Sunday, 20 February 2022

திருக்குறள். அதிகாரம் 106. இரவு CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். 

அதிகாரம் 106. இரவு
CHAPTER 106. TO BEG / TO CLAIM FOR HELP
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1051:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லாமையில் உழல்பவன் இருப்பவனிடம் உதவி கேட்கும் பட்சத்தில், பொருள் தரத் தகுதியுடையவன் தாராதிருந்தால் அவனுக்குத்தான் அது இழுக்கு
- வை.மகேந்திரன்

Explanation in English:
When a man who is in poverty looks for help to a wealthier, if the wealthier denies to help despite having a lot, it's a degrade only to the wealthier.
- MAHENDIRAN V
------------------
குறள் 1052:
இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடுக்கல் வாங்கலில் துன்பமுறும் நிலை ஏதுமில்லையெனில், கொடுத்தவருக்கும் மகிழ்ச்சி வாங்கியவருக்கும் மகிழ்ச்சி.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no issues during the transaction between giver and getter, both who helps and who is helped would be happy.
- MAHENDIRAN V
------------------
குறள் 1053:
கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமோர் ஏஎர் உடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வஞ்சமில்லா வெளிப்டையான மனதுடைய நல்லோரிடம் பெறும் உதவி பெருமைக்குரியதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Of course, the state of being helped by the broad minded and transparented is proudable one.
- MAHENDIRAN V
------------------
குறள் 1054:
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளொன்று புறமொன்று என்ற மனநிலையை கனவிலும் கண்டறியாத நல்லோரிடமிருந்து உதவி பெறுதல், பிறர்க்கு உதவும் நிலைக்கு ஒப்பானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of being helped by ones who aren't having dark trait even in their dream is like the state of helping to others.
- MAHENDIRAN V
------------------
குறள் 1055:
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்
றிரப்பவர் மேற்கொள் வது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இருப்பது என் பொருள் நான் யாருக்கும் தரேன் என்று சொல்லாமல் வறுமையாளரின் முகத்தை பார்த்தே ஈகையை கடமையாய் செய்பவர்கள் உள்ளதால் தான் கேட்போர்கள் (இரப்போர்கள்) துன்பம் இல்லாமல் இருக்கிறார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because of existing of the persons who are always ready to help others by just reading face, those who beg to others are living without misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லை என்று சொல்லாத ஈகை மனம் கொண்டோரை கண்டாலே போதும், வறுமையாளரின் துன்பம் பறந்து போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If those who do never say the word 'NOTHING' and having helping Trait always- are just seen by the povertised persons that's enough. The misery of povertised would fly away.
- MAHENDIRAN V
------------------
குறள் 1057:
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்ப துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உதவி கேட்போரை இகழ்ந்து பேசாது, அவர் நிலை கண்டு இரக்கம் காட்டி மதித்து நடந்துகொள்வோரை கண்டால், உதவி கேட்போருக்கு மனம் மகிழ்ந்துபோகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Povertised would be pleasant, if they see the good hearted persons who don't blame povertised but sympathizing on poor people.
- MAHENDIRAN V
------------------
குறள் 1058:
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருளிருப்போர், இல்லாதோர்க்கு இரக்கம் காட்டி ஈகை செய்ய தவறுபவர்கள் நடமாடும் மர பொம்மைகளை போன்றவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who hesitate to help to povertised, despite being wealthful, are equallent to movable wooden toys.
- MAHENDIRAN V
------------------
குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லாதோர் இவ்வுலகில் இல்லையென்றால், எல்லாம் இருக்கும் வல்லார் இல்லாதோர்க்கு உதவும் புண்ணியத்தை இழப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no povertised people in this world, wealthiers would lose the virtue as they don't have opportunity to help.
- MAHENDIRAN V
------------------
குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஈகை செய்யாதோர் மேல் பொருள் கேட்போர் கோபம் கொள்தல் கூடாது. கேட்டும் கிடைக்காத நிலை துன்பம் என்றால் அதற்கு காரணம் வறுமையே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who claim help shouldn't get anger on ones who help others, perhaps they fail to help. If such failure causes misery, the reason for that is one's poverty.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Friday, 18 February 2022

திருக்குறள் அதிகாரம் 105. நல்குரவு CHAPTER 105. POVERTY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 105. நல்குரவு
CHAPTER 105. POVERTY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1041:
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இல்லாமையை விட கொடியது இல்லாமை தானே தவிர வேறு எதுவுமிருக்க முடியாது ஆகையால் இல்லாமையை விட கொடியது இல்லாமை தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is the most misery to one than the state of poverty. So that, it can be said that only the poverty is the bigger misery than the poverty.
- MAHENDIRAN V
------------------
குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமை எனப்படும் பாவி கொடுத்து வாங்கும் நிலையை கெடுப்பதால் இன்பம் தொலைந்துபோய் மறுமையிலும் வறுமையை தொடரவைக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since the sinner namely poverty would spoil one's usual survival, the pleasance of one's life would vanish, also the state of poverty would remain in the future.
- MAHENDIRAN V
------------------
குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குர வென்னும் நசை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையே ஒருவருக்கு பழகிப் போய் அதில் விருப்பம் வந்து விட்டால், அது அவனது குடும்ப பெருமையையும் பண்பையும் கெடுத்து விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the poverty habitually tends one's life and the one is pushed to be interested, it would collapse the one's family's honour and pride.
- MAHENDIRAN V
------------------
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் வறுமை வந்தால், அக்குடும்பத்தில் சோர்வை உண்டாக்கி இழிச்சொல் பேச வைத்து விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the poverty tends on a highly traited family, laziness would raise in such family and would cause to speak illy talks.
- MAHENDIRAN V
------------------
குறள் 1045:
நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையெனும் துன்பம், பற்பல துன்பங்கள் உருவாக வித்தாகிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The big misery namely poverty would be a core that would generate more and more miseries.
- MAHENDIRAN V
------------------
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பல நூல்கள் கற்றறிந்து பண்பட்ட மனிதாராக இருந்து, பல நல் சொற்கள் கூறினாலும், அவர் வறுமையானவர் என்றால், அனைத்தும் மதிப்பிழந்து நிற்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is very much literate by learning a numerous epics and being traited and preach to others good ones, if he is on poverty, all his skills would be invalid.
- MAHENDIRAN V
------------------
குறள் 1047:
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வறுமையில் இருப்பவர் இழிச் செயல் செய்ய நேர்ந்தால், பெற்ற தாயே அவரை இவர் யாரோ - என்று சொல்வாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one, who is on poverty, practices any evil acts, even the one's mother too would comment as 'who is this guy?'
- MAHENDIRAN V
------------------
குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நேற்று துன்பத்தை தந்து கொன்ற வறுமை இன்றும் தொடர்ந்தால், எப்படி நான் வாழ்வேனோ - என்று ஒருவரை கலங்கவைத்துவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the poverty that killed yesterday by causing a lot of miseries continues also today, the victim would cruelly be saddened by saying how he is going to live.
- MAHENDIRAN V
------------------
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பா டரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெருப்பினுடே கூட ஒருவர் துயில் கொள்வது சாத்தியப்படக்கூடும் ஆனால் வறுமையில் உழல்பவர் தூக்கத்தை துறப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It might be possible to sleep alongwith fire, but it is not possible to ones who are covered by poverty, to have a sleep.
- MAHENDIRAN V
------------------
குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்றாட தேவையான உணவு உடை இருப்பிடம் இல்லாமல் இல்லறம் துறவா நிலையிலிருப்போருக்கு கிடைக்கும் உப்பும் கஞ்சியும் ஒரு அற்ப சந்தோஷமே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Of course Getting gruel and salt  is trivial happiness to ones who are struggling for having usual commodities but willing for family life.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Sunday, 13 February 2022

திருக்குறள். அதிகாரம் 104. உழவு CHAPTER 104. PLOUGHING / AGRICULTURE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 104.
உழவு
CHAPTER 104.
PLOUGHING / AGRICULTURE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1031:
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எத்தொழில்கள் எங்கு நடந்தாலும், அத்தொழில்கள் உழவுக்கு பின்னால் தான். உழவு சிரமங்களடங்கிய தொழிலாயினும் அதுவே தலையானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Whatever the profession is there, would be behind to agriculture. Despite being difficulties in this profession, only this is the greatest one among all.
- MAHENDIRAN V
------------------
குறள் 1032:
உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழவை விட்டு விலகிச் சென்று எத்தொழில் செய்தாலும், உழவு, உணவுத் தரும் தொழிலாகையால், உழவே உலகிற்கு அச்சாணியாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although some is going away from ploughing and go to other business, as only the ploughing provides food, this is the main axis to the world.
- MAHENDIRAN V
------------------
குறள் 1033:
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழவு தொழில் செய்வோரே பசியாரும் முதல் உரிமைப் பெற்றவர். மற்றோரெல்லாம் உழவர்க்கு பின்னால் தான் நிற்க வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only ploughers are having first right to have food. Others just have to stand behind them.
- MAHENDIRAN V
------------------
குறள் 1034:
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பற்பல குடைகளின் - அதாவது அரசன் பணக்காரன் தனவந்தன் வீரன், எளியோர் அறிஞர், முனிவர் ஆகியோரின்- நிழல்கள் (பெருமைகள்),  உணவு தருவதால் உழவர்களின் குடைக்குள் வசப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Any kind of pride of any kind of persons like king, richers, valiant, poor, wisdomed, sages all would be subdued to the pride of ploughers.
- MAHENDIRAN V
------------------
குறள் 1035:
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழவர் பிறரிடம் கைகட்டி பொருள் கேளாதவர். பிறர் வந்து பொருள் கேட்டால், இல்லை என்று சொல்லாமல் தருபவரும் உழவரே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ploughers wouldn't stand infront of anyone with any prayer. Also they wouldn't deny to assist others who come to them with prayer.
- MAHENDIRAN V
------------------
குறள் 1036:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழவர் தன் தொழிலை முடக்கினால், உணவையும் துறந்து உயர்ந்து நிற்கும் துறவியும் தாழ்ந்து போவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If ploughers stop their work, even sages who have given up food too would suffer.
- MAHENDIRAN V
------------------
குறள் 1037:
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மடங்கு மண்ணை உழுது கால் மடங்காக்கி பயிரிட்டால் போதும். பிடி அளவு உரம் இல்லாமலே பயிர் செழித்து வளரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's enough, if just ploughing and composing well a volume of sand and making it quarter volume on the land, need not fertilise even a bit, the crop would grow up the best.
- MAHENDIRAN V
------------------
குறள் 1038:
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உழுவதுடன் உரமிடுவது முக்கியம். உரமிடுவதுடன் நீர் பாய்ச்சுவது முக்கியம். நீர் பாய்ச்சுவதுடன் களை எடுத்தல்  முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக பயிரை காவல் காப்பது மிகமுக்கியம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Fertilising is important besides ploughing. Watering is important besides fertilising. Plucking weeds is important besides watering. Above all, safeguarding crops is very important.
- MAHENDIRAN V
------------------
குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உரியவன் தினம் சென்று நிலத்தை பார்க்காவிடில், கணவனால் கவனிக்கப்படாத மனைவி கணவனை வெறுப்பது போல், நிலமும் வெறுத்து பயிர் தராதுபோகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a land lord or farmer doesn't visit and taking care the land as a routine work, the land would result a worse harvest as if uncared wife is getting hatred on her husband.
- MAHENDIRAN V
------------------
குறள் 1040:
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஏதும் செய்ய இயலா நிலையில் உள்ளேன் என்று நிலத்துக்குரியவன் சொன்னால், நிலம் அவனை பார்த்து ஏளனமாக சிரிக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a plougher says to his land that he is unable to do anything favourable to the land, the land would mocker at him.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


திருக்குறள். அதிகாரம் 103. குடிசெயல் வகை CHAPTER 103. THE MAIN ACTIVITIES OF A FAMILY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 103.
குடிசெயல் வகை
CHAPTER 103.
THE MAIN ACTIVITIES OF A FAMILY 
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1021:
கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்
பெருமையிற் பீடுடைய தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கருமமே கண்ணாயினும் என்ற நோக்கில் வீட்டையும் நாட்டையும் மேம்படுத்த வேண்டும் என்று செயல்படுவதை விட பெருமையான செயல் வேறெதுவும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no any other pride is equallent as one does very hard work to enhance his family and nation by taking an infinite effort.
- MAHENDIRAN V
------------------
குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அறிவுடன் முயற்ச்சியும் கைகோர்த்து செய்யும் கடமையால் ஆகும் பயன் வீட்டையும் நாட்டையும் உயர வைக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The gain obtained during duty done with hard-work with a good knowledge would make one's home and his nation to high up.
- MAHENDIRAN V
------------------
குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீட்டையும் நாட்டையும் உயர்த்த பகீரத பிரயத்தனம் செய்பவர்க்கு இறைவனும் வந்து துணை செய்வான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
God too would bless by standing nearby one who is hiking the quality of home and nation with full of his effort.
- MAHENDIRAN V
------------------
குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வீடும் நாடும் உயர உண்மையாய் நினைத்தாலே போதும். அதற்குறிய ஆற்றல் தானாக வரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one just thinks is enough to hike up his home and nation, surely all efforts and skills would cummulate around him itself.
- MAHENDIRAN V
------------------
குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குற்றமற்ற செயல்களால் வீட்டையும் நாட்டையும் முன்னேற்றிட முயல்பவனுக்கு சுற்றத்தார் சூழ்ந்து நின்று துணை நிற்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Friends and relatives would come and give their hands if one tries to hike his home and nation with crimeless activities.
- MAHENDIRAN V
------------------
குறள் 1026:
நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்ததோர் ஆண்மை எதுவென்றால், தனது குடிமையை ஆளும் திறனை தனதாக்கி கொள்வதே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The best masculinity is what one should be eager and  possess himself to lead his home and nation to hike up.
- MAHENDIRAN V
------------------
குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
போர்களத்தில் வரும் சிரமங்களை தாங்கி நின்று போரிடும் ஒரு வீரனின் வல்லமையை போன்றதே நாட்டையும் வீட்டையும் உயர்த்தப் பாடுபடும்  பொழுது ஏற்படும் சிரமங்களை எதிர்கொள்வது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To meet out difficulties during protecting family is like the same type of difficulties met out by valiant during the war in the battle.
- MAHENDIRAN V
------------------
குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடும்பத்தையும் தேசத்தையும் உயர்த்த காலக்கெடு எதுவும் இல்லை. சோம்பல், தள்ளிப்போடுதல் ஆகியவவை நோய்களாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No time limit to do activities for hiking up family and nation. Laziness and postponing act are a kind of disease.
- MAHENDIRAN V
------------------
குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குடும்பத்தை காப்பாற்ற அருப்பாடுபடும் ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணுங்கால், அவன் துன்பத்தை சந்திப்பது இயற்கையின் நியதியோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
If you think about the miseries met out by a lead man of a family who works hard, is it a nature what he ought to meet out such miseries?
- MAHENDIRAN V
------------------
குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு குடியில், வரும் துன்பத்தை போக்கவல்ல திறம் நிறைந்தோர் அவ்விடம் இல்லாவிடில், குடியானது துன்ப வலையில் விழும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If there is no proper effective persons as  guidance in a family to solute the issues when the family is hanging at a problem, it would be spinned by the net of misery.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Saturday, 12 February 2022

திருக்குறள். அதிகாரம் 102. நாணுடைமை CHAPTER 102. SHAME / MODESTY / SHYNESS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 102. நாணுடைமை
CHAPTER 102.
SHAME / MODESTY / SHYNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1011:
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இழிச் செயல் செய்பவன் சமூகத்தில் வெட்கப்படுவது வேறு. நெற்றி நிறை அழகுப் பெண் இயல்பாக வெட்கப்படுவது வேறு. வெட்கம் என்ற வார்த்தையினால் இரண்டும் ஒன்றாகிவிடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The shamefulness attained by one because of his having done evil activities to society and the shyness felt by a pretty woman who has a beautiful forehead aren't same. The first one is considered as dirty and the second one is pretty.
- MAHENDIRAN V
------------------
குறள் 1012:
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உணவு உடை உள்ளிட்ட அனைத்தும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், நாணம் மட்டும்  நல்ல மனிதர்களின் உடைமையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Food and clothe is common to all living beings but shyness is the great sense had by only good people.
- MAHENDIRAN V
------------------
குறள் 1013:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்
நன்மை குறித்தது சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயிர் உடலுடன் தான் இணைந்து நிற்கும். அது போலத்தான், நாணமும் நற்குனம் உயர்ந்த பண்புள்ளோரிடத்தில் தான் இருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Live is merged with body is well known. Likewise, shyness too is merged with the great traited persons.
- MAHENDIRAN V
------------------
குறள் 1014:
அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
பிணியன்றோ பீடு நடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாணம் என்ற நற்குணத்தை ஆபரணமாக  பெற்றிருப்பதால் தான் சான்றோர்களால் பீடுநடை போடமுடிகிறது. நாணம் என்பது இல்லையேல், அது இழிவு என்பதை அறிவார்கள் அவர்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because the great wisdomed are having the sense of shamefulness or modesty as an ornament, they could walk straightly infront of society. They clearly know if there is no such senses it means degraceful.
- MAHENDIRAN V
------------------
குறள் 1015:
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தன் பழிக்காக நாணுதல் ஒரு பெரிய விஷயமல்ல. பிறரின் பழியை கண்டு ஒருவன் நாணம் கொள்கிறார் என்றால் அவரை இவ்வுலகம் பெரிதும் போற்றும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one is getting shy because of his illy act, that is not a matter, but if the one gets shy due to other's degraded activity, the world would praise him.
- MAHENDIRAN V
------------------
குறள் 1016:
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருமக்கள், தன் நற்குணங்களுக்கு நாணமே வேலி என்றும் இவ்வுலகில் அது போன்ற பாதுகாப்பு பிற எதுவும் இல்லை என்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The great persons would comment that only the trait of shy is the protection for one's life and no anything can be compared to that.
- MAHENDIRAN V
------------------
குறள் 1017:
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாணமே பெரிது என்று கருதுபவர்கள் உயிரை துச்சமாக நினைப்பர். உயிரை காக்க மானத்தை அடகு வைப்போர் வெட்கமில்லாதவர்களாவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who think shame is great will think life is trivial. Those who mortgage their honour to save their lives are shameless.
- MAHENDIRAN V
------------------
குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறர் பார்த்து கை கொட்டி சிரிக்கும் அளவுக்கு வெட்கக்கேடான செயல் புரிந்த ஒருவன், கொஞ்சமும் வெட்கமின்றி வலம் வந்தானானால், வெட்கமே அவனை விட்டு வெட்கி விலகி விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one has done a very shameful activity but walks on street shamelessly, even the shyness would get away from him with shame.
- MAHENDIRAN V
------------------
குறள் 1019:
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொள்கை குன்றி நடப்பவனுக்கு குலப்பெருமை கெட்டுவிடும். மேலும் அது கண்டு வெட்காமல் இருப்பவனுக்கு நலமனைத்தும் கெடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One whose principles are found to be bad in life would lose the prides if his family. And if he is not shameful for that act, all of his goodness would be collapsed.
- MAHENDIRAN V
------------------
குறள் 1020:
நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெட்கம் என்ற ஒன்றே இல்லாமல் நடமாடுபவன், கயறு கட்டி இழுத்தாட வைக்கும் மரப்பாச்சி பொம்மைக்கு ஒப்பானவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who behaves in life without even a bit of shy is equallent to a wooden toy played by roping just for showing that it has live.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Thursday, 10 February 2022

திருக்குறள். அதிகாரம் 101. நன்றியில் செல்வம் CHAPTER 101. THE WEALTH IN GRATITUDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.

அதிகாரம் 101.
நன்றியில் செல்வம்
CHAPTER 101.
THE WEALTH IN GRATITUDE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்த தில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெரும்பொருள் / செல்வம் நிறைய சேர்த்து வைத்து, வாழும்பொழுது அவற்றை அனுபவிக்க மற்றும் ஈகை செய்யத் தெரியாதவனுக்கு, ஈட்டிய செல்வத்தால் அவனுக்கும் பிறர்க்கும்  பயனில்லையாதலால் அவன் இருந்தும் இறந்தவனே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who has earned wealth a lot and failing to enjoy such and also failing to help to others is considered as a dead man though he is alive.
- MAHENDIRAN V
------------------
குறள் 1002:
பொருளானாம் எல்லாமென்றீயா திவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பொருளால் தான் எல்லாம் என்பார், எதையும் சாதிக்கலாம் என்பார், ஈகையும் செய்யேன் என்பார் தானும் எதையும் செய்யேன் என்பார் - இவர் பிறப்பு இழிப்பிறப்பாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one who earned wealth a lot says that nothing is big one in this world but wealth and one can achieve anything by money and, if he wouldn't help to others and  he too wouldn't enjoy, his birth is disgrace to this world.
- MAHENDIRAN V
------------------
குறள் 1003:
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அதிக பொருள் ஈட்ட மட்டும் ஆர்வம் கொண்டு மற்ற எவற்றாலும் புகழ் தேட விரும்பாதார் இப்பூமிக்கு பாரமானவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who is eager only to earn wealth and not to get fame by doing any other moral acts, and being not to be helpful to others is just an unwanted load to the earth.
- MAHENDIRAN V
------------------
குறள் 1004:
எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாழும் பொழுது எவர்க்கும் எவ்விதத்திலும் பயன் இல்லாது யாராலும் விரும்பப்படாதவன், 'தான் மாண்ட பின் எப்புகழையும் பெறமாட்டான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who is not liked by anyone because of not being useful to the anyone at any respect wouldn't get any goodwill after he demises.
- MAHENDIRAN V
------------------
குறள் 1005:
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க் கடுக்கிய
கோடியுண் டாயினும் இல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சேர்த்து வைத்த செல்வத்தை நுகரவும் செய்யாது, பிறர்க்கு உதவவும் செய்யாது அடுக்கி வைத்திருப்பது கோடிகோடியாயினும் அவை இருந்தும் இல்லாதவையே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If crores of wealth earned by one is not to be useful to anyone and isn't used by the earner, such fund is considered invalid despite existing.
- MAHENDIRAN V
------------------
குறள் 1006:
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்
றீத லியல்பிலா தான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தானும் அனுபவிக்காது, பிறர்க்கும் உதவாது பூட்டி வைத்திருக்கும் ஒருவனின் செல்வமும் அவனும் ஒரு நோயே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the stance of the wealth earned by one is neither enjoyed by one nor being useful to others, he and his wealth is considered just as a disease.
- MAHENDIRAN V
------------------
குறள் 1007:
அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வலியோனிடம் உள்ள செல்வம் எளியோருக்கு பயன்படாதுபோவதென்பது, ஒரு அழகு பதுமை பெண் மணமாகாமல் அப்படியே இருந்து முதுமை பெற்றதற்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of not being useful of a rich man's wealth to the society is like a pretty woman is getting old without getting married.
- MAHENDIRAN V
------------------
குறள் 1008:
நச்சுப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவனின் செல்வம் யாருக்கும் பயன்படாமல் வீணாகிப்போனால், அது நச்சு மரம் ஒன்று நடுத்தெருவில் பழுத்து குலுங்கியது போலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the wealth of one is going to be useless as it's being helpful to none, that is considered as a toxic tree is planted on the mid of the town.
- MAHENDIRAN V
------------------
குறள் 1009:
அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பும் இல்லாது அறத்தையும் மீறி தன்னையும் வருத்தி ஈகையும் செய்யாது ஒருவன் குவித்து வைத்திருக்கும் செல்வம் ஒரு நாள் யாராலோ அபகரிக்கப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The wealth cummulated by one who trespasses the moral ways and not having helping tendency and not having even a bit of kindness would be grabbed by somebody else one day.
- MAHENDIRAN V
------------------
குறள் 1010:
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனைய துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தான் தேடிய செல்வத்தை பிறர்க்கு கொடுத்து உதவ நினைக்கும் செல்வந்தர்களின் வறுமை, மழை தரும் மேகம் வறுமை கொண்டதற்கு ஈடானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of attaining poverty of rich men who would like to be helpful to others financially is equallent to the clouds which provide rain to the Earth attain poverty.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Tuesday, 8 February 2022

திருக்குறள். அதிகாரம் 100. பண்புடைமை CHAPTER 100. HAVING GOOD MANNERISM 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 100. பண்புடைமை
CHAPTER 100.
HAVING GOOD MANNERISM
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 991:
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் இனிமையாய், எண்களை போல் எளிதாய் எவரிடத்திலும் பழகும் பாங்கே பண்புடைமையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of one that one  behaves so kindly and easily like reading numbers with whomever is known as good manners.
- MAHENDIRAN V
------------------
குறள் 992:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் பிறந்ததற்கான இலக்கணத்துடன் வாழ்வது, நல்வழியில் அன்புடன் அனைவரிடத்திலும் பழகுவது இவ்விரண்டும் அன்புடைமையின் இலக்கணங்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Living according the status of being born in noble family, and behaving with others so benevolently are the grammar of the good trait.
- MAHENDIRAN V
------------------
குறள் 993:
உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உருவத்தில் தோற்றத்தில் ஒருவருடன் ஒத்திருப்பது ஒற்றுமையல்ல. உள்ளத்தில் வேற்றுமை எண்ணம் இல்லாதிருத்தலே இணைபிரியா ஒற்றுமையாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The real resemblance of the twos doesn't mean similar appearance but it means the similar frequency in mind.
- MAHENDIRAN V
------------------
குறள் 994:
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புள ராட்டும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நீதியை காத்து நிற்கும் நெறிமுறைகளுடனும் அறம் செய்யும் விரும்பி பிறர்க்கு உதவும் வகையிலும்  வாழ்பவரை இவ்வுலகம் போற்றும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The world would praise ones who  is living justicious and helping others morally for they getting benifits. 
- MAHENDIRAN V
------------------
குறள் 995:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நகைச்சுவைக்காகக் கூட  பிறரை இகழ்தல் துன்பம் தருவிக்கக் கூடியது என்பதை அறிந்து, பகைவனானாலும் பண்பறிந்து பழகுபவரே பண்புடைமைக்கு சொந்தக்காரர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Shouldn't blame others even for fun. One who behaves even with enemies by knowing good manners is the real trait haver.
- MAHENDIRAN V
------------------
குறள் 996:
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
மண்புக்கு மாய்வது மன்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த பண்புடையோர் நிறைந்திருப்பதால் தான் இவ்வுலகம் இனிதாக இயங்குகிறது, இல்லையேல், மண்ணுக்குள் புதைந்திருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only because of living of great traited persons, this world is functioning pleasantly. Otherwise, it would have got burried under the earth.
- MAHENDIRAN V
------------------
குறள் 997:
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரம் போன்ற கூர்மையான அறிவு உள்ளவராகினும், மக்களிடம் மனித நேயம் காட்ட தெரியாதவர் மரத்திற்கு ஒப்பானவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though one is being intelligent like a sharp saw, if he doesn't know to show humanism to others, he is equallent to a tree.
- MAHENDIRAN V
------------------
குறள் 998:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நட்பற்ற பகைவர் தீச்செயல்கள் செய்தாலும், அவர்களிடம் பண்பற்ற முறையில் நடந்துகொள்வதும் ஒருவித இழுக்கே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one behaves un traitedly even if the one's enemies are doing miseries to him, that is also a dirty manner.
- MAHENDIRAN V
------------------
குறள் 999:
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறருடன் பழகி நெகிழ்ந்து பண்புடன் இருக்க தெரியாதவர்களுக்கு, பகல் பொழுதும் இருள் சூழ்ந்தே காணப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
To those who don't know to behave traitedly with kindness with others, the day time too would be looking like dark.
- MAHENDIRAN V
------------------
குறள் 1000:
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பண்பில்லாதவனிடம் உள்ள மட்டற்றசெல்வம் என்பது, கலம் குலைந்துபோன  பாத்திரத்தில் ஊற்றப்பட்ட நல்ல பால் திரிந்து போனது போலத்தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Having a big wealth of one who is ill-traited is equallent to the good milk becomes soured milk because of having poured it in the dirty vessel.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Monday, 7 February 2022

திருக்குறள். அதிகாரம் 99. சான்றாண்மை CHAPTER 99. THE PERFECTNESS OF THE GREAT MEN 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 99. சான்றாண்மை
CHAPTER 99.
THE PERFECTNESS OF THE GREAT MEN
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 981:
கடனென்ப நல்லவை யெல்லாம் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு கடமையை, 'இது தான் நாம் செய்யத்தகுந்த பணி' என மணமுவந்து ஏற்று திறப்பட செய்ய முயற்சிப்போருக்கு நல்ல குணாதியங்கள் இருப்பது இயல்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who takes a work enthusiastically that it is his prime duty and tries to complete successfully is always having very great traits.
- MAHENDIRAN V
------------------
குறள் 982:
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த பண்புகளை கொண்ட குணநலமே சான்றோரை பெருமை படுத்தும் மற்ற நலன்கள் எல்லாம் அதற்கு பிறகே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the state of having great traits would bear prides a lot to the perfect men. Other goodwills are put next to that.
- MAHENDIRAN V
------------------
குறள் 983:
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பு, நாணம், உதவும் மனப்பான்மை, தயவுதாட்சண்யம், வாய்மை - இவை ஐந்தும் சிறந்த ஆண்மைக்கு தூண்களாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The main Pillers of perfect men are, kindness, modesty, helping tendency, face respect and honesty.
- MAHENDIRAN V
------------------
குறள் 984:
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயிர் வதை செய்யாமை தவத்திலும் சிறந்தது. பிறர் குறையை கூறாதிருப்பது ஆண்மைக்கு சிறந்தது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Not to be killing lives is greater than the penance. The state of not talking about the drawbacks of others is the greatness of perfect men.
- MAHENDIRAN V
------------------
குறள் 985:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஆற்றலின் ஆற்றல் பணிவுடன் இருத்தல். சான்றாண்மையின் ஆற்றல் பகைவரை நட்பாக்குதல்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The strength of effort is being humble. The strength of great men is, making enemy to be a friend.
- MAHENDIRAN V
------------------
குறள் 986:
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எளியோரிடம் தோற்றுவிட்டால், வாதிடாமல், மனம் உவந்து தோல்வியை ஒப்புக் கொள்வதும் சான்றாண்மையே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Incase of getting failure with weaker, the state of solemnly consenting such failure is too is known as greatness.
.- MAHENDIRAN V
------------------
குறள் 987:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் துன்பம் கொடுத்திருந்தாலும், அவருக்கு உதவி செய்யாமல் போகும் பண்பு சான்றாண்மையாகாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even though one had paid misery, the state of not helping him is not meant as perfectness.
- MAHENDIRAN V
------------------
குறள் 988:
இன்மை ஒருவற் கிளிவன்று சால்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறந்த ஆண்மை பெற்று நற்பண்பு இருந்தால்  போதும், வறுமையும் அவனைக் கண்டு அஞ்சும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a perfect man has gotten all the best traits, even the poverty too would be afraid of nearing to him.
- MAHENDIRAN V
------------------
குறள் 989:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்
காழி யெனப்படு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றாண்மை பெற்று கடல் அளவு சாதிக்கும் வல்லவர்கள், வையகமே மாறினாலும், தன் தரத்தை மாற்றிக்கொள்ளார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The most great perfect men who could achieve as far as the size of ocean would never change their quality even if the Earth changes its turns.
- MAHENDIRAN V
------------------
குறள் 990:
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சான்றோரின் சான்றாண்மை விலகுங்கால், இவ்வையகமே  வலிமையிழந்ததாக கருதப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the perfectness leaves out from the great men, the entire world would be considered as strengthless.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Saturday, 5 February 2022

திருக்குறள். அதிகாரம் 98. பெருமை CHAPTER 98. PRIDE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 98.
பெருமை
CHAPTER 98.
PRIDE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 971:
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறரின் ஊக்கமின்றி வெற்றி காண்பேன் என்பது சரியன்று. ஒருவரின் வெற்றிக்கு மற்றவரின் ஊக்கமே ஊன்றுகோலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one says that he gets won himself and not from any others' assistance, that is wrong. A victory cannot be gotten without support of others.
- MAHENDIRAN V
------------------
குறள் 972:
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிறப்பால் எல்லோரும் ஒன்றே என்றாலும் அவரவர் தொழில்களில் ஒவ்வொருவரின் செயல் திறனே அவர்களை  வேறுபடுத்துகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The birth is common to all. Only the profession and skills of activities of everyone are varying them.
- MAHENDIRAN V
------------------
குறள் 973:
மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்ந்த பண்பில்லா மேல்  மக்கள் மேல் மக்களல்லர். சிறந்த பண்புகள் நிறைந்திட்ட கீழ் மக்கள் கீழ் மக்களல்லர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
High graded people who don't have great traits aren't high graded. Likewise, low graded people aren't low graded if they have great traits.
- MAHENDIRAN V
------------------
குறள் 974:
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் தன் வாழ்வில் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்வதென்பது, ஒரு பெண் தன் கற்பை காத்து வாழ்வது போலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The stance ones who live by following all moralities in their life is like a woman who is honestly living by protecting her virginity.
- MAHENDIRAN V
------------------
குறள் 975:
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அரியச் செயல்களை ஆனந்தமாய் ஏற்று அற்புதமாக செய்து முடிப்பவர்களே பெருமைக்குரியவர்களாவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones those who are daring to attend willingly rare works that might not be able to be done by others are highly graded people.
- MAHENDIRAN V
------------------
குறள் 976:
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அருஞ்செயல் புரிந்த பெரியோர்களை போற்றிப் புகழ்வதென்பது பரந்த எண்ணம். சிறுமை உணர்ச்சியுள்ளவர்கள் அதை அறியார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The trait of applauding other's tough activities is called broad minded. Silly people would not know it.
- MAHENDIRAN V
------------------
குறள் 977:
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்
சீரல் லவர்கண் படின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறப்பு நிலை செயல்பாடுகள் சிறுமை எண்ணம் படைத்தோர் கையில் அகப்பட்டால் சிறப்புகள் அனைத்தும் சீரழிந்துபோகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the important and great works are given to silly minded people, all greatness of those works would be collapsed.
- MAHENDIRAN V
------------------
குறள் 978:
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெரிய மக்கள் எப்பொழுதும் அடக்கத்துடன் இருப்பர்.  சிறுமை புத்தி கொண்டவர்கள், தனக்குத்தானே  பெருமைப்படுத்தி வியந்துக்கொள்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The great people would be always humble but the low traited people would be praising proudly themselves.
- MAHENDIRAN V
------------------
குறள் 979:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருமைப்படக்கூடிய செயல் செய்தாலும் பெருமக்கள் பெருமிதம் கொள்ள மாட்டார்கள். சிறு மக்களோ தம்பட்டம் அடித்து மகிழ்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The great traited people wouldn't be eager to be proud of even if they have done a highly graded work. But the low traited would be dancing here and there at the same situation.
- MAHENDIRAN V
------------------
குறள் 980:
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருங்குணம் கொண்டோர் அடுத்தோர் குறைகளை அலச மாட்டார். சிறுங்குணம் கொண்டோரோ பிறரின் குற்றத்தை கூவி விற்று மகிழ்வர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Those who have good traits wouldn't be minding other's drawbacks as big. But the low traited ones would be eager to spreading such drawbacks to others.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


திருக்குறள். அதிகாரம் 97. மானம் CHAPTER 97. HONOURS 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 97. மானம்
CHAPTER 97. HONOURS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 961:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மிக முக்கியமான அவசியமான செயல் ஆனாலும் தன் குடிப்பெருமைக்கு (மானத்திற்கு) அது இழுக்கு ஏற்படுமானால் செய்யாமல் இருப்பதே நல்லது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one commits very important and so necessary act, if it swallows the one's honour, it's better not to do such act.
- MAHENDIRAN V
------------------
குறள் 962:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சீரிய வீரமிக்க  செயலானாலும் புகழ் மிக்கதாக அது இருந்தாலும் குலப் பெருமைக்கு உகந்தாக அது இல்லாவிடின் அச்செயலை தவிர்க்க வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if one is very brave action and such action brings some fames, if it is against the honour of one's birth, must avoid it.
- MAHENDIRAN V
------------------
குறள் 963:
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பணம் தழைத்திருக்கும் காலத்தில் பணிவு இருக்க வேண்டும். ஒருவேளை செல்வம் குன்றிப்போனால், மனம் தளரா வீரம் இருக்க  வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When one is so wealthy, should need submissiveness. And at the time of wealthless situation, should need strong mind.
- MAHENDIRAN V
------------------
குறள் 964:
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாழ்வாங்கு வாழ்ந்து தாழ்ந்து போனவர், தலையிலிருந்து விழுந்த தலைமுடிக்கு ஒப்பாவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If ones who lived so highly in society have the situation to going down unfortunately, that is equallent to hairs that fall down from the head.
- MAHENDIRAN V
------------------
குறள் 965:
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குன்றாய் ஓங்கி வளர்ந்து வாழ்வோர், குன்றிமணி அளவு குறை செய்தால் கூட கூனி குறுகும் நிலையை அடைவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If ones who live like the height of mountain committing a simple mistake (even if such mistake is the size of little rosary pea), they would be blamed a lot byvthe society.
- MAHENDIRAN V
------------------
குறள் 966:
புகழின்றால் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
றிகழ்வார்பின் சென்று நிலை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வாழ வேண்டும் என்பதற்காக இகழ்பவனை ஏற்று, அவன் பின் செல்வதால் எப்பயனும் இல்லை. பெருமையும் கிடைக்காது அருளும் கிடைக்காது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
For the sake of living, The stance of following silly persons who blame us is useless. can't get any pride from that. Blesdings tended so far too will fly away.
- MAHENDIRAN V
------------------
குறள் 967:
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
புறம்பேசி இகழ்பவனின் உதவி கிட்டி உயிர் வாழ்ந்து மானத்தை தொலைப்பதை விட, உயிர் போனாலும் இருந்த நிலையே போதும் என்ற உறுதி எண்ணம் வர வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Rather being in the normal status by having bravery like even if the life is lost too is better than losing honour by following ones who are blaming back side by worst words, for living.
- MAHENDIRAN V
------------------
குறள் 968:
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பெருமை காக்க வேண்டி மனம் ஒவ்வா செயல் செய்வது, சாகாமல் இருக்க மருந்தொன்றை தேடுவது போலாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The state of doing against one's conscience owing to protecting prides is equallent to seeking medicine for not dying.
- MAHENDIRAN V
------------------
குறள் 969:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடல் உரோமம் கலைந்தால் உயிர் வாழாதாம் கவரிமான். அது போல், குடும்ப பெருமை குலைந்தால், உடம்புடன் இருக்கும் உயிர் எதற்கு என்பராம் மானமுள்ளவர். (உயிரை துச்சமாக நினைப்பது வீரம் தான் என்றாலும் தானாக மாய்த்துக் கொள்ளக் கூடாது)
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is believed that the Yak would quit its life if it loses its hair. Likewise, the great honorary persons would say that why should be alive when they lose their dignity of their family. Common advice: (Despite thinking life is silly by means of bravery, one should not quit his live).
- MAHENDIRAN V
------------------
குறள் 970:
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும் உலகு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மானமிழந்து வாழ்வதை விட மானத்துடன் மாள்வதே மேல் என்றுரைப்போரை வியந்துபோய் மதித்து நோக்குமாம் உலகம். (உயிரை துச்சமாக நினைப்பது வீரத்திற்கு தான். தானாக மாய்த்து கொள்ளுதல் கூடாது)
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's said that the world would surprisingly praise ones who say that dying is better than living by losing honours. (Despite thinking life is silly by means of bravery, one should not quit his live).
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Friday, 4 February 2022

திருக்குறள். அதிகாரம் 96. குடிமை CHAPTER. 96. THE PRIDES OF FAMILY AND BIRTH 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 96.
குடிமை
CHAPTER 96.
THE PRIDES OF FAMILY AND BIRTH
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 951:
இற்பிறந்தார் கண்ணல்ல தில்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்குடி பிறந்தாரிடம் மட்டுமே சிறந்த பண்புகளும் நாணமும் ஒரு சேர இயல்பாக காணப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the people who are the high born would have modesty along with their good traits habitually.
- MAHENDIRAN V
------------------
குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உயர்குடி பிறந்தார், ஒழுக்கம் வாய்மை நாணம் ஆகிய பண்புகளிலிருந்து விலகி நிற்க ஆசைப்படார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who are the high born wouldn't desire to leave out the habits of morality, honesty and modestly.
- MAHENDIRAN V
------------------
குறள் 953:
நகையீகை அன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
முகமலர்ச்சி, ஈகை குணம், அன்பு/இரக்கம் அடுத்தவரை இகழா குணம் இந்நான்கும் நிறைந்தோரே நேர்மையான குடியில் பிறந்தவராவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who are having these four good habits such as smiling when meeting others, helping tendency, mercy and being not to blaming others are considered that they are high born in noble family.
- MAHENDIRAN V
------------------
குறள் 954:
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அடுக்கடுக்காய் கோடி பணம் கொடுத்தாலும், நற்குடியில் பிறந்தோர்  குடிப்பெருமையை இழக்கும் செயலை செய்ய மாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The highly born ones would never lose the dignity and prides of their family even if they are paid crores of amount to do an illy act.
- MAHENDIRAN V
------------------
குறள் 955:
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடியில் பிறந்தோர், வறுமை வந்து வாட்டினாலும், கொடை தரும் பண்பை என்றும் நிறுத்தமாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
People who are born in noble family would never stop their trait of  donating to others even if they are in poverty state.
- MAHENDIRAN V
------------------
குறள் 956:
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடிமக்கள், குலப்பெருமைக்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக, பஞ்சம் வந்தாலும் கூட வஞ்சம் நிறைந்த வாழ்க்கைக்கு மாறிவிடமாட்டார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who are highly born in good family would not desire to going to hypocrisy life even if they have scarcity of wealth, because of protecting the pride of their family.
- MAHENDIRAN V
------------------
குறள் 957:
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நற்குடி பிறந்தார் செய்யும் குற்றம் சிறிதாகினும், அக்குற்றம் நிலவு ஒளி போல் வெட்டவெளிச்சமாக தெரிய ஆரம்பித்து விடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a crime (despite being simple) done by ones who are born in noble family would be established as a big one as if the moon is visible on the sky.
- MAHENDIRAN V
------------------
குறள் 958:
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அன்பான குடும்பத்தில் பிறந்தவன் பண்பற்றவனாக நடந்துகொண்டால், அவன் குடும்பப் பெருமை குறைந்து போகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one is immoral in activities though he is born of a noble family, the goodwill of his family would go down.
- MAHENDIRAN V
------------------
குறள் 959:
நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலத்தின் பெருமையை அதில் விளைந்த பயிரின் தரம் காட்டுவது போல், ஒருவரின் நற்ச்சொல் நற்பேச்சு அவன் குடியின் பெருமையை எடுத்துரைக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One's talk would identify the pride of his family as if the plant proves the pride of the land from which it grows.
- MAHENDIRAN V
------------------
குறள் 960:
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒருவர் தன் வாழ்க்கைக்கு நலம் வேண்டுமானால், அவரிடம் இயல்பாக நாணம் வேண்டும், அவர் தன் குலத்திற்கு பெருமை வேண்டுமானால் பணிவு வேண்டும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one wants goodness to his life, he must have habitually the trait of modesty. And if he wants pride for his birth, he must be submissive to society.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖

Thursday, 3 February 2022

திருக்குறள். அதிகாரம் 95. மருந்து CHAPTER 95. MEDICINE (THE NATURAL MEDICINE) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 95.
மருந்து
CHAPTER 95.
MEDICINE
(THE NATURAL MEDICINE)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 941:
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நூல்களில் உள்ளபடி, வாதம் பித்தம் சிலேத்துமம் (கபம்)-அளவு படி உண்டு. இவை  அதிகமானாலும் குறைந்தாலும் நோய் தீரா.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The three humours that tend in one's body such as Vadham, Pitham and kabham should neither hike nor down. Otherwise, it would cause disease.
- MAHENDIRAN V
------------------
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி உணின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செரிமான இடைவெளி விட்டு உணவை முறையாக உட்கொண்டாலே போதும் மருந்தென்றொன்று தேவையில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One shoud give gap for digestion between the times of taking food. The one need not take any medicine.
- MAHENDIRAN V
------------------
குறள் 943:
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பொற்றான் நெடிதுய்க்கும் ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
செரித்தறிந்து அளவறிந்து உணவு உண்பவனே நெடுங்காலம் தன் உடம்புடன் வாழ்வான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One who eats levelly and giving gap between times of taking food  could be maintaing his body for long time.
- MAHENDIRAN V
------------------
குறள் 944:
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உண்ட உணவு செரித்த பின்பு உடல் ஏற்கும் உணவு வகையறிந்து பசித்தப் பின்பு உணவுண்பதே சிறப்பு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's great if one eats food after digestion and knowing which food fit for his body and eating only at the time of hungry.
- MAHENDIRAN V
------------------
குறள் 945:
மாறுபா டில்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபா டில்லை உயிர்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உடலுக்கு ஒத்துவராத உணவை உட்கொள்ளாமலிருப்பதே உடல் நலத்திற்கு உயர்வான மருந்து.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The best medicine is not to eat inappropriate food to one's body's status.
- MAHENDIRAN V
------------------
குறள் 946:
இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அளவறிந்து உணவு உண்பவன் ஆனந்தமாய் இருப்பான்.அளவறியா உணவு உண்பவன் அவதிப்படுவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who eat food limitedly would be pleasant enough. And others would get miseries due to having food unlimitedly.
- MAHENDIRAN V
------------------
குறள் 947:
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பசியின் அளவு அறிந்து உணவு உண்பவனுக்கு எந்தக் கேடும் இல்லை. பசி இல்லாத நேரத்தில் அதிகம் உண்பவனுக்கு அளவிலான நோய் வரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Ones who eat food on time only at the time of hunger, no badness to him. If eating more at the time of no hunger would get diseases a lot.
- MAHENDIRAN V
------------------
குறள் 948:
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நோய் வந்த ஒருவருக்கு அந்த நோய் அவருக்கு எப்படி வந்தது என்று ஆராய்ந்து அந்த நோயைத் தீர்ப்பதற்கு அவரின் உடல் நிலை அறிந்து ஆராய்ச்சி செய்து மருத்துவம் பார்ப்பவரே மருத்துவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The good treatmentor is one who knows the type of sick, how it did come, what is the remedy to cure according to the status of the body of the patient.
- MAHENDIRAN V
------------------
குறள் 949:
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நோயுற்றவரின் வயது, நோயின் தன்மை, காலம் அறிந்து வைத்தியம் பார்ப்பவரே கற்றறிந்த மருத்துவராவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The well learned doctor is one who knows the age of the patient, type of sick, duration of sick tending in the body of the patient.
- MAHENDIRAN V
------------------
குறள் 950:
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நோயுற்றவர், வைத்தியர், மருந்து மற்றும் மருந்து உற்பத்தியாளர் இந்நான்கு தன்மைகளை உள்ளடக்கியது தான்  மருத்துவ கலை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The medical domain intents the four sub domains such as patient, doctor, medicine and the manufacturer of the medicine.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Wednesday, 2 February 2022

திருக்குறள். அதிகாரம் 94. சூது CHAPTER 94. GAMBLING 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்.
அதிகாரம் 94.
சூது
CHAPTER 94.
GAMBLING
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 931:
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூது விளையாட்டில்  வென்றாலும் தொடர்தல் கூடாது. அவ்வெற்றி தூண்டிலின் இரைக்கு மீன் அகப்பட்டது போலாகும். (ஒரு கட்டத்தில் தூண்டிலுடன் நம்மையும் மீன் நீருக்குள் இழுத்து விடும்.)
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's better to stop playing gambling even if getting victory. Such victory is like the prey tighten in the iron bar is swallowed by fish. One fine day the fish would pull out us into the water.
- MAHENDIRAN V
------------------
குறள் 932:
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மடங்கை பெற்று, நூறு மடங்கை இழக்க வைக்கும் விளையாட்டு தான் சூதாட்டம். நல்வாழ்வு பெற வாய்ப்பே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Gambling is the game that provides one part for making the player be pleasant, later it would pluck off hundred part from him. No chance at all to have a good life.
- MAHENDIRAN V
------------------
குறள் 933:
உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு முறை வந்த லாபம் மீண்டும் மீண்டும் வரும் என்று சூதாடினால் பணம் அனைத்தையும் இழக்க நேரிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one expects that he would get gain again and again because of getting gain initially during gambling, the entire money would be lost.
- MAHENDIRAN V
------------------
குறள் 934:
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன் றில்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பத்தையும் தந்து, புகழையும் கெடுக்கும் சூதாட்டத்தைப் போல் ஒருவருக்கு வறுமையை தரக்கூடிய ஒன்று வேறெதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing would cause big poverty as if gambling causes since it would spoil one's life by destructing fame and providing misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூதாடும் சூட்சுமம் அனைத்தும் அறிவேன் என்ற பெருமையுடன் ஒருவன் (உண்மையிலேயே அவன் அறிந்திருந்தாலும்) தொடர்ந்து விளையாண்டால், பொருளிருப்பு அனைத்தையும் அவன் இழப்பான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one is saying that he is an expert in gambling and he knows the tricks, and also if he resumes gambling, he would lose his stock of entire wealth.
- MAHENDIRAN V
------------------
குறள் 936:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூதெனும் தரித்திரத்தில்  விழுந்தவர் சரியான நேரத்தில் பசி தீர உணவும் உண்ணாமல்  துன்பப்படுவர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one falls on the destitutive domain namely gambling, he could not have his food ontime and also he would meet out misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூதாடும் களமே நிரந்தர இருப்பிடம் எனும் அளவுக்கு அதில் மூழ்கிப் போனவர்கள், மூதாயர்களின் செல்வம் மட்டுமல்ல,  நற்பண்புகளையும் இழப்பர்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one tends in the ground of gambling as a permanent station, he would lose not only the wealth earned by his ancestors but also his good traits.
- MAHENDIRAN V
------------------
குறள் 938:
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்
தல்லல் உழப்பிக்கும் சூது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூது, பொருளை விழுங்கும். பொய் புரட்டு பேசவைக்கும். அருளை கெடுக்கும். ஈடில்லா துன்பத்தை தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Gambling would swallow the wealth. It would make one fraud and make speak lie. Graces would go away. It would provide incomparable misery.
- MAHENDIRAN V
------------------
குறள் 939:
உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சூது, உடை செல்வம் உணவு புகழ் கல்வி ஆகிய ஐந்து முக்கிய அம்சங்களை ஒருவனிடமிருந்து விலக்கிவிடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Gambling would pluck out the five prime properties such as cloths, wealth, food, fame and education from the gambler.
- MAHENDIRAN V
------------------
குறள் 940:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற் றுயிர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் தொடர்ந்து வர வர, வாழ விரும்பி உயிர் மீது ஆசை கொள்வது போல், சூதாட்டத்தில் பொருளை இழக்க இழக்க அதன் மீது நாட்டம் அதிகரிக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if one is eager to life when he meets out often misery, the one would be attracted more by gambling when he is gambling again and again.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Tuesday, 1 February 2022

ONLINE-COMM.ENGLISH COACHING

MGE. 

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA

MOBILE 9842490745

ONLINE-COMM.ENGLISH

COACHING.


ONLINE CLASS.

FEE. RS.1500 per 20 hours.

Daily one hour at your optional time.


The class would be going on through

W.App or Google meet.


MAHENDIRAN V

FOUNDER.


Browse:

MAHENDIRANGLOBALENGLISH.BLOGSPOT.COM

திருக்குறள். அதிகாரம் 93. கள்ளுண்ணாமை CHAPTER 93. NOT TO CONSUME LIQUOR 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள். அதிகாரம் 93. கள்ளுண்ணாமை
CHAPTER 93.
NOT TO CONSUME LIQUOR
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
குறள் 921:
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதுப் பிரியர்கள் தான் சமூகத்திற்கு அஞ்சவேண்டும். சமூகம் அஞ்சாது. மேலும் மட்டு மரியாதையை இழப்பார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Only the liquor consumer should be afraid of the society. The society need not be afraid of for his action. Moreover, he would lose entire dignity of him.
- MAHENDIRAN V
------------------
குறள் 922:
உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதுவை துறப்பது நல்லது. சான்றோரிடம் நற்பெயர் வேண்டாம் என்பவர்கள்தான் மதுவை விரும்புவார்கள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's better to stop consuming liquor. If one doesn't want to earn goodwill from the grest persons, he may desire it.
- MAHENDIRAN V
------------------
குறள் 923:
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மது அருந்தி பெற்ற தாய் முன்பு நிற்பது கொடுமை. அதுவும் சான்றோர் முன் நிற்பது கொடுமையிலும் கொடுமை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Standing with drunken stage infront of his mother is sinful. Also standing by the same stage infront of  the great is the most sinful.
- MAHENDIRAN V
------------------
குறள் 924:
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நாணம், மானம் என்ற நற்குனங்கள் நிறைந்தவள் கள்ளுண்டவனை விட்டு விலகி ஓடிவிடுவாள். மரியாதை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The good feminine who has shyness and respectfulness will leave away from the drunken guy. He would stand on Street by losing all his respects.
- MAHENDIRAN V
------------------
குறள் 925:
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மது அருந்தும் அறியாமைச் செயல், விலை கொடுத்து குற்றத்தை வாங்குவதற்கு ஒப்பாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The sense of ignorance of drinking habit is equallent to buying crimes by paying money.
- MAHENDIRAN V
------------------
குறள் 926:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நஞ்சு உண்டு இறப்பவருக்கும், கள்ளுண்டு மயங்கி உறங்குபவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
There is no much difference between the person who died and laid on Street due to eating poison and laid on Street by drinking liquor.
- MAHENDIRAN V
------------------
குறள் 927:
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உள்ளுரில் மறைந்து நின்று கள்ளுண்டால் ஊரார் அறியமாட்டார் என்றில்லை, கள்ளுண்ட கண்களும் மயக்கமும் காட்டிக் கொடுத்து எள்ளி நகையாடப்படுவார்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It's not like that local colleagues wouldn't know if one drinks liquor hiding. The eyes and dizzy of one who is drunken would identify it and he would be laughed at as shamefully by the society.
- MAHENDIRAN V
------------------
குறள் 928:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉம் ஆங்கே மிகும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மது அருந்தி, அருந்தேன் நான் எனச் சொல்வது பொய் மட்டுமல்ல மடைமையும் கூட. மயக்கமும் ஆட்டமும் தானாய் உண்மையை சொல்லும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
After drank, if one says that he hasn't drunk, that is not only lie but also foolish. Dizzy and shaking walk would say the fact.
- MAHENDIRAN V
------------------
குறள் 929:
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மதுவுக்கு அடிமையானவனை திருத்த முயற்சிப்பதும், நீருக்குள் மூழ்கியவனை தீப்பந்தம் கொண்டு தேடுவதும் ஒன்று தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Both, treating the drinking habitual one and searching the person who has sunk in the water by having a fire lamp are same.
- MAHENDIRAN V
------------------
குறள் 930:
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒரு மது விரும்பி அருந்தா நிலையில், மற்றொருவன் மது அருந்தி விழுந்து புரண்டு சீரழியும் போக்கை கண்டாவது மதுவை நிறுத்தவில்லை என்றால் அவன் மனித பிறப்பே இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If a drunken guy can't change himself right even after seeing the disgusting status of an another one drunken person who has uglily sleeping on Street, he cannot be added in the human list.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖


Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE