Wednesday, 30 March 2022

திருக்குறள் அதிகாரம் 113. காதற் சிறப்புரைத்தல் CHAPTER 113. ADDRESSING THE FEATURES OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 113.
காதற் சிறப்புரைத்தல்
CHAPTER 113.
ADDRESSING THE FEATURES OF LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1121:
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலேயி றூறிய நீர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மென்மையாக பேசும் இவளது இதழ் சுரக்கும் அமுத நீர், பாலோடு தேன் கலந்தால் தரும்  சுவையை விட சுவையானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The weter secretes from the mouth of this angel who speaks so softly is tastier than the combination of milk and honey.
- MAHENDIRAN V
------------------
குறள் 1122:
உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு பிண்ணிபிணைந்தது என்றால், அவளுக்கும் எனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Is the relationship between body and soul spinned one or not? If it is spinned one, the love between me and her is also the same stand.
- MAHENDIRAN V
------------------
குறள் 1123:
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கண்மணிக்குள் ஒளிந்திருக்கும் பாவையே, நான் விருப்பும் அழகி வருகிறாள். நீ விலகிச்சென்று அவளுக்கு அங்கே இடம் தரலாமே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the beautiful angel who has hidden yourself inside the eyeball of me! The more pretty angel whom I love very much is coming. Vacate the place and let her stay there.
- MAHENDIRAN V
------------------

குறள் 1124:
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆபரணம் நிறைந்த அழகு பதுமையான இவள் என்னை தழுவும்பொழுது என் உடம்புக்கு உயிர் தருகிறாள். நீங்கும்பொழுது என் உயிரையே எடுத்துச் சென்றுவிடுகிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When this pretty who has worn ornaments hugs me, she offers soul to my body. When she leaves me, she has stolen my soul and gone.
- MAHENDIRAN V
------------------
குறள் 1125:
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒளி நிறை விழிகள் கொண்ட என் வேல் விழியாளை நான் என்றும் மறவேன். மறந்தால் தானே நினைத்துப்பார்க்க வேண்டும்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
I have never forgotten my glittering beautiful woman. Why need I remember her whereas I have never forgotten her, right?
- MAHENDIRAN V
------------------

குறள் 1126:
கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் கண்ணைவிட்டு அகலா பிரியமானவர் எம் காதலர். கண்ணை மூடித் திறக்கும் தருணத்திலும் என் கண்ணின் உள்ளேயே மயங்கி கிடக்கும் மதிநுட்பக்காரர் அவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My man won't go away from my eyes ever. The cleverest man would never leave even when I blink my eyes. He would always be sleeping inside of my eyes.
- MAHENDIRAN V
------------------

குறள் 1127:
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் கண்ணின் உள்ளேயே பரந்து கிடக்கும் என்னவர், நான் என் கண்களுக்கு மை தீட்டினால், மறைந்து போனால் என் செய்வேன்? என் விழியை அழகு செய்ய நான் மை தீட்டுவதில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I wouldn't draw my eyebrows for beautifying my eyes because, if my man who is living in my eyes  is suppressed due to such action, What would I do?
- MAHENDIRAN V
------------------
குறள் 1128:
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூடான உணவை நான் உண்ணுவதில்லை. என் அன்பிற்குரிய காதலர் என் நெஞ்சத்துள் வாழ்வதால், நெஞ்சம் வழிச்செல்லும் அச்சூடான உணவு அவரை சூடுபடுத்திவிட்டால் என் செய்வேன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
I don't use to take hot food, because my most loving man is dwelling inside my heart. If the hot food that goes near my heart burns him what would I do?
- MAHENDIRAN V
------------------
குறள் 1129:
இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் காதலர் என் விழியினூடே இருப்பதால், நான் இமைத்தால் அவர் தோன்றமாட்டார் என்பதால் நான் விழி மூடுவதில்லை. விழி மூடா நிலையை அவர் எனக்கு தந்துவிட்டதனால், அவரை அன்பற்றவர் என்கிறது இச்சமூகம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since my loving man is living in my eyes, if I blink my eyes he may not appear often. Hence I don't use to blink my eyes. Being so, the society blames him a loveless man as if he has made me not to blink my eyes!
- MAHENDIRAN V
------------------
குறள் 1130:
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சத்துள் எம் காதலர் நீக்கமற நிறைந்து வாழ்ந்து கொண்டிருக்கும்பொழுது பிரிந்து வாழ்வதாக இச்சமூகம் கூறுவது தான் வியப்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
While my man has permanently tended in my heart, what the society is criticising that we are separated is utter fault!
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com 
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited. 
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

திருக்குறள் அதிகாரம் 112. நலம் புனைந்து உரைத்தல் CHAPTER 112. TO ADDRESS BY GOOD WORDS. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 112.
நலம் புனைந்து உரைத்தல்
CHAPTER 112.
TO ADDRESS BY GOOD WORDS.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1111:
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மென்மைக்கு புகழ் பெற்றது அனிச்சம் மலர் தான். யார் இல்லை என்றது. ஆனால் அதை விட மென்மையானவள் என்னை வீழ்த்திய என் அவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The flower namely Aniccam is the icon for the softness. No more any second thought. But my woman is the softer than Aniccam.
- MAHENDIRAN V
------------------
குறள் 1112:
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலர்களை கண்டு மயங்கும் இதயமே, பலரும் கண்டு வியக்கும் மலர்களுக்கு ஒப்புமையான என் அவளின் கண்களை விடவா மலர்கள் பெரிது?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the heart who is inspired because of your looking at flowers! Are you sure that the flowers are more beautiful than the eyes of my woman?
- MAHENDIRAN V
------------------
குறள் 1113:
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் அவள், மூங்கில் போன்ற தோள்களுடையாள்; அவள் மேனி மாந்தளிரை போன்றது; முத்துக்கள் போன்ற பற்களுடையாள்; இயற்கை மணமே அவள் நறுமணம்; வேலை போன்ற விழிகளுடையவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She is the special. Her arms are like bamboo; her teeth are lined up like pearls; her structure looks like an infant mango plant; her nature smell is indeed a special fragrance; her eyes are of course like a lance.
- MAHENDIRAN V
------------------
குறள் 1114:
காணின் குவளை கவிழ்ந்து நிலனோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குவளை மலர்கள் என் அவளின் கண்களை பார்க்க நேர்ந்தால், நிச்சயம் அவைகள் தோற்றுப்போனதால் தலைகவிழும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a kind of flowers namely Kuvalai look at my angel's eyes, they would surely bow their heads to the land as if agreeing that they get failed.
- MAHENDIRAN V
------------------
குறள் 1115:
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அணிச்சம் மலர்களை காம்பு நீக்காமல் அணிந்தது தான் தாமதம், அவளது மெல்லிய இடை ஒடிந்தது. பறை முழக்கம் இனிதாக இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No sooner she has worn the Aniccam flowers with stems on her hair than her soft hib bowed. The rhythm too missed the pitch.
- MAHENDIRAN V
------------------
குறள் 1116:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இவளது முகத்தையும் நிலவையும் ஒருங்கே கண்டு விண்மீன்கள் எது அசல் என்று இனம்காண முடியாமல் தவிக்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
All stars in the sky get confusion to realise which is real and unreal. Because those are simultaneously looking at the moon and my angel's face.
- MAHENDIRAN V
------------------
குறள் 1117:
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலவோ தேயும் பின் வளரும். களங்கம் உண்டு நிலவுக்கு. என் தேவதையின் முகத்தில் அப்படியொரு களங்கம் என்றும் இருந்ததில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is waning and waxing occasions in the moon. It's a scratch to the moon. But there is no such a scratch to the face of my angel. So her face is greater than the moon.
- MAHENDIRAN V
------------------
குறள் 1118:
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலவே நான் சொல்வதை கவனி. ஒளி வீசும் வித்தையில் என் அவளின் முகத்தை நீ வென்றாயானால், நீ என்னை காதலிக்கலாம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh the moon. Listen to my words. If you defeat the face of my angel in flashing bright light, you may start to love me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1119:
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓ முழு நிலவே. மலர் போன்ற கண்களுடைய என் அவளின் முகத்தை பொலிவுப் போட்டியில் நீ வீழ்த்த வேண்டுமா? பலரும் காணும் வண்ணம் விண்ணில் நீ தோன்றுவதை நிறுத்தினால் மட்டுமே அது சாத்தியம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my dear full moon, Do you want to defeat the face of my angel who has eyes like flowers in the competition for glittering? It is possible only when you stop your visibility to all persons' sight.
- MAHENDIRAN V
------------------
குறள் 1120:
அனிச்சமும் அன்னத்தின் தூவியு மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அனிச்சம் மலரும் அன்னத்தின் இறகுகளும் மென்மையாயிருந்து என்ன பயன்? என் தேவதையில் மென்மையான பாதத்திற்கு அவைகள் நெருஞ்சி பழ முற்கள் போன்றவை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is gain even if the aniccam flower and the feathers of swam are so soft. Because they would stetch like thorn of  tribulus terrestris to my angel's feet if she steps on them.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Sunday, 27 March 2022

திருக்குறள் அதிகாரம் 111. புணர்ச்சி மகிழ்தல் CHAPTER 111. THE PLEASANCE OF BED-GAME OF COUPLE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 111.
புணர்ச்சி மகிழ்தல்
CHAPTER 111.
THE PLEASANCE OF BED-GAME OF COUPLE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1101:
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வளையல் அணிந்த இந்த பேரழகியிடம் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் வலிமை உண்டு. கேட்டு, பார்த்து, முகர்ந்து, உண்டு, தீண்டி மகிழும் இன்பம் இவளிடம் மட்டுமே உண்டு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only spouse can offer pleasance to all five senses. Her man can enjoy with her by hearing her honey words, by seeing her beauty, by inhaling her fragrance, by licking her body and by hugging her wholly.
- MAHENDIRAN V
------------------
குறள் 1102:
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல நோய்களுக்கு மருந்தில்லாமல் இருக்கலாம் ஆனால் இவள் தந்த இன்ப பிணிக்கு ஆபரணம் அணிந்த இவளே மருந்து.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There may be unfound medicines for some diseases but she who has worn the ornaments is the medicine for the pleasant disease that was offered by her attire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1103:
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணைவியாரின் தோளில் சாய்ந்து உறங்கும் பொழுது ஒருவனுக்கு கிடைக்கும் இன்பம் தாமரையில் உறங்கும் கண்ணனுக்கு கூட கிடைத்தாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even the lord who sleeps on the lotus bed too can't get the pleasance like one can easily get it when he is sleeping on the arms of his spouse.
- MAHENDIRAN V
------------------
குறள் 1104:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விலகினால் சுடுகிறது நெருங்கினால் குளிர்கிறது இவ்வொரு இன்பப்பெருக்கை இவள் எங்ஙனம் பெற்றாளோ!
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I'm leaving her, I feel heat more, when I near her I feel so cold. How did she obtain this miracle status with her to offer me?
- MAHENDIRAN V
------------------
குறள் 1105:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
விரும்பும் பொருள் விரும்பிய நேரத்தில் கிடைப்பது எத்தகைய இன்பம்? அத்தனை இன்பம் தருவது யாதெனில், மலரணிந்த மனைவியான மங்கையவள் தோள் மீது சாயும் பொழுது கிடைப்பதே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Won't one be surprised if he gets things whenever he wishes to get them? The same pleasance can be offered when he lays on the arms of his spouse.
- MAHENDIRAN V
------------------
குறள் 1106:
உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக்
கமிழ்தின் இயன்றன தோள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணைவியை தழுவும் பொழுது துணைவனும் அவளும் கிளர்ந்தெழக் காரணம், அவளது தோள் பெற்றிருக்கும் அமிர்தத்தை தவிர வேறென்ன?
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reason for getting stimulation for orgasm at the time of hugging state of couple  is nothing but the elixir gotten by her on her arms.
- MAHENDIRAN V
------------------
குறள் 1107:
தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இம் மாநிறப் பெண்ணை  தழுவுவதால்  கிடைக்கும் இன்பம், உழைப்பில் ஈட்டிய செல்வத்தை சுற்றத்துடன் வீட்டில் அமர்ந்து அனுபவிக்கும் இன்பத்திற்கு ஈடானது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The pleasance gotten during hugging this wheat colour angel is equallent to the pleasance gotten during eating and enjoying together with colleagues by one's own earning at home.
- MAHENDIRAN V
------------------
குறள் 1108:
வீழும் இருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காற்றும் புக முடியா அளவு துணைவியை இறுக கட்டி அணைத்து பெரும் இன்பம் துணைவிக்கும் துணைவனுக்கும் பேராணந்த நிலையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Hugging spouse so tightly even no gape even for air would cause the upmost lust to both husband and wife.
- MAHENDIRAN V
------------------
குறள் 1109:
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடலுக்கு பின் உடல்கள் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு கிடைக்கும் காம நிலை அவ்வாறு  செயல்பட்டோருக்கு கிடைத்த வரப்ரசாதம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The couple would surely be satisfied with upmost orgasm if they start to play the bed game after a playful quarrel. 
- MAHENDIRAN V
------------------
குறள் 1110:
அறிதோ றறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒவ்வொன்றையும் ஒருவர் அறிய அறிய, அவர் தான் அதை அத்தனை நாட்கள் அறியாமலிருந்ததை உணர்வார் அல்லவா? அது போல் துணைவியுடன் கூடும் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொன்றை புதிதாய் அறிவார் ஒருவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Doesn't one realise his unlearned state when he learns a thing newly? The same thing happens here. A couple would be learning every new thing everyday during their routine bed game.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Saturday, 19 March 2022

திருக்குறள். அதிகாரம் 110. குறிப்பறிதல் CHAPTER 110. RECOGNISING THE SIGN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)


திருக்குறள்.
அதிகாரம் 110.
குறிப்பறிதல்
CHAPTER 110.
RECOGNISING THE SIGN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1091:
இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இவளது பார்வை இரண்டு விஷயங்களை உணர்த்துகிறது. ஒன்று, ஏதோ ஒரு துன்பத்தை தர இருக்கிறாள். மற்றொன்று அத்துன்பத்தின் மூலம் இன்பம் என்கிற மருந்தை வழங்க இருக்கிறாள்
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her sight is signalling two things. One is that she is to offer a misery. The another one is that she is to offer a medicine namely pleasance through such misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 1092:
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது அந்த கள்ளப் பார்வை நிச்சயம் காமத்தின் உச்சத்தை தராமல் பாதியில் நிறுத்துவதாக தெரியவில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I predict that she would not stop in half of the way without offering the top most lust. Because her stealing sight is saying like that.
- MAHENDIRAN V
------------------
குறள் 1093:
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என்னை பார்த்ததும் நாணம் வந்து தலைகவிழ்ந்தாள். இதற்கு என்ன அர்த்தம்?  நிச்சயம் அது என் மீதான காதலுக்கு நீரூற்றுகிறாள். வேறென்ன?
- வை.மகேந்திரன்

Explanation in English:
When she looks at me she gets shy and bowed her head. Surely it means that she is watering for loving me, doesn't it?
- MAHENDIRAN V
------------------
குறள் 1094:
யானோக்கும் காலை நிலனோக்கும் நோக்காக்கால்
தானோக்கி மெல்ல நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் பார்த்தால், நிலத்தை பார்க்கிறாள். பார்க்காத பொழுது என்னை நாணம் மிகுந்த நகைப்புடன் பார்த்து மகிழ்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I see her she looks at the land. She looks at me with a shyfull pleasant smile when I don't see her.
- MAHENDIRAN V
------------------
குறள் 1095:
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் என்னை குறிவைத்து பார்க்காமல் ஆனால் நன்கு பார்த்து மகிழ்கிறாள் என்பது மட்டும் எனக்கு தெரிகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I clearly know that she flows her sight on me cheerfully but she pretends as if she doesn't see me  as a target.
- MAHENDIRAN V
------------------
குறள் 1096:
உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என்னிடம் அவள் பேசினாள். யாரோ எவரோ என்றாள். அது அவள் என் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்படைத்தன்மை என்பது மட்டும் நிச்சயம் தெரியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She talked to me like a stranger. She said that she was somebody else to me. But I realise that it is a transparent signal for love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1097:
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது பகை போன்ற பேச்சும் சினம் போன்ற பார்வையும் தோற்றத்திற்கு தான். உள்ளபடி அன்புக்காக ஏங்குகிறாள் என்பது தெரிகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her eneminess talk and angered sight are just an attire. But it really seems that she is yearning for love from me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1098:
அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அயலார் போல் அவள் பேசினாலும் பார்த்தாலும் நான் மீண்டும் அவளை பார்க்கும்பொழுது அவளது அக சிரிப்பு புறத்தில் அழகூட்டுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though she sees and talks like a stranger, when I see her again, her intensive smiling beautifies her full attire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1099:
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் என்னை அந்நியர் போல் பார்க்கும் தன்மை நாணமிகுதியால் ஏற்பட்டதாகும். நேர்மையான காதலின் வெளிப்பாடு இதுதான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of her strangerous looking style is caused of her shyness. In fact, this is the out put of the true love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1100:
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளும் நானும் கண்களாலேயே அனைத்தையும் பேசி முடித்துவிட்ட பிறகு வாய்ச் சொல் வார்த்தைகள் எதற்கு?
- வை.மகேந்திரன்

Explanation in English:
While she and I have finished up all our communication over our eyes, Is it necessary to talk verbally?
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Wednesday, 16 March 2022

திருக்குறள். மூன்றாம் பகுதி. அதிகாரம் 109. தகை அணங்குறுத்தல் CHAPTER 109. THE PRE-MATURED LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
மூன்றாம் பகுதி. 

அதிகாரம் 109.

தகை அணங்குறுத்தல்
CHAPTER 109.
THE PRE-MATURED LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1081:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
யார் இவள்? கம்மலும் மயக்கும் அழகும்! தெய்வமா மயிலா அல்லது பெண்ணா? மயக்கம் வருகிறது!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Who is she..? Has worn ear rings to mesmerize me? Is she Angel or peacock? She causes kiddiness!
- MAHENDIRAN V
------------------
குறள் 1082:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் பார்க்கும் பொழுதே அவள் பார்த்து வீசிடும் அந்த பார்வை அதீத சேனைக்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her sharpening sight when I see her is not alone. I predict that her sight is equallent to a numerous troops!
- MAHENDIRAN V
------------------
குறள் 1083:
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நமனை நான் கண்டறியேன். ஆனால் இவளது கூரிய பார்வையை கண்டபின்பே அறிந்தேன். பெண்ணுருவில் அவள் மயக்கும் கண்களால் என் உயிரை பறிக்காமல் பறிக்கும் பொழுது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I have never seen the god of death Yama. But now I'm seeing him by her attractive appearance that kills me without weapons but her sharpening eyes.
- MAHENDIRAN V
------------------
குறள் 1084:
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உருவத்தில் பெண்ணாக இருக்கிறாள். அவள் காணும் வியூகமோ உயிரை பறிப்பது போலுள்ளதே. என்ன ஒரு முரண்பாடு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She looks like a pretty woman but her style of eye sight seems to be killing me. What a state of controversy it is!
- MAHENDIRAN V
------------------
குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இவள் நமனா அல்லது கயல் விழியாலா அல்லது அழகு பதுமையா? குழப்பம் இல்லை. மூன்றும் தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Is she the god of death or she who has the eyes like fish or a pretty angel? No more second thought... She is all of those.
- MAHENDIRAN V
------------------
குறள் 1086:
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது புருவம் மீனைப்போல் வளைந்திருப்பதால் தான் வினை. அது வளையாமல் நேராக அமைந்திருந்தால் என்னை நேர் கொண்டு கொன்றிருந்திருக்கமாட்டாள்- வை.மகேந்திரன்

Explanation in English:
The problem is her eyebrows because they really kill me. It they weren't bowed and being straightened she would never kill me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1087:
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது நிமிர்ந்து நிற்கும் மார்பின் மேல் படர்ந்திருக்கும் பட்டாடை மதம் கொண்ட யானையின் முகப்படாம் போலுள்ளது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The cloths covered on her pretty boobs are looking like the cover-cloth of forehead of rutting elephant.
- MAHENDIRAN V
------------------
குறள் 1088:
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
படைகளத்தில் பகைவர்களை அஞ்சவைக்கும் என்னை, அவளது நெற்றியின் அழகு என்னை தோற்கவைக்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her prettiest forehead is defeating me who has scared almost all troops in the battle.
- MAHENDIRAN V
------------------
குறள் 1089:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்
கணியெவனோ ஏதில தந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளது பார்வையும் நாணமும் தான் விலையுயர்ந்த ஆபரணங்கள். செயற்கையாய் எதற்கு இவளுக்கு நகையலங்காரம்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Already she has worn the expensive ornaments such as her sharpened sight and shyness of her. Then why does she need to wear the artificial ornament namely jewels?
- MAHENDIRAN V
------------------
குறள் 1090:
உண்டார்க ணல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உண்ட பின் தான் காய்ச்சிய கள் போதை தரும். கண்டாலே போதை தரும் மருந்து காதலைத் தவிர வேறென்ன?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Liquor would lay one only after drinking it. But the love would lay down one just by the pretty sights.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Wednesday, 9 March 2022

திருக்குறள். அதிகாரம் 108. கயமை CHAPTER 108. TURPITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 108. கயமை
CHAPTER 108. TURPITUDE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1071:
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளத்தில் கயமை தனமும் உருவத்தில் இனிமையாகவும் தோன்றும் தன்மையை மனித இனத்தில் தவிர வேறு உயிரினத்தில் காணமுடியாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One cannot see this status at any living beings as it is seen in human habits that is the turpitude trait inside but sweety behaviour out side.
- MAHENDIRAN V
------------------
குறள் 1072:
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவலம் இலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நல்லவர் நன்மை தீமையை ஆராய்ந்து வாழ்வதாலும், கயவரோ எது பற்றியும் (நீதி நேர்மை) கவலைப்படாது வாழ்வதாலும் கயவர்கள் செல்வந்தர்களாக காணப்படுகிறார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituder looks always wealthy because they do not bother about justice at any situation whereas good people are afraid of justice.
- MAHENDIRAN V
------------------
குறள் 1073:
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கயவரும் தேவரும் ஒரு விதத்தில் ஒன்றே. காரணம், கயவர்கள் யாதொரு  கட்டுப்பாடுமின்றி வாழ்வதால் விரும்பியவற்றுடன்  தேவர்களை போல் வாழும் நிலை ஏற்படுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
At an angle, turpituders can be compared to the gods since they can live with all their needs because of running an unconditional life.
- MAHENDIRAN V
------------------
குறள் 1074:
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பண்பாடு கருதி அடங்கி வாழும் மக்களை கண்டால், கயவர் எது பற்றியும் கவலைப்படாததால், தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற இருமாப்புக் கொள்வர் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders get arrogance and dominance as they don't bother about anything when they look at people who live with justice because of fear to society.
- MAHENDIRAN V
------------------
குறள் 1075:
அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அச்சம் என்றொன்று கயவரிடம் இருந்தால் ஒழுக்கம் இருந்திருக்கும். இச்சை கொள்ளும் பொருள் கிடைக்கும்வரை ஒழுக்கம் நிறைந்தவர் போல் காட்டி கொள்வர் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If turpituders had fear to God, they would be disciplined in life. They would pretend like disciplined persons till they obtain things which they desire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1076:
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க் குய்த்துரைக்க லான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கேட்டறிந்த செய்திகளை ரகசியம் காக்கத் தெரியாத கயவர்கள் உடனே பிறர்க்கு தெரிவிப்பதால் பறை என்ற வாத்தியத்திற்கு ஒப்பானவர்கள் ஆவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders are equallent to the Indian traditional instrument that is used for announcement since they suddenly reveal the matter whatever they hear.
- MAHENDIRAN V
------------------
குறள் 1077:
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
கூன்கையர் அல்லா தவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓங்கும் கையில்லாத எளியோருக்கு (முரடரல்லாதவர்க்கு) எச்சில் கையால் கூட ஈகை செய்யமாட்டார்கள் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders wouldn't ready to helping even with their eating hand to weakers who aren't rude in living style and who don't do arrogant activities.
- MAHENDIRAN V
------------------
குறள் 1078:
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல
கொல்லப் பயன்படும் கீழ்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றோர் எளியோருக்கு எளிதில் உதவுவர் ஆனால் கரும்பை பிழிவது போல் பிரயத்தனம் செய்தால் மட்டுமே கயவரிடமிருந்து உதவி பெறமுடியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Well Literates would frequently help to ones who are weak in finance but it would be hard as if twisting sugarcane to get the help from turpituders.
- MAHENDIRAN V
------------------
குறள் 1079:
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர் உடுத்துவதிலும் உண்பதிலும் பொறாமை கொண்டு குற்றம் கண்டு செய்தியாக்குவார்கள் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders would be jealous and make blame when they look at ones who are eating good and dressing rich.
- MAHENDIRAN V
------------------
குறள் 1080:
எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
விற்றற் குரியர் விரைந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தமக்கு துன்பம் என்று ஒன்று வந்து விட்டால், தன்னையே விரைந்து விற்பதற்கும் தயங்க மாட்டார்கள் கயவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Turpituders would not hesitate to sell even themselves if they get any big misery in life.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Friday, 4 March 2022

திருக்குறள். அதிகாரம் 107. இரவச்சம் CHAPTER 107. FEAR TO SEEK HELP (FEAR TO BEG) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 107.
இரவச்சம்
CHAPTER 107.
FEAR TO SEEK HELP (FEAR TO BEG)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1061:
கரவா துவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒளிவு மறைவு இல்லாத நல்லுள்ளம் படைத்தோர் ஈகை செய்ய காத்திருந்தாலும், பொருள் வேண்டி அவரிடத்தில் போய் கேட்காத நிலை கோடி நன்மையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one who is transparent and good hearted is ready to help, if one doesn't ask for money despite being poverty, that state is crore times better.
- MAHENDIRAN V
------------------
குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரந்து மட்டும் தான் ஒருவர் உயிர் வாழமுடியும் என்றொருச் சூழல் இருக்குமானால், இவ்வுலகை படைத்தவன் இரப்பவர் படும் வேதனையை விட அதிகம் வேதனைப்பட்டு கெட்டொழியட்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is situation that one can survive in this world only by the way of begging, May the lord who created this world suffer multi times more than the suffering of help seekers.
- MAHENDIRAN V
------------------
குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழைப்பதற்கு பதிலாக இரந்துண்டு வாழ்வதே மேல் என்று நினைத்து வாழும் வாழ்க்கையை காட்டிலும் கொடுமையானது யாதொன்றும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one thinks that he can manage his life only by seeking help from others instead of earning by working hard, there is no any other misery as it is.
- MAHENDIRAN V
------------------
குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையில் உழன்றாலும் பிறரிடம் உதவி கேளா மான்பைப் போல் இவ்வுலகத்தில் வேறெதும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if being atmost poverty, the state of not asking help to others is the biggest honour in this world. No any other pride can be equallent to this.
- MAHENDIRAN V
------------------
குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்த
துண்ணலின் ஊங்கினிய தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழைப்பில் கிட்டும் நீர் நிறைந்த கஞ்சியை பருகும் பொழுது கிடைக்கும் இன்பத்திற்கு இணையென்று கூற எதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no pleasant from anything else than eating watery kanji that is obtained by own earning.
- MAHENDIRAN V
------------------
குறள் 1066:
ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்
கிரவின் இளிவந்த தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் பசுவிற்கு தண்ணீர் வேண்டும் என்று மற்றவரிடம் கேட்பது கூட கேட்பவரின் நாவிற்கு இழிவானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if asking to others even water for one's cow too is  degraceful to the tongue of one who asks.
- MAHENDIRAN V
------------------
குறள் 1067:
இரப்பான் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பார் இரவன்மின் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் வைத்திருந்து அதை மறைத்து, கொடுக்க மறுப்போரிடம் பொருள் வேண்டி நிற்றல் கூடவே கூடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One must not stand for help infront of one who denies to aid despite having a lot but suppressing it.
- MAHENDIRAN V
------------------
குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் இருந்து அதை தந்து உதவ மறுப்போரின் இரும்பு பாறையில் இல்லாதோரின் மரத்தோணி மோதினால் நொறுங்கித்தான் போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a wooden boat of state of poverty dashes on the iron rock of cunning wealthier, the wooden boat of povertier would be smashed.
- MAHENDIRAN V
------------------
குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இரப்பவரின் நிலையை கண்டு உள்ளம் தான் உருகும். பொருள் இருந்து ஈகை செய்ய மறுப்போரை நினைத்தால் உருக உள்ளமே இல்லாமல் போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If we see the state of poverty of one, our heart would melt but if we just think about one who denies to help though having a lot but suppress it, we can't find  heart to melt.
- MAHENDIRAN V
------------------
குறள் 1070:
கரப்பவர்க் கியாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருள் கேட்டு, இல்லை என்று பிறர் சொன்னால் இரப்போருக்கு உயிரே போகிறது ஆனால் இல்லை என்று சொல்பவருக்கு போவதற்கு உயிர் இல்லையோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Help seekers are feeling that they have lost their lives when they heard the word of denying. But those who deny to help do not have live to lose it, do they?
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE