHAPTER 83. THE FRIENDSHIP THAT NOT TO BE JOINED 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V) 📖📖📖📖📖📖📖📖

அதிகாரம் 83.
கூடா நட்பு
CHAPTER 83.
THE FRIENDSHIP THAT NOT TO BE JOINED
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 821:
சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெளியுலகிற்கு நட்பாய் இருப்பது போல் காட்டி உள்ளுக்குள் வெறுப்புடன் பழகும் நட்பு, ஒரு பொருளை தாங்குவது போல் தாங்கி, அப்பொருளை வெட்ட தாங்கும் பட்டடை என்ற பொருளுக்கு ஒப்பானதாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship that shows happiness in out and keeping hatred inside is equallent to the thing that is used as the basement wood for cutting a thing.
MAHENDIRAN V
------------------
குறள் 822:
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இனிதாய் பழகுவதாக பாசாங்கு காட்டி உள்ளார்ந்து விரும்பாத நட்பு, பதுமைப்பெண் போல் அலங்கரித்து பாலியல் செய்யும் பெண்ணை போலாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship that pretends like a pleasant manner and keeping worst aim inside is like the stance of a pretty woman who does the commercial lust work.
MAHENDIRAN V
------------------
குறள் 823:
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன்கு கற்றுணர்ந்தோர் நட்பாய் பெற வாய்ப்பு கிட்டினால், அவர் கருத்தொற்றுமை இருந்தாலொழிய நட்பாய் தொடர்வது அரிது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is getting a well literated one as a friend, if there is no similar frequency between two, hardly to resume such friendship.
MAHENDIRAN V
------------------
குறள் 824:
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகத்தில் பொலிவும் சிரிப்பும் காட்டி, உள்ளத்தில் வஞ்சனை குணம் இருந்தால், அவர் நட்பை பெற அஞ்சவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one behaves pleasantly as a friend but having hypocrisy inside as a trait, one has to be afraid of having him a friend.
MAHENDIRAN V
------------------
குறள் 825:
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதளவில் ஒத்து வராதவரை அவர் எப்பேற்பட்டவராக இருந்தாலும், அவரை நம்பி ஒரு செயலில் இறங்குதல் கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no similar thoughts of one with a friend whom he is behaving and whoever he is, he shouldn't dare to do a work believing him.
MAHENDIRAN V
------------------
குறள் 826:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லவர் போல் நடித்து அறிவுரை கூறி பழகும் நட்பு, பகைச் சொல் அவர் பேசும் பொழுது அவரது தன்மை வெளிப்பட்டு விடும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The real face of a friendship that pretends like a good man and advising us would be known when such guy expresses illy thoughts.
MAHENDIRAN V
------------------
குறள் 827:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் வணக்கமாக பேசுவது, குறி வைத்து அம்பு எய்துவதற்கு வில் வலைவது போலாகும். ஆதலால் பகைவரின் அவ்வணக்கத்தை நம்பி விடகூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
If an enemy is speaking with salutation, that is like a bow is bending more for shooting by an arrow. So, such poliet of the enemy shouldn't be believed at any situation.
MAHENDIRAN V
------------------
குறள் 828:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் கை கூப்பி வணங்கினாலும் கொலைக்கருவி அக்கைக்குள் ஒளிந்திருக்கும். பகைவர் விடும் கண்ணீரும் அப்படித்தான். தற்காப்புடன் இருந்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an enemy bows by closing palms, killing-weapon might be hidden inside. The tears of the enemy too are like that. Has to be defensive.
MAHENDIRAN V
------------------
குறள் 829:
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பராய் சபையில் சிரித்து பேசி அகத்தில் வஞ்சம் கொண்டிருப்போரிடம், நாமும் அவ்வழியே சிரித்து மகிழ்ந்து நட்பை தொடர்ந்து, பழி பெறாதிருந்து நட்பை நலிவடைய செய்யவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
We too go ahead on the same way with the friend who pretends like a good friend and speaking prides of us to others on stage, and have to make such friendship slowly invalid.
MAHENDIRAN V
------------------
குறள் 830:
பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்
டகநட் பொரீஇ விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகைவர் நட்பு பாராட்டவருங்கால், நாம் மரியாதை நிமித்தம் புறத்தில் மகிழ்ச்சி காட்டி, உண்மைத்தன்மை அறியும்வரை அகத்தில் பகையை மறக்காமல் வைத்திருத்தல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
When the enemy wants to make  friendship with us, we should rejoice on the outside for the sake of respect and keep the hatred on the inside until knowing the truthfulness.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Sunday, 23 January 2022

அதிகாரம் 82. தீ நட்பு CHAPTER 82. Evil friendship 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 82.
தீ நட்பு
CHAPTER 82.
Evil friendship
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 811:
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இனிக்க இனிக்க பழகுபவராக இருந்தாலும், உள்ளத்தில் பண்பில்லாதவராயின், அந்நட்பை கைவிடுவது இனிதாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if a friend behaves sweetly all times but if he is immoral, one should quit him .
MAHENDIRAN V
------------------
குறள் 812:
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தனக்கு பயன் வேண்டும் சமயத்தில் நட்பாய் இருந்து பயனிலா சமயம் விலகும் நட்பு இருந்தும் ஒன்றுதான். இல்லாமல் போனாலும் ஒன்று தான்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Friendship that behaves only for his advantage and if he is being away at the time of one's misery, he should be avoided by one.
MAHENDIRAN V
------------------
குறள் 813:
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பை தூக்கியெறிந்து, பொருளுக்காக மட்டும் நட்பு பாராட்டுபவர், விலைமாதருக்கும் திருடருக்கும் ஒப்பானவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship that behaves only by minding money without love and kind is like the stance of commercial lust worker or robber.
MAHENDIRAN V
------------------
குறள் 814:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போரின் பொழுது, இக்கட்டான சமயத்தில் குதிரை வீரனை எகிரி தள்ளி விட்டு ஓடிடும் குதிரையை போன்ற ஒரு நட்பு, இருப்பதை காட்டிலும் அது இல்லாமல் தனிமையாய் இருந்தல் எவ்வளவோ சிறந்தது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Being alone is far better than having friendship that is being like a horse that runs away leaving Its cavalryman during war.
MAHENDIRAN V
------------------
குறள் 815:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விரும்பி அமைக்கும் நட்பு விரும்பாமல் செல்லுங்கால், அந்த சிறு புத்தி கொண்ட நட்பு இருப்பதை விட இல்லாமல் போவதே நலம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If we willingly make friendship with one but he quits us suddenly as a silly acts, such friendship is waste at all.
MAHENDIRAN V
------------------
குறள் 816:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவிலா அன்பர்களிடம் அளவிலா நட்புக் கொண்டிருப்பதை விட புத்திசாலியான பகைவனிடம் பகை பாராட்டுதல் கோடி நன்மை.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having eneminess with an intelligent enemy is crore times better than having friendship with an utter fool man.
MAHENDIRAN V
------------------
குறள் 817:
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நகைத்து உவந்து நயவஞ்சகமாக பழகும் நட்பு தரும் துன்பத்துடன் ஒப்பிடுங்கால், பகைவரின் துன்பம் பத்து கோடி மடங்கு நன்மையானதாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The misery given by an enemy is ten crore times better than the cunning misery that is given by a friendship who is behaving with hypocrisy with smile face.
MAHENDIRAN V
------------------
குறள் 818:
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு செயலை செய்து வெற்றி வரும் சமயத்தில் உள்ளே புகுந்து கெடுக்கும் நட்பை அவருக்கு தெரியாமலேயே விட்டொழித்துவிடல் வேண்டும். (கொடிய நட்பு இது)
வை.மகேந்திரன்

Explanation in English:
At the time of edge of the victory if a friend interferes and spoils such victory, one must leave out such friendship without his knowledge. (It's a cruel friendship)
MAHENDIRAN V
------------------
குறள் 819:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சொல்வது ஒன்று செய்வது வேறாக இருப்பவரிடம் உள்ள நட்பு, ஒருவரின் நடப்பில் மட்டுமல்ல, கனவிலும் கூட வந்து துன்பத்தை தரும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Having friendship with one whose talk is one and act is one would cause a big misery always and even during dreaming.
MAHENDIRAN V
------------------
குறள் 820:
எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எதிரே புகழ்ந்துரைத்து இன்பம் தந்து, சபையில் புறம்பேசி துன்பத்தை  உண்டாக்கும் நட்பை சிறிதளவு கூட அண்டவிடாமல் செய்திடல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship that speaks prides of us with us  but speaking consversely with others like back bite ought to be quitted in no time.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Saturday, 22 January 2022

அதிகாரம் 81. பழைமை CHAPTER 81. FAMILIARITY/ OLDNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 81. பழைமை
CHAPTER 81.  FAMILIARITY/ OLDNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 801:
பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாட்கள் மாறினாலும் எதுவும் மாறாமல் எதையும் மாற்றாமல் பழகும் நட்பே பழைமை எனப்படும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Although days are passing, behaving with one without changing anything and keeping deeply the intimacy on friendship is called true oldness or familiarity.
MAHENDIRAN V
------------------
குறள் 802:
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
குப்பாதல் சான்றோர் கடன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பன் உரிமையாய் ஒன்றை செய்வதே நட்பிற்கு இலக்கணம். அதை எண்ணி பெருமிதம் கொள்ளல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A thing done by a friend with rights is the purity of Friendship. One should most welcome such activity.
MAHENDIRAN V
------------------
குறள் 803:
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பாய் இருப்பவர் நமக்கு செய்வது ஏற்புடையதில்லை ஆயினும் நன்மைக்கே அது, அதை நாமே செய்தோம் என எடுத்துக்கொள்ளல் சிறந்த நட்பை பாதுகாத்தல் ஆகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an activity done by our friend is found to be not agreeable in our point of view, we should broadly take such activity as that was done by us and for us.
MAHENDIRAN V
------------------
குறள் 804:
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பாய் உள்ளவர், நாம் கேளாமலே உரிமையாய் ஒன்றை செய்யுங்கால் அதை விரும்பி ஏற்றுகொண்டால் நாம் அறிஞராய் ஆகிறோம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If an activity is done by our friend interfered without our plead, if we take that willingly, we are of course a genius.
MAHENDIRAN V
------------------
குறள் 805:
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பராக இருப்பவர் செய்தது வருந்தக்கூடியதானாலும் அதை தற்செயலாக உரிமையில் செய்து விட்டார் என்ற மனப்போக்கில் அதை எடுத்து கொள்ள வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even if an activity done by our friend causes some interruption to us, we should consider that such activity is done by him because of intimacy put on us.
MAHENDIRAN V
------------------
குறள் 806:
எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒழுக்கத்துடன், இடைவெளிவிட்டு பல நாள் பழகிய நட்பு இனிதாய் இருந்திட்டதால், அவரால் தொல்லைகள் வந்தாலும் கூட,  நல்லோர் அந்நட்பை கைவிடமாட்டார்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If the distanced and virtual friend's friendshipness is pleasant, good men will not give up his friendship even if meeting some troubles from him.
MAHENDIRAN V
------------------
குறள் 807:
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பரின் செயல் ஒருவேளை நமக்கு கேடாய் இருந்தாலும் நட்பின் பழைமையை கருதி நட்பை அவசரப்பட்டு நிறுத்திக் கொள்ள கூடாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
Even though our friend's activity causes some miseries unfortunately, we shouldn't break up the friendship with him because of considering the intimacy and familiarity put on him.
MAHENDIRAN V
------------------
குறள் 808:
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பர் பிழை செய்து அதை பிறர் வந்து சொல்ல, அதை கோளாமல் இருப்பவர் நல்லார். அந்நண்பர் பிழை செய்தது நன் நாளாக இருக்கலாம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one burns up about one's friend's fault to one, if the listener doesn't care of that, that's great. The day of fault done by him might be good to him.
MAHENDIRAN V
------------------
குறள் 809:
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பகையே இல்லாமல் தொன்றுதொட்டு தொடரும் நட்பை உலகம் உவந்து போற்றும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If a friendship is going on without struck for infinite years, the world will forward to applaud the stance.
MAHENDIRAN V
------------------
குறள் 810:
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெடுநாள் நண்பரவர் பிழை செய்தாலும் பொறுத்து, நட்பை தொடருங்கால் பகைவரும் இத்தன்மையை கண்டு பாராட்டுவர்.
வை.மகேந்திரன்

Explanation in English:
If one resumes the friendship with a long time friend patiently despite such friend is doing fault a lot, even enemy too would praise that stance.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Thursday, 20 January 2022

அதிகாரம் 80. நட்பாராய்தல் CHAPTER 80. WEIGHING FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 80.    நட்பாராய்தல்

CHAPTER 80.
WEIGHING FRIENDSHIP
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 791:
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லவரோ தீயவரோ ஒருவருடன் நட்பு கொண்டபின், விடுவது என்பது அரிதானதாகிவிடும். நட்பு கொள்ளும் முன் ஆராய்ந்து பார்த்து நட்பு கொள்ளல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
It's of course tough to leave out a friend who is good or bad. Therefore, it's important to distinguish a man in all respects for having him a friend.
MAHENDIRAN V
------------------
குறள் 792:
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கேடான நட்பு சாவிலும் கொண்டுபோய்விடும் ஆகையால் நன்கு நுணுக்கமாக பகுத்தாராய்ந்து ஒருவரை நட்பாக்கி கொள்தல் அவசியம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
A bad Friendship would bear us up to death sometimes. So distinguishing precisely a man to have friend is so necessary.
MAHENDIRAN V
------------------
குறள் 793:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குணம் குலம் பிறப்பு தரம் குற்றமிலா தன்மை இவையனைத்தையும் ஆய்ந்த பின்பே ஒருவரிடம் நட்பு பாராட்டவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Weighing one's trait, birth quality, and confirming whether he is crimeless or not is important to make him a friend.
MAHENDIRAN V
------------------
குறள் 794:
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பழிச்சொல் ஏதும் வாரா, வந்தாலும் அஞ்சி நாணுகின்ற நன்னடத்தையுள்ள நற்குடியில் பிறந்தவரின் நட்பை விலை கொடுத்தாவது பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Atleast by paying fee too to have one as a friend if he is born and bred from good circumstance, and who fears to do illy acts.
MAHENDIRAN V
------------------
குறள் 795:
அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறிய
வல்லார்நட் பாய்ந்து கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தவறிழைத்தால் அழ வைக்கும் அளவுக்கு கனத்த குரலில் கண்டித்து நல்வழிக்கு இட்டுச் செல்லும் நல்லோரை நட்பாக்கி கொள்ளல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One ought to make a good person as a friend who condemns strongly as if making cry while committing any fault that is against morality.
MAHENDIRAN V
------------------
குறள் 796:
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பின் பால் கிடைத்த நஷ்ட்டமானது பாடமாகி, மேலும் அதைப் போன்ற நட்பை தேடா அறிவு கிடைப்பது நன்மை தானே? ஆதலினால்
தீதிலும் ஒரு நன்மை உண்டு.
வை.மகேந்திரன்

Explanation in English:
An ill too get a gain. It means that if one gets one as a friend and getting loss of good will because of the friend, it is evil. He would never do such a fault in the future. That lesson is a gain.
MAHENDIRAN V
------------------
குறள் 797:
ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊதியம் என்பது இங்கு லாபம். அதாவது, அறிவிலிகளின் நட்பை உடனே துறப்பது ஒருவருக்கு பெரிய லாபமாகும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Earning means gain here. If one gives up idiots from his friend circle, that is an enormous gain of him.
MAHENDIRAN V
------------------
குறள் 798:
உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊக்கத்தை மங்கச் செய்யும் செயல்களை  செய்யாதிருத்தல் வேண்டும். துன்பம் வரும் பொழுது விலகிக்கொள்ளும் நட்பை விலக்கிவைத்துவிடவேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One should not do any actions that make dull one's effort likewise, one must give up the friends who leaves out on his suffering time.
MAHENDIRAN V
------------------
குறள் 799:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் கேடை சந்திக்கும் காலத்தில் விட்டு விலகிய நட்பை, இறக்கும் நேரத்தில் கூட அந்த வஞ்சனை செயலை மறக்க முடியாது.
வை.மகேந்திரன்

Explanation in English:
One can never forget a friend who leaves out at the the time of one's misery times, even at the time of dying.
MAHENDIRAN V
------------------
குறள் 800:
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்தும
ஒருவுக ஒப்பிலார் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மனதில் அழுக்கற்ற மானிடரையே நண்பராக்கி கொள்ள வேண்டும். அழுக்கு நிறைந்த அற்பர்களை விலை கொடுத்தாவது ஒதுக்கிடல் வேண்டும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
One must have a friend who doesn't have dirty in mind and heart. And one ought to give up ones in no time atleast by paying fee, who are found to be dirty and silly.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Wednesday, 19 January 2022

அதிகாரம் 79. நட்பு CHAPTER 79. FRIENDSHIP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

அதிகாரம் 79. நட்பு
CHAPTER 79. FRIENDSHIP
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR IN ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பை போல அரிதானது எதுவுமில்லை. இனிய நட்பு  அரிதான செயல்களுக்கு பெரிய காவலாக அமையும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
None can be compared to the state of friendship. And the deep friendship would protect one in all respects.
MAHENDIRAN V
------------------
குறள் 782:
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லோரிடம்/ அறிவுடையோரிடம் உள்ள நட்பு வளர்பிறை காலம் போன்று வளர்ந்து கொண்டிருக்கும் அல்லது வளர்த்துக்கொள்ளல் வேண்டும். தீயோரிடம் கொள்ளும் நட்பு, தேய்பிறை காலம் போன்று தேய்ந்து போகுதல் நலம்.
வை.மகேந்திரன்

Explanation in English:
The friendship with wisdom people would grow up like waxing crescent or has to raise up. And if the friendship with fools wans like the waning crescent, that's good.
MAHENDIRAN V
------------------
குறள் 783:
நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நன் நூல்களை தொடர்ந்து கற்பதனால் இன்பம் அடைவது போல் பண்பாளர்களுடன் பழக பழக மகிழ்ச்சி தானாய் கிடைக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
As if getting pleasance while reading good books, behaving to ones who have good characteristics would cause much happiness.
MAHENDIRAN V
------------------
குறள் 784:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிரித்து பேசி மகிழ்வதல்ல நட்பு. நட்புக்குரியவன் நெறிமுறை மாறினால் திருத்த முற்படுவதே சிறந்த நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
Friendship is not only for passing time by chating but turning him to good way if he fouls moralities.
MAHENDIRAN V
------------------
குறள் 785:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒத்த மனதும் ஒருமித்த கருத்தும் ஒரே யோசனையும் இருப்பதே ஆழ்ந்த நட்பு. ஆழ்ந்து பழகி அடிக்கடி சந்திப்பதனால் வருவதல்ல நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
Meeting often and speaking frequently is not meaning a good Friendship. But having similar frequencies and parellel thoughts  would make more depth in friendship. 
MAHENDIRAN V
------------------
குறள் 786:
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகம் மலர்ந்து பேசுவது பழகுவது அல்ல நட்பு. அகம் குளிர மகிழ்ச்சியில் மலர்ந்து திளைக்க வைப்பதே நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
Just smiling by face and speaking sweetly is not a deep friendship. Showing love enthuciasticlly is the real-icon of the good friendship.
MAHENDIRAN V
------------------
குறள் 787:
அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நண்பன், பழி வழியில் சென்றால் இழுத்து நல்வழி படுத்துவதும், விதி வழியில் தீமை கண்டால் அதில் பங்குகொள்வதே சிறந்த நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
The best friendship is that pulling back a friend to the right way if he fouls morality, and taking part with him if he falls in miseries due to fate.
MAHENDIRAN V
------------------
குறள் 788:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடை களைந்தால், உடனே கை சென்று சரி செய்வது போல், நண்பனுக்கு துன்பம் வந்து விட்டால் ஓடிச்சென்று உதவுவதே நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
As if the hand goes immediately to set right if the dress slips unfortunately, one should take rapid action to help to a friend if he is adversed.
MAHENDIRAN V
------------------
குறள் 789:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு பொழுதும் பிரியாது வேறுபாடும் காட்டாது ஒருவருக்கொருவர் உவகையில் உயர்ந்து நிற்பதே உண்மையான நட்பு.
வை.மகேந்திரன்

Explanation in English:
The state of not leaving with each other at any time and being indifferently and helping with each other passionately is the best friendship.
MAHENDIRAN V
------------------
குறள் 790:
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பின் தன்மையை அளவிட்டு பேசுவதும், உவகையின் காரணத்தை புகழ்ந்துரைத்து பழகுவதும் நட்பின் ஆழத்தை கெடுக்கும்.
வை.மகேந்திரன்

Explanation in English:
Measuring the depth of friendship and applauding with each other for their sharing help to one and another would damage the friendship.
MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE