Greetings, If you are an institution and in need my personal seminar class that to be conducted at your institution, please call me. I'll assign hours and date or you may fix the same. However, based on the availability of time from my side, the date and time shall be confirmed. Likely I conduct this seminar by entitling ENGLISH AS A FOREIGN LANGUAGE. Also the same is available by online. MAHENDIRAN V VISITING FACULTY OF ENGLISH AND SOFT SKILLS Email poigaimahi@gmail.com WhatsApp 9842490745
Thursday, 28 April 2022
திருக்குறள் அதிகாரம் 120. தனிப்படர் மிகுதி CHAPTER 120. SOLITARY ANGUISH ( Worries due to being alone) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
Sunday, 24 April 2022
திருக்குறள் அதிகாரம் 119. பசப்புறு பருவரல் CHAPTER 119. HUE PALLID (HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER) 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள்
அதிகாரம் 119.
பசப்புறு பருவரல்
CHAPTER 119. HUE PALLID
(HER COLOUR BECOMES PALLID DUE TO SEPARATION OF LOVER)
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1181:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குரைக்கோ பிற
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அவரின் விருப்பப்படி பிரிவுக்கு சம்மதித்தேன். பிரிவால் என் மேனி பசலைக் காண்கிறதே (வெளிர்ந்து போகிறதே, எனது இயற்கை நிறம் மாறுகிறதே) அதை நான் யாரிடம் போய் சொல்வேன்?
- வை.மகேந்திரன்
Explanation in English:
I consented when he had asked me for separation. Being so, My entire body gets a kind of PASALAI status. (PASALAI means that a kind of change of colour from normal to white or brownish on body or skin). Whom can I complain with for this error?
- MAHENDIRAN V
------------------
குறள் 1182:
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
என் மேனியில் படரும் இந்த பசலை நிறம், உன்னவர் உனை பிரிந்ததால் வந்த பரிசு என என்னிடம் நகைத்துச் சொல்லி ஊர்ந்து படர்வதாக உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
I feel that the PASAL itself blames me that this status is a gift for me because of the separation of our love, and it joyfully spreads over my body.
- MAHENDIRAN V
------------------
குறள் 1183:
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அவரது பிரிவால் என் அழகையும் வெட்க்கத்தையும் இழந்து காதல் துன்பத்தையும் பசலை நிறத்தையும் தான் ஈடாகப் பெற்றேன்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
In fact, What I feel is that I got misery and this PASAL status as a compensation by losing my shyness and my beauty because of the separation of our love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1184:
உள்ளுவன் மன்யான் உரைப்ப தவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அவர் நினைவே எனக்கு. அவரது பெருமைப் பற்றிதான் தினமும் பேசுகிறேன். இருந்தும் என் மேனி பசலைநிறம் கண்டது எப்படி? வஞ்சனை அல்லது சாபமாக இருக்குமோ?
- வை.மகேந்திரன்
Explanation in English:
Whereas I am always thinking and talking about the prides of my man, I'm surprised of my getting this PASAL disease on my body. I suspect whether it is a deception or curse done by anybody.
- MAHENDIRAN V
------------------
குறள் 1185:
உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென்
மேனி பசப்பூர் வது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
என் காதலர் பிரிந்து சென்றது தான் தாமதம், அதற்குள் என் மேனி முழுதும் பசலைநிறம் படர்ந்து போனது தான் ஆச்சரியம்!
- வை.மகேந்திரன்
Explanation in English:
The big surprise is, No sooner my spouse left out from me than the PASAL disease started to spread over on my body!
- MAHENDIRAN V
------------------
குறள் 1186:
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கண்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
விளக்கொளியை கண்டதும் இருள் உடனே விலகி ஓடுவிடுவதை போல, அவரது தழுவல் சற்று விலகியதும் என் மேனியில் பசலை நிறம் படர ஆரம்பித்து விடுகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
As if the dark would fly away as soon as getting light of enlightening the lamp, the PASAL would start to spread over my body when my man stops his hugging on me.
- MAHENDIRAN V
------------------
குறள் 1187:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அவரைத் தழுவிக் கிடந்தேன் யாதொரு துன்பமும் இல்லை. கொஞ்சம் தள்ளி நகர்ந்தேன், என் மேனி எங்கும் பசலை படர்ந்தது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
When I am hugging my man with love, no any misery is found to be. But when he or I leave out the hugging, PASAL starts to spread over my body.
- MAHENDIRAN V
------------------
குறள் 1188:
பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பசலைப் படர்ந்தாள் இவள்- என்று எள்ளி நகையாடும் இந்த உலகம், இவளை விட்டு பிரிந்து இவளை துன்பத்தில் ஆழ்த்திவிட்டாரே - என்று கூறாதது தான் துயரம்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
What the big misery is, 'The world which is always ready to blame me as I got PASAL on my body would not ready to put sympathy on me for the separation of our love.'
- MAHENDIRAN V
------------------
குறள் 1189:
பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
எனை பிரிந்து, எனை அவர் துயரத்தில் ஆழ்த்தியது இருக்கட்டும். பிரிந்தவர் நலமுடன் இருக்கிறார் என்றாலே போதும். என் மேனி மேலும் பசலைக் கொண்டாலும் மகிழ்ச்சியே.
- வை.மகேந்திரன்
Explanation in English:
What I am being worried of our separation of love is not a matter. If my man is healthy and well wherever he is, that is pleasant news to me. I would not bother about the PASAL being over my body.
- MAHENDIRAN V
------------------
குறள் 1190:
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
எனை சம்மதிக்க வைத்து பிரிந்து சென்ற என் அவரை உலகம் தூற்றாமல் இருந்தாலே போதும். என் மேனியில் பசலைப் படர்ந்ததை இவ்வூர் மக்கள் ஏசுவதைக் கூட நான் பெரிதாக கருதமாட்டேன்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
If the world is not blaming or accusing my man as he leftover me, that's enough. I will never bother the giggling words of this world blaming me for my carrying PASAL over my body.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖
Wednesday, 20 April 2022
திருக்குறள் அதிகாரம் 118. கண் விதுப்பழிதல் CHAPTER 118. EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள்
அதிகாரம் 118.
கண் விதுப்பழிதல்
CHAPTER 118.
EYES ARE REALISING THE DEPTH OF MY LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
கண்டதால் தானே இன்பமாக கொல்லும் இந்த காதல் ஏற்பட்டது? அவரை காண விடு என அந்த கண்கள் இப்பொழுது கெஞ்சுவது தான் ஏனோ!
- வை.மகேந்திரன்
Explanation in English:
Because the eyes saw him and caused me the love on him. Being so, Why are those eyes begging me that I have to let them to see him again?
- MAHENDIRAN V
------------------
குறள் 1172:
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
துன்பம் வரும் என அறியாது இன்பத்துடன் காதலில் வீழ்ந்த இந்த கண்கள் தன்னால் தான் இத்தனை துயரம் என்பதை உணராது துன்பம் கொள்வது நியாமாகுமா?
- வை.மகேந்திரன்
Explanation in English:
The eyes that fell down in love without knowing that miseries would be caused due to the love is worried out of those miseries, how is it justicious?
- MAHENDIRAN V
------------------
குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
முன்னேச் சென்று முதல் ஆளாய் நோக்கி காதல் செய்த இந்த கண்கள் அதே காதலை நினைத்து அழுவது நகைப்பிற்குரியது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
What the eyes which had forwarded fast as the first person and fell down in love are crying due to the same love is laughable one.
- MAHENDIRAN V
------------------
குறள் 1174:
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதல் என்ற பெயரில் துயரம் தந்த என் கண்கள், என்னை தம்பிக்கவும் விடாமல் கண்ணீர் வற்றிப் போய் தானும் அழ முடியாமல் தவிக்கிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The eyes that had gifted me sadness a lot namely love is not providing me a way to escape and they are also unable to cry due to scarcity of tears.
- MAHENDIRAN V
------------------
குறள் 1175:
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
கடலினும் பெரிதாம் காதல் எனக் கூறி துன்பத்தை வாங்கிய கண்கள் இன்று உறங்க முடியாமல் வருந்துகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The eyes which got wantonly the misery by thinking that the love is greater than the ocean is saddening today due to not able to sleep.
- MAHENDIRAN V
------------------
குறள் 1176:
ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
ஒரு வகையில் இனிதாய் நான் உணர்கிறேன் ஏனெனில், எனை இக்காதல்-துன்பத்தில் விழவைத்து துவளவைத்த என் கண்களும் துன்பப்பட்டு வருந்துகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Anyway I feel a bit happy because the eyes which made me to fall in this love misery for suffering a lot is also meeting out a big misery and crying.
- MAHENDIRAN V
------------------
குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அன்று விரும்பி விரும்பி காதலித்து இன்புற்ற கண்களே இன்று அவரை பிரிந்து பிரிந்து பேதலித்து உன் கண்ணீர் வற்றி போகட்டும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Oh my eyes who was willingly loving deeply for being pleasant on that day, May you sink in the sadness by crying atmost till the tears dries out today!
- MAHENDIRAN V
------------------
குறள் 1178:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
உவந்து முகர்ந்து விரும்பாமல் வெறுமனே என்னை காதலித்த அவரை பிரிந்து என் கண்கள் நிலை கொள்ளாமல் உளதே ஏன்?
- வை.மகேந்திரன்
Explanation in English:
Why do my eyes unnecessarily not in stable for this separation of love while my man had just merely loved me without showing any soulful benevolence in the past?
- MAHENDIRAN V
------------------
குறள் 1179:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
வாரா சமயத்தில் எப்பொழுது வருவாரோ என கண்கள் தூங்காமல் காத்திருந்தன. வந்தவர் பிரித்து விடக்கூடாதே என கண்கள் விழித்திருக்கின்றன. இது தான் துன்பத்தில் ஒரு இன்பமோ?
- வை.மகேந்திரன்
Explanation in English:
My eyes got stabled in the entrance to looking for his arrival without even a drop of sleep when he didn't visit often then days. Now the same eyes aren't sleeping due to a kind of fear that he should not leave from me. Is it the pleasance caused by the misery?
- MAHENDIRAN V
------------------
குறள் 1180:
மறைபெறல் ஊராக் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பறை ஒலியால் ஊர் விழிப்பதுபோல் என் கண்கள் அழுவதால் அவ்வொலி கேட்டு ஊரார் விழித்து எம் காதலை எளிதில் அறிந்து கொள்வர்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The people are easily noticing the depth of my love due to my loud cry as if people are waking up owing to hearing the traditional drums sound.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖
Wednesday, 13 April 2022
திருக்குறள் அதிகாரம் 117. படர்மெலிந் திரங்கல் CHAPTER 117. BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள்
அதிகாரம் 117.
படர்மெலிந் திரங்கல்
CHAPTER 117.
BEING SADDENED BY THINKING THE LOVER WHO IS FAR AWAY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்
கூற்றுநீர் போல மிகும்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
ஊற்று நீர் இறைக்க இறைக்க தானே மேலும் ஊறும். அது போல, எம் காதலை மறைக்க மறைக்க தான் அது மிகுதியாகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
As if water is secreted more and more in the well when the water is pulled out often, our love too gets strengthened more and more when it is suppressed strongly.
- MAHENDIRAN V
------------------
குறள் 1162:
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்
குரைத்தலும் நாணுத் தரும்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலின் உக்கிரத்தை மறைக்க வழியும் தெரியவில்லை, அவரிடம் அதை கூற நான் முயலும்பொழுது எனக்கு வரும் நாணத்தை மீறவும் முடியவில்லை.
- வை.மகேந்திரன்
Explanation in English:
I could neither find the way to hide my love on him nor I could dominate the shy that I get when I try to say this matter to him.
- MAHENDIRAN V
------------------
குறள் 1163:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதல் தரும் இன்ப வலியை எடுத்து கூற இயலாத துன்ப நிலை ஒரு புறம்; மறுபுறம் அதிக அளவு வெட்க்கம். என் இவ்வுடம்பின் அகஉயிர் ஒரு காவடி போல் அப்புறமும் இப்புறமும் ஆடுகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
My soul in this body is dangling here and there like a Cavadi-bar because I have weight on both side. I get shy one side because of love. I feel misery because of the same love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1164:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
எம் காதல்நோய் கடலினும் பெரிது. அதை கடக்க பாதுகாப்பான படகு என்னிடம் இல்லையென்பதே இங்கு செய்தி.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The pleasant disease of our love is bigger than sea. The matter is that I couldn't avail a safety boat to cross that sea.
- MAHENDIRAN V
------------------
குறள் 1165:
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதல்-இன்ப பயணத்தில் இனிமை என்கிற துன்பத்தை தரக்கூடிய என்னவர், பகை வந்தால் எனை காக்க என்ன செய்வாரென்று தெரியவில்லை.
- வை.மகேந்திரன்
Explanation in English:
My man can bring a pleasant pain during our lush travel. But I am not sure what he would take decision if we meet eneminess.
- MAHENDIRAN V
------------------
குறள் 1166:
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காமத்தில் இணைந்து லயித்திருக்கும்பொழுது ஏற்படும் இன்பம் கடல் போன்றதாக உணர்கிறேன். அது ஏற்படுத்தும் துன்பத்தின் அளவோ அக்கடலை விட பெரிதானதாகும் என்பதும் எனக்கு தெரியும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
I feel the pleasance like sea when we travel on lush. I know well that the misery caused by the same lush would be larger than the sea.
- MAHENDIRAN V
------------------
குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காமக்கடலில் நீந்தி கரைகண்டவர் எவரும் இல்லை. அதனால் தான் இரவு முழுதும் விழித்திருக்கிறேனோ?
- வை.மகேந்திரன்
Explanation in English:
None has found the shore on swimming on the lush sea. So that Am not I sleeping throughout the nights?
- MAHENDIRAN V
------------------
குறள் 1168:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
எல்லோரையும் தூங்க வைத்துவிட்டு தான் மட்டும் விழித்திருக்கும் இந்த இரவு-க்கு நான் மட்டுமே துணை.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Only I am the assistant to the Night that is not sleeping but it makes all sleep.
- MAHENDIRAN V
------------------
குறள் 1169:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இந்த இரவு என்கிற காலம், தான் எடுத்துக் கொள்ளும் நெடு நேர பயணம், காதலர்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் துன்பத்தை விட மோசமாக உள்ளதே?
- வை.மகேந்திரன்
Explanation in English:
The very long time taken by the one namely Night is worse than the misery of separation of love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1170:
உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோவென் கண்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
என் மனம் சொல்வது போல் என்னவர் இருக்கும் இடத்தை தேடிச் சென்று நான் அவரை கண்டிருந்தால், என் கண்கள் வெள்ளமாய் நீரை கொட்டியிருக்காது!
- வை.மகேந்திரன்
Explanation in English:
As my mind said if I had reached my lover's spot by meeting a deep search, my eyes wouldn't have sppilled out this amount of flood of tears.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖
To read all couplets, visit
https://mahendiranglobalenglish.blogspot.com/?m=1
Monday, 11 April 2022
திருக்குறள் அதிகாரம் 116. பிரிவு ஆற்றாமை CHAPTER 116. WORRIES OF SEPARATION OF LOVE. 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள்
அதிகாரம் 116. பிரிவு ஆற்றாமை
CHAPTER 116. WORRIES OF SEPARATION OF LOVE.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1151:
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
நீ என்னைவிட்டு பிரிவதில்லை என்றால் மட்டும் என்னிடம் சொல். பிரிந்து போவதாக இருந்தால் நீ திரும்பிவரும்பொழுது உயிருடன் இருக்கும் இந்த மக்களிடம் சொல்லிவிட்டு செல். அது எனக்கான செய்தியல்ல.
- வை.மகேந்திரன்
Explanation in English:
If you are assure that you would never leave me, you can say to me bye. If you leave me permanently, say your bye to these people who are going to be alive when you return.
- MAHENDIRAN V
------------------
குறள் 1152:
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
முன்பெல்லாம் அவரை கண்டாலே இன்பம் பெருகும். பிரியப்போகிறோம் என்பதனால் இப்பொழுதெல்லாம் தழுவும்பொழுது கூட துன்பம் வாட்டுகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Earlier, I would feel so pleasant even if he pays his sight on me. But nowadays I am very much worried out even on his hugging because I notice that we are to leave with each other.
- MAHENDIRAN V
------------------
குறள் 1153:
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலர்கள் பிரிவது என்பது இயல்பாம். எனவே அறிவு நிறை என்னவர் பிரியேன் எனச் சொல்வதை என்னால் உறுதி செய்ய இயலவில்லை.
- வை.மகேந்திரன்
Explanation in English:
It is said that separation of lovers is usual. So I wouldn't be able to put on trust his saying that he wouldn't leave me alone.
- MAHENDIRAN V
------------------
குறள் 1154:
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க் குண்டோ தவறு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இணையும் பொழுது நமக்குள் பிரிவு என்பதே இல்லை அஞ்சாதே என கூறியவர், இப்பொழுது நாம் பிரிகிறோம் என்கிறார். அவர் பேச்சை நான் நம்பியது எப்படி என் குற்றம் ஆகும்?
- வை.மகேந்திரன்
Explanation in English:
He had promised strongly when we fell on love that we would never leave with each other. He says now simply that we are to leave with each other. Is it my fault what I had believed his words?
- MAHENDIRAN V
------------------
குறள் 1155:
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அவர் எனை விட்டு பிரியாச் சூழ்நிலை எனக்கு ஏற்படவேண்டும். ஏனெனில், காதலர்கள் பிரிந்தால் கூடுவது அரிது எனும் சோகம் எனை வாட்டுகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
I need the state that I ought not to leave from him. Because, I am hearing if the lovers are separated they can't rejoin. I am worried a lot in this regard.
- MAHENDIRAN V
------------------
குறள் 1156:
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பிரிகிறேன் எனச் சொல்ல துணிந்த என்னவர், திரும்ப வந்து அதே அன்பை என்னிடம் காட்டுவார் என நம்புவது வீண் ஆவல்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
While he dared to saying frankly that he is leaving from my heart, how could I believe that he would come back to me and show the same kind of love?
- MAHENDIRAN V
------------------
குறள் 1157:
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
கழலாத என் வளையல்கள் அவர் பிரிவால் கழற்றப்பட்டு நாங்கள் பிரிந்த செய்தி ஊராரால் தூற்றப்படுமோ என அஞ்சுகிறேன்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Really I am in misery deeply because the entire people would notice and giggle at me of our love-separation when my beautiful bangles would be removed from my hands on the time of our leaving with each other.
- MAHENDIRAN V
------------------
குறள் 1158:
இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அன்புமிக்க உறவினர்களை பிரிந்து வாழ்வது துன்பமானதுதான். துன்பத்திலும் துன்பமானது யாதெனில், காதலர்கள் பிரிவது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The deep misery is that leaving benevolent colleagues from us. The deepest misery is that lovers are leaving with each other (the separation of love).
- MAHENDIRAN V
------------------
குறள் 1159:
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தீயை தொட்டால் தான் சுடும். தொடாவிடில் எப்படி சுடும்? காதல் பிரிவின் துயரமோ அனுதினமும் சுட்டுக்கொண்டிருக்கும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The fire would not burn us when we don't touch it. It would burn only when we touch it. But the evil state of separation of love would be burning at all time.
- MAHENDIRAN V
------------------
குறள் 1160:
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
பிரியும்பொழுது மணம் ஒப்பாமல் பின் மணம் ஒப்பி, பிரிந்த துயரத்தை பொருத்துக்கொண்டு உயிர் வாழும் காதலர்கள் பலர் இருக்கிறார்கள் தான்!
- வை.மகேந்திரன்
Explanation in English:
Anyway, although having a lot sadness because of separation of love, still many people are living on this earth passing out their miseries by agreeing the separation but unable to digest it earlier.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖
To read all couplets, visit
https://mahendiranglobalenglish.blogspot.com/?m=1
Friday, 8 April 2022
திருக்குறள் அதிகாரம் 115. அலர் அறிவுறுத்தல் CHAPTER 115. RUMOURS POPULARISE THE LOVE MATTER 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள்
அதிகாரம் 115.
அலர் அறிவுறுத்தல்
CHAPTER 115.
RUMOURS POPULARISE THE LOVE MATTER
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1141:
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
மக்கள் எங்கள் காதலை அவதூறாக பேசுவதால் தான் எங்கள் காதல் நிலைத்து நிற்கிறது. பேசுபவர்களுக்கு இது தெரியாது என்பது என் பாக்யம்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Only because of the rumourers, our love is getting strength. They aren't aware of it is my virtue of course.
- MAHENDIRAN V
------------------
குறள் 1142:
மலரன்ன கண்ணாள் அருமை அறியா
தலரெமக் கீந்ததிவ் வூர்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
மலர் போன்ற விழியுடைய என்னவளின் பெருமையறியாது எங்கள் காதலை அவதூறு பேசுவது ஒரு வகையில் எனக்கு நல்லதாய் போயிற்று. பேசப்பேசத்தானே காதல் வலுக்கும்!
- வை.மகேந்திரன்
Explanation in English:
Anyway, the speech done by the backbiters without knowing the prides of my lover who has eyes like flowers is my goodness, because the love would flame more and more due to this type of talk.
- MAHENDIRAN V
------------------
குறள் 1143:
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
எம் காதல் கதையை ஊரார் அசைபோடாமல் போனால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்காது. பேசட்டும், பெறமுடியா நன்மை பெற்றதுபோல் உணர்வை அது ஏற்படுத்தும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Surely I wouldn't get happiness if the society didn't chew our love story. I am letting them chew, because I can realise that I have gotten some good thing that is not so easy to get.
- MAHENDIRAN V
------------------
குறள் 1144:
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
ஊராரின் அலரால் (தூற்றுதலால்) தான் எம் காதல் வளமடைகிறது. இல்லேல் எம் காதல் அதன் தனித்தன்மையை இழந்திருக்கும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
My love is strengthened well and good only because of the rumour spread by people. Otherwise my love would have lost its dignity.
- MAHENDIRAN V
------------------
குறள் 1145:
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தூற்றுதலால் எம் காதல் மேலும் மேலும் வளமடைவது, கள்ளுண்போர் உண்டு உண்டு களிப்புற்று கள்ளையே காதலிப்பது போலுள்ளது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
What my love is getting growth a lot due to rumours of people is like the drunkers are sinking on dizzy at most owing to continual drinking.
- MAHENDIRAN V
------------------
குறள் 1146:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலர்கள் கண்டதும் பேசியதும் ஒரு நாள் தான், ஆனால் மக்களின் பேச்சோ "நிலவதனை பாம்பு விழுங்கிற்று" என்று கிரஹணத்தை பற்றி பேசுவது போல் காட்டு தீ போல் பரவிற்று.
- வை.மகேந்திரன்
Explanation in English:
In fact, the lovers met with each other only one day. But the rumour spread across the town like a talk of eclipse as if the snake has swallowed the Moon.
- MAHENDIRAN V
------------------
குறள் 1147:
ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளுமிந் நோய்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
ஊராரின் அலர் பேச்சு எருவாயிற்று. அன்னையின் கண்டிப்போ நீராயிற்று. எம் காதல் பயிர் நீண்டு வளர இவைதான் காரணம்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The rumour spread by people has been like fertilizer; my mother's oppose has been like water. These are the cores for the strength of my love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1148:
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
ஊராரின் அலர் (தூற்று) பேச்சு எம் காதலை கட்டுப்படுத்தும் என்பது எப்படி இருக்கிறது என்றால், நெய்யினை ஊற்றி நெருப்பை அணைப்பது போலுள்ளது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
People expect that their rumours would contoll our love. Do you know how it is ? It's like that the action of putting off fire by pouring Ghee a lot on fire.
- MAHENDIRAN V
------------------
குறள் 1149:
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம் பென்றார்
பலர்நாண நீத்தக் கடை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
தூற்றுபவர்கள் நாணும்படி என்னவர் என்னிடம் அஞ்சவேண்டாம் என்றுரைத்து சென்றிருக்கும்பொழுது, நான் எதற்கு ஊரார் முன் நாணவேண்டும்?
- வை.மகேந்திரன்
Explanation in English:
While my lover had promised me by encouraging not to fear for anything as far as people have to shy, why should I shy for these people's talk?
- MAHENDIRAN V
------------------
குறள் 1150:
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்குமிவ் வூர்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
ஊராரின் தூற்றுப் பேச்சை நான் விரும்பும் பொழுது என்னவரும் விரும்பிவந்து எனை ஏற்றுக்கொள்வார்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
While I am not bothering the rumours of these people and I like that very much, my lover too would like to accept me and would bring me with him.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖
Sunday, 3 April 2022
திருக்குறள் அதிகாரம் 114. நாணுத் துறவுரைத்தல் CHAPTER 114. CONDEMNING THE OPPOSERS OF LOVE 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
திருக்குறள்
அதிகாரம் 114.
நாணுத் துறவுரைத்தல்
CHAPTER 114.
CONDEMNING THE OPPOSERS OF LOVE
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH, WRITER, TRANSLATOR, TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1131:
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலின் மிகுதியால், காதல் கைகூடாமல் போய் வருந்துபவர் துறவிபோல் சாம்பல் பூசித் திரிந்து தன் துயரத்தை போக்குவதைவிட வலிமையானச் செயல் வேறெதுவுமில்லை.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Because of mad passion on love, there is no any other strong protest against opposers of love like the lover does the protest by applying ash on whole body and roaming here and there.
- MAHENDIRAN V
------------------
குறள் 1132:
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலின் பிரிவின் துயரத்தை தாங்கிக்கொள்ள முடியாத இந்த உடலும் உயிரும் மடலேறும் நிலை அடைய துணிகின்றன.
(குறிப்பு: மடலேறுதல் என்பது, காதலி தன்னை விரும்பியும்கூட, ஏதோ காரணத்தால் அவளை அடையமுடியாத சூழ்நிலையில், காதலன் பித்து பிடித்தவன் போல் உடலில் சாம்பலைப் பூசிக்கொண்டு கிரீடம் போல் பனை ஓலைகளை குதிரைகளின் தலையில் கட்டி அக்குதிரையில் அமர்ந்து அங்கும் இங்கும் சுற்றி வருவது. இது ஒரு விதமான எதிர்ப்பு. தன்னை வருத்தி கொள்வது)
- வை.மகேந்திரன்
Explanation in English:
Because of not able to realise the grief of the separation of love, this body and soul dare to reach the level of maladaptation.
(Note: MADALERUTHAL means, when a girl loves a man, but for some reason, the man is unable to reach her so he wraps his body in ashes like a mad and wraps palm leaves around the head of horse. He rides the horse around here and there. This is a kind of condemn activity. Self punishing act.)
- MAHENDIRAN V
------------------
குறள் 1133:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அன்று வெட்க்கமும் ஆண்மையும் உள்ள நல்ல ஆண்மகனாக இருந்தேன். இன்றோ காமப்பிடியில் அகப்பட்டு பட்டுணர்ந்து மடலேறும் நிலையை உணர்கிறேன்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
I was a good man with shame and masculinity that day. Today, I feel caught in a state of misery of love, and feel doing some mad act to retrieve my love.
- MAHENDIRAN V
------------------
குறள் 1134:
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலின் உச்சக் கட்டம் வெள்ளம் போன்றது. அது வெட்க்கம் ஆண்மை ஆகிய படகுகளை விழுங்கிவிடும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The summit of love is like a flood. It will swallow the boats of shame and masculinity.
- MAHENDIRAN V
------------------
குறள் 1135:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
வளையல்கள் அணிந்த இந்த இளம் குமரி, காதல் எனும் நோயை பரிசாக தந்ததோடு மடல் ஏறும் நிலையையும் உருவாக்கி விட்டாள்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The young lady who is wearing beautiful bangles has not only gifted me a disease of love but also made a situation that I have to protest with some mad acts.
- MAHENDIRAN V
------------------
குறள் 1136:
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
இந்த அழகுப்பெண்ணின் காதலினால் தூக்கம் பறிபோய்விட்டது. மடலேறும் நினைவே அடிக்கடி வருகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
I lost my sleep due to the love of this pretty woman. Only the memory that I get sage attire and protesting comes up ofetn.
- MAHENDIRAN V
------------------
குறள் 1137:
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதல் நோய் அவளை வருத்தியும் கூட மடலேறும் முடிவை அவள் மேற்கொள்ளாததிலிருந்தே தெரிகிறது பெண்மை உறுதியானது பெருமைக்குரியது என்று!
- வை.மகேந்திரன்
Explanation in English:
It comes to know that feminism is so strong and proud of, because even if she suffered a lot due to love, she hasn't decided to climb on sage status.
- MAHENDIRAN V
------------------
குறள் 1138:
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதலின் தாக்கம் விசித்திரமானது. ரகசியம் காக்கும் தன்மையை உடைத்துவிடும். இரக்கப்படவைத்து விடும். அனைவரும் அறியும் வண்ணம் செய்துவிடும்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
The impact of love is something different. It would break the secrecy. It would make one be pitied. It would make everyone know the secrecy.
- MAHENDIRAN V
------------------
குறள் 1139:
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
அவள்பால் நான் கொண்டிருந்த காதலை இது நாள் வரை நான் மட்டுமே அறிந்திருந்தேன். (என் மடலேறும் நிலையால்) இப்பொழுது இவ்வூரே அறியப்போகிறது.
- வை.மகேந்திரன்
Explanation in English:
So far, Only I have known about my love put on her. Because of my decision of protesting with mad attire, this town is going to know it.
- MAHENDIRAN V
------------------
குறள் 1140:
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
- தெய்வப்புலவர்
விளக்கம்:
காதல்வயப்பட்டு காதலை அடைய முடியாமல் துன்பப்படுவோரை பார்த்து அத்தகைய துன்பத்தை அனுபவிக்காத அறிவிலிகளே ஏளனமாக நகைப்பர்.
- வை.மகேந்திரன்
Explanation in English:
Only the utter fool guys who haven't experienced with the misery of love would giggle at those who are suffering from love disease.
- MAHENDIRAN V
------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this Explanation and translation work are reserved.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
V.MAHENDIRAN M.A.,M.A., ELT.,
📖📖📖📖📖📖📖📖
Featured post
How to speak this ...?
https://youtu.be/n-KYtqpQ0oE
-
ஆங்கில மொழியின் இலக்கணம் - சுத்த தமிழில் - எழுதியவர் வை.மகேந்திரன் 01. ஆங்கில மொழியின் வெளிப்புற கதவு. எத்தனையோ மொழிகள் உலகில் தொன்றுதொ...