Thursday, 30 June 2022

திருக்குறள் அதிகாரம் 133. ஊடலுவகை CHAPTER 133. THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 133.
ஊடலுவகை
CHAPTER 133.
THE PLEASURES OF FEIGNED CLASHES BETWEEN LOVERS
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1321:
இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர்களிடத்தில் தவறே இல்லாவிடினும், ஒருவருக்கொருவர் ஊடல் செய்து இளைப்பாறுவது போன்று ஒரு சுகம் ஏதும் இல்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if there is no mistake on either of lovers, some kind of pleasant quarrel should be there. because, nothing could pay the most pleasure as if a kind of clash gives.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் சற்றே அன்பை வாடச் செய்து வருத்தம் தந்தாலும் காதலர்களுக்கு அது பெருமை தரக்கூடிய விஷயமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Of course, even if the pleasant clash between lovers causes a kind of pain, it is the most prideful to them.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1323:
புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிலத்தில் நீர் ஒன்றியிருப்பதுபோல்  இணைந்துள்ள காதலர்களிடத்தில் காணப்படும் ஊடலால் ஏற்படும் இன்பம் தேவலோகத்திலும் கிடைக்காது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The immeasurable pleasure caused of the pleasant-clash of the lovers who have merged as if the water is merged with the Earth can never be found even in the world of the lord.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரை தழுவி இன்பம் காணுவதற்கு காரணம் ஊடலே. சமயத்தில் அவ்வூடலில் தான் என்  மன உறுதி வீழ்ந்து போகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reason of my availing the most amount of pleasure during our pleasant time is our pleasant clash we did earlier. I assume only that cracks the strength of my mind.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1325:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தவறே இல்லாமல் போனாலும் அவளுடன் ஊடல் செய்து அவளை . தழுவாதிருப்பதும்கூட ஒருவித இன்பம் தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if I haven't found any fault on her, being without hugging her by having a small clash is also the most pleasure.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1326:
உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
புதிய உணவு உண்பதற்கு முன் முன்பு உண்ட உணவு செரிப்பதே இன்பம். அதுபோல காதலர்கள் கூடுவதில் காணும் இன்பத்தை விட ஊடுவதில் காணும் இன்பமே சுகம் தரும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is healthy only if the past food is digested before eating new food. Likewise sometimes, the pleasant quarrel would offer more pleasure than an intercourse.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1327:
ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடலில் தோற்பவரே வெற்றிகண்டவராவார் என்கிற உண்மை ஊடலுக்கு பின்பு நடக்கும் கூடலின் பொழுது கிடைக்கும் இன்பத்தின்பொழுதுதான் விளங்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The fact of only the one (of the lovers) who gets failed during clash of talk is the winner would be known after getting the pleasure through the intercourse that is done after the clash.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூடி களித்து வியர்க்கும் அளவுக்கு கிடைக்கப்பெற்ற இன்பத்தை மீண்டும் பெறவேண்டுமாயின் அவளுடன் ஊடலொன்று செய்து பெறலாம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If wants to get the pleasure that was obtained as far as sweating a lot through the intercourse, again, the only way is that starting a pleasant clash with her.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஒளி நிறைந்த என் அவளின் ஊடல் நீடிக்கட்டும்; அதை தணிக்க நான் இரங்கும் நிலையும் நீடிக்கட்டும்; இச்செயல்களால் இரவுப் பொழுதும் நீடித்து எங்களுக்கு இன்பம் தரட்டும்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
May the pleasant clash of her lasting; May the stance of my tackling her too would be lasting; Due to that, May this night would be prolonging more, and would offer more pleasure to us!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1330:
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடிக் களைப்படைந்து பின் கூடிக்களிப்படைந்தால் தான் காமத்தின் முழு உருவத்தை உணர முடியும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If the lovers doing intercourse after they meet out some pleasant quarrel with one and another, the perfect pleasure can be obtained.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Sunday, 26 June 2022

திருக்குறள் அதிகாரம் 132. புலவி நுணுக்கம் CHAPTER 132. TECHNIQUES OF PLEASANT CLASHES (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்
அதிகாரம் 132.
புலவி நுணுக்கம்
CHAPTER 132.
TECHNIQUES OF PLEASANT CLASHES
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1311:
பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உனை பார்த்த பெண்ணினத்தார் வியந்து போய் உன் அகன்ற மார்புகளை கண்டு களிப்புற்றதனால் அவற்றை தழுவ என் மனம் தயங்குகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Sorry my dear, whereas all women surprisingly have gazed your broad boobs, I wouldn't like to hug you henceforth.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1312:
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நான் அவருடன் ஊடலில் இருந்தபொழுது அவர் தும்மியதற்கு காரணம் நான் ஊடலை நிறுத்தி அவரை நீடூழி வாழ்க என வாழ்த்துவேன் என்பதற்காகத்தான் என்பதை நான் அறிவேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I notice well that the reason of his sneezing during our clash is that he expect that I would stop the clash on him and I would greet him for his sneeze.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1313:
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கொடிகளில் பூத்தமலர்களை நான் அணிந்துவிட்டால் போதும், யாரோ ஒருத்திக்கு சைகை தெரிவிப்பதற்காக தான் நான் அப்படி செய்கிறேன் என்று ஊடல் செய்வாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if I adore some flowers taken from plants, she would start a clash by means of that I am signalling to someone through such flowers.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1314:
யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எக்காதலை காட்டிலும் நம் காதலே உயர்ந்தது என்று நான் சொன்னால், எனையல்லாது யாருடன் செய்த காதலை காட்டிலும்... யாருடன் செய்த காதலை காட்டிலும்... என்று ஊடலை ஆரம்பிக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I say that only our love is better than any other, she starts a clash by asking with whose love I am comparing and for what.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1315:
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இப்பிறவியில் நாம் பிரியவேமாட்டோம் என்று காதலுடன் அவளிடம் கூறினேன். ஒகோ.... அடுத்த பிறவியில் நாம் பிரிந்துவிடுவோம் என்கிறார்களா? என்று கூறி கண்ணீர்விட்டாள் அவள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
When I say to her that we won't be parted in this birth, suddenly she tears whether I mean that we will be parted in the future birth!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1316:
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவலின்பொழுது உனைத்தான் அனுதினமும் நினைக்கிறேன் என்று நான் கூறினால், ஓகோ.. மறந்ததினால் தானே எனை நினைக்கிறீர்கள்.... எனை உங்களால் மறக்கவும் முடிகிறதா? என தழுவலை விட்டு வம்புக்கிழுக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
During love, if I say that I am always thinking her, suddenly she starts a clash by means of that I am forgetting her that's why I start to think her and she asks how I could forget her.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1317:
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவலின் பொழுது தும்மினேன். ஆயுசு நூறு என்று வாழ்த்தினாள். சிறிது நேரத்தில், அது சரி.... நீங்கள் தும்மும் அளவுக்கு உங்களை நினைத்தது யார் என்று வம்பு செய்தாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
One day, I sneezed during hugging her. She greeted me that I would be living for hundred years. After a few minutes she asked me who did think me so that I sneezed.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1318:
தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தும்மினால் ஊடல் வருகிறதே என்றெண்ணி நான் தும்மலை அடக்க முயன்றால், யாரோ ஒருத்தி உங்களை நினைக்கிறாள் அதை நான் அறிந்துவிடக்கூடாது என்பதற்காகதான் தும்மலை அடக்குகிறீர்கள் என்று ஒரு புதுவித ஊடலை ஆரம்பிக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I forcibly control my sneeze feeling due to avoiding the clash, suddenly she starts a new type of clash that I suppress my sneeze that is raised because some other woman has thought me that's what I feel sneezing and I control it that she should not know that matter!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1319:
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடலை நிறுத்தி அவளை நான் அன்புடன் மகிழ்விக்க முயன்றாலும் இந்த கலையை நீங்கள் யாரிடம் கற்றுக்கொண்டீர் என்றொரு ஊடலை ஆரம்பிக்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I convince her for avoiding clash and lovingly start to hug her, she starts a clash by asking from whom I learnt this skill!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1320:
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அழகைக் கண்டு வியந்து  பொறுமையாக ரசித்தாலும், என் அழகை யாருடன் ஒப்பிட்டு அளவு பார்க்கிறீர் என்று புதுமையாய் ஒரு வம்பை செய்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If I lovingly admire her beautiful structure by gazing her, suddenly she starts a new type of clash with whose structure I am comparing her and I am measuring!
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Thursday, 23 June 2022

திருக்குறள் அதிகாரம் 131. புலவி Chapter 131. THE PLEASANT CLASH. Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V

திருக்குறள்

அதிகாரம் 131. புலவி
Chapter 131. THE PLEASANT CLASH
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1301:
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் (பிணக்கு) செய்து அவரை தழுவாது இருப்பதால் அவர் படும் அந்த வேதனையை கண்டு ரசிப்பதும் ஒரு இன்பம் தான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Enjoying his sadness caused because of being without copulating him even after the pleasant clash is also a kind of pleasance.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1302:
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கூடலுக்கு முன் செய்யும் ஊடலின் அளவு உணவில் உப்பை சேர்ப்பது போன்றதாகும். அளவு கூடிப்போவதும் இல்லாமல் போவதும் உணவின் சுவையை கெடுக்கும். அது போல் தான் கலவியின் பொழுது காட்டும் ஊடல்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The level of clashing with lover before copulating is like the level of adding salt on food. If the salt is more, the food would lose its taste. Likewise the pleasance of love might be collapsed if the clash overcomes.
- MAHENDIRAN V
------------------------

குறள் 1303:
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணையிடம் பிணக்கு காட்டி ஏற்படுத்தும் துன்பத்தை விட பிணக்கு சரியாகி அனைத்துத்தழுவி கூடல் செய்யாமல் காட்டும் துன்பமே பெரியது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The sadness caused of pleasant clash is not a bigger one than the sadness caused of being mere without copulating after the clash.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1304:
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் செய்து அவரை காயப்படுத்தி பின்பு கூடல் புரியா நிலை, முன்பே கொடிகள் காய்ந்து வாடிப் போனச் செடியை வேறோடு பிடுங்கி எறிதலுக்கு சமம்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If you don't copulate with your spouse after the pleasant clash, it's equallent to plucking off the plant with root, that has already got dried out.
- MAHENDIRAN V
------------------------

குறள் 1305:
நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலர் போன்ற கண்களுடைய துணைவியின் ஊடலை ரசிக்கும் பக்குவம் பெற்ற ஆண்மகனே சிறப்பிற்குரிய  நெஞ்சமுடையவனாவான்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The man who knows to enjoy the pleasant clash of his wife who has beautiful eyes is the man of having praised heart.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1306:
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிறிதும் பெரிதுமாக பிணக்கு இல்லாத காதலர்களின் காம வாழ்க்கை, முற்றியும் முற்றாத, பழுத்தும் பழுக்காத காய்கனிகளை போன்றதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The lush life of lovers without pleasant clashing is like a tree is yielding immatured and unripen fruits.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1307:
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
தழுவி களிப்படையும் இன்பத்தின் கால அளவு கூடுமா குறையாதா எனும் அந்த ஊடல் துன்பம் தருவதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The pleasant clash happened between lovers due to an argument regarding the time of lasting copulation with each other is a bit saddened one.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1308:
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
இருக்கும் பொழுது ஊடல் செய்து மனம் வருந்த வைத்து விட்டு அவர் இல்லாதபொழுது அது நினைத்து மனம் வருந்தி என்ன பயன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
The stance of clashing with him when he was being near and making him saddened, but worrying about that incident when he was away is immatured one.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1309:
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நிழலுக்கருகில் இருக்கும் நீரும்  அன்புக்குரியவர் காட்டும் ஊடலும் எப்பொழுதும் இனிமையானதாக இருக்கும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Both the water that is located inside the shadow and the pleasant clash showed by one who is kind hearted are always sweetest.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1310:
ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் செய்து மிகுதியாய் வருந்த வைத்தவருடன் கூடல் செய்ய மனம் துடிப்பதற்கு காரணம் வைராக்கியத்தையும் மிஞ்சிய காமம் கலந்த அன்பே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The reason of urging oneself to copulating though there was a big clash between lovers is  the dominance of love and attraction over fanaticism.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Sunday, 19 June 2022

திருக்குறள் அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல் CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF) (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

திருக்குறள்

அதிகாரம் 130. நெஞ்சொடு புலத்தல்
CHAPTER 130. EXPOSTULATION WITH HEART (BLABBERING SELF)
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1291:
அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீயெமக் காகா தது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஓ என் நெஞ்சே, அவர் நெஞ்சம் மட்டும் எனை நினையாது அவருக்கே துணையாய் நிற்கும்பொழுது, நீ மட்டும் எனை விலகி அவரையே நினைப்பது தான் ஏனோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, whereas his heart is out of my love, you would like to be with him as a safeguard, Is what you do think always about him right?
- MAHENDIRAN V
------------------------
குறள் 1292:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் நெஞ்சமே, அவருக்கு என் மீது அன்பு இல்லை என்பதை நீ அறிந்திருந்தும், கோபம் கொள்ளமாட்டார் என்ற துணிவில் அவரிடமே நீ செல்லத் துடிப்பது விந்தை!
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, though you know that he doesn't have love on me, what you dare to reach him believing that he wouldn't get anger on you is surprising!
- MAHENDIRAN V
------------------------
குறள் 1293:
கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
என் நெஞ்சமே, நீயே விரும்பி அவரை நோக்கிச் செல்ல நீ விழைவது, துன்பத்தால் கெட்டார்க்கு துணை நிற்க யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நல்லெண்ணத்தில் தானே?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, the reason of your being eager to reach him is that you would like to stand for him because he is miserable without help, right?
- MAHENDIRAN V
------------------------
குறள் 1294:
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நெஞ்சமே, ஊடல் ஒன்று செய்து பிறகு கூடினால் தான் சுவை என்பதை அறியாமல் கூடலுக்கு மட்டும் விழையும் உனக்கு இனிமேலும் அறிவுரை செய்து என்ன பயன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Oh my heart, without knowing the reunion is pleasant only after meeting out clash, what you like only for reunion is foolish. Even I try to advise you in this regard too is waste.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1295:
பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் பிரிந்திருக்கும் பொழுது அவர் இல்லா நிலையால் என் நெஞ்சம் வாடும். அதுபோன்று அவர் கூடவே  இருந்தாலும் பிரியப்போகிறாரே என்ற துயரம் வாட்டும். என் நெஞ்சம் வாடி நிற்பது ஒரு தொடர்நிலையோ?
- வை.மகேந்திரன்

Explanation in English:
My heart would be always worried out even if he is away from me or being near to me because of parting of love. Anyway I feel that my worries is infinite.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1296:
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலரின் அன்பின் அற்புதத்தை பிரிந்தபோதே அறிவர் என்பர். அவரை நான் பிரிந்திருந்து நினைக்கும்கால் என் நினைவுகளே என்னை கொல்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
It is said that the feature of love would be known by both only when the lovers are parted. The thoughts of me about him is killing me because of being parted.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவரை மறக்க இயலா நெஞ்சத்தை நான் கொண்டதனால், மறக்கக் கூடாத நாணத்தையும் மறந்தவளாகிப்போனேன்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Since I have the heart that is unable to forget about my spouse, I have become a woman throwing shyness that should not be forgotten ever.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1298:
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலே உயிர் என்று இருக்கும் என் நெஞ்சம், அவரை இகழ்ந்தால் எம் காதலுக்கு தான் இழுக்கு என்பதனால் அவரை இகழாதிருந்து புகழ் பாடுகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
My heart that always adores love equallent to life is praising him instead of blaming him, because if he is depreciated the love may get bad name.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1299:
துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துன்பம் வரும் பொழுது இணையாய்  இருந்து துணையிருப்பது நம் நெஞ்சமேயன்றி வேறு எதுவுமில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The best assistance and being a good friend during ones being in miseries is only the heart. None can be as it is.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1300:
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
ஒருவர்க்கு உரிமையாய் இருப்பது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
உரிமையான ஒன்றாம் அந்த நெஞ்சத்துடன் பிணக்கேற்பட்டு உறவு இல்லாமலிருக்கும்பொழுது அயலார்களுடன் உறவில்லாமலிருப்பதால் ஒன்றும் குடிமூழ்கி விடாது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
While being with hatred on our heart because of clash, the stance of being ill healthy relationship with the society is not a matter at all.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Sunday, 12 June 2022

தெய்வப்புலவரின் திருக்குறள். அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல் CHAPTER 129. DESIRE FOR COPULATION (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள்.
அதிகாரம் 129. புணர்ச்சி விதும்பல்
CHAPTER 129. DESIRE FOR COPULATION
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1281:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
நினைத்த மாத்திரத்தில் களிப்படையும் தன்மையும்  கண்ணால் கண்டு இன்புறும் தன்மையும் கள்ளுக்கில்லை காமத்திற்கு தான் உண்டு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
No even the liquor is causing exultation and pleasure as if the love causes the same even when just by thinking and looking at the lover.

குறள் 1282:
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
துணையுடன் இணையும்கால் தினையளவும் பிணக்கு இல்லாமல் இருப்பின், காமம் பனை அளவு பெருகி ஓடும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
If one doesn't clash even a bit with spouse during copulate an infinite pleasure would cause like flood.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1283:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
எனை விரும்பி ஏதும் செய்யா எதனையோ அவர் செய்தாலும் அவரைத் தான் என் கண்கள் காதலுடன் பார்க்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if he doesn't care about me to love and concentrating at somewhere, my bloody eyes are zooming only on him.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1284:
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் னெஞ்சு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவருடன் தர்க்கம் செய்ய என் மனம் விழைந்தாலும் அவரைக் கண்டவுடன் பரவசம் கூடி வாரி அணைக்கவே மனம் துடிக்கிறதடி என் தோழி.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She hisses to her friend that even if she wants to clash with her man her mind blows more and more to hug him tightly as soon as she sees him.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1285:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
பழிகாணேன் கண்ட இடத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மை தீட்டும்பொழுது தீட்டும் கோல் காணாமல் போய் விடுவது போல் குற்ற நெஞ்சன் என் அவனை கண்டதும் அவன் மீதுள்ள கோபம் மறைந்துபோய் விடுகிறதே, என்ன மாயம்!
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if the eyebrow pencil is missing when I need to draw eyebrow, the entire anger on my lover is flying away when I see him. Isn't it miracle?
- MAHENDIRAN V
------------------------
குறள் 1286:
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலர் கண்ணருகில் இருக்கும்பொழுது அவர் செய்த தவறுகள் என் நினைவுக்கு வருவதில்லை. அவரை நான் காணாமல் இருக்கும் பொழுது அவர் செய்த தவறுகள் தவிர எதுவும் என் நினைவுக்கு வருவதில்லை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
I am not bothering about his faults when he is being near me. Likewise I am not bothering anything except his faults when he is away from me.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
வெள்ளம் இழுத்துப்போகும் என்று அறிந்தும் பாயத்துணியும் அவருக்கு என்னுடன் கூடலின் பொழுது நான் ஊடல் செய்வதால் என்ன பயன்?
- வை.மகேந்திரன்

Explanation in English:
Nothing is gain even if I try to clash with him during our copulation whereas he can dare jump into water despite knowing that the flood would pull in.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1288:
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
கள்ளுண்டால் இழிவு வரும் என்று அறிந்தும் கள்ளின் மேல் தீரா காதல் வருகிறதே அது போல் தான் உன் படர்ந்த மார்பு, உன் மீது நான் கோபம்  கொண்டாலும் எனை மயக்கி கள்வனாகிய உன் மீது விழவைக்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
As if desiring liquor more and more despite knowing that it is devil one, even if I get anger on you, your broad chest interacts me and pulls me on it.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1289:
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மலரை விட மென்மையான இன்பச் செயலாம் காமம். அதை மென்மையாய் செய்து பன்மையாய் இன்பம் பெறத் தெரிந்தவர் மிகச்சிலரே.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The lush and love is the softer than flower. Only a few knows to enjoy it infinitely by practicing so softly.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1290:
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
- தெய்வப்புலவர்

விளக்கம்:
ஊடல் என்ற பெயரில் கண்களால் கோபக்கணல் காட்டிய என் வீரமங்கை கூடலின் பொழுது எனையும் வீழ்த்தி விரைந்து வந்து அணைக்கிறாளே என்ன விந்தை!
- வை.மகேந்திரன்

Explanation in English:
My brave woman who showed fired anger on me through eyes namely clash is hugging me lovingly faster than me. What a surprise one it is!
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Wednesday, 8 June 2022

தெய்வப்புலவரின் திருக்குறள் அதிகாரம் 128 . குறிப்பறிவுறுத்தல் CHAPTER 128. INDICATION OF SIGNS (Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள்
அதிகாரம் 128 .
குறிப்பறிவுறுத்தல்
CHAPTER 128.
INDICATION OF SIGNS
----------------
(Thirukkural. Explanation in Tamil and English - written by Mahendiran V)
----------------
தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய  திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியது, வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
VISITING PROFESSOR OF ENGLISH;
WRITER; TRANSLATOR; TRAINER OF COMMUNICATIVE ENGLISH AND SOFT SKILLS.
From the Domain of 
mahendiranglobalenglish.blogspot.com
----------------
குறள் 1271:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவை விரும்பவில்லை என்பதை சொல்ல மறைக்க உன் மனம் முயன்றாலும் உன்விழிகள் அழகாய் சொல்லிவிடும் அதனை.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Even if you try to suppress your unwilling the parting, your eyes would emit that beautifully.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1272:
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவள் அழகு நிறை கண்களும் மூங்கில் போன்ற தோள்களும் உடையவள். ஆதலால் அவளுக்கு பெண்ணியத்தின் பண்பு நிறைவாய் உண்டு.
- வை.மகேந்திரன்

Explanation in English:
She has the most beautiful eyes, and arms like bamboo branches. So, she has the infinite femininity.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1273:
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
மணிமாலையில் வெளிப்படும் நூலைப் போல அவளின் அழகினுள் உள்ள அற்புதம் ஒரு குறிப்பாக  வெளிப்படும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
The marvelness would be overflowing from her beauty as if the thread comes out from the garland of pearls.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1274:
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவளின் புண்ணகை அறிவிக்கும் குறிப்பு, அரும்பு தோன்றும் பொழுது வெளிப்படும் நறுமனத்திற்கு ஒப்பானதாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her beautiful smile is revealing as a signal as if an infant flower emits its fragrance.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1275:
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
சிங்காரமாய் இருக்கும் என் அழகுப்பதுமையின் அந்த கள்ளப் பார்வை என் மீளாத் துயரத்தையும் போக்கவல்ல மருந்தாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her fantastic sight delivered from the edge of her eyes will surely cure the disease of parting as the best medicine.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1276:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிந்து கூடியதால் அவர் என்னை அணைக்க விரும்புவது இன்பம் தந்தாலும் அது மீண்டும் அன்பிலா தன்மையுடன் அவர் என்னைப் பிரியப்போகிறார் என்பதற்கான அறிகுறியாகவே தெரிகிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Though His beloved hugging causes a pleased chears a lot, it signs mildly that he is to be parted by letting me be alone.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1277:
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை
- தெய்வப்புலவர்

விளக்கம்:
குளிர் நீரைப் போன்ற என் காதலர் உடலால் என்னை பிணைந்திருந்தாலும் உள்ளளவில் என்னை பிரியப்போகிறார் என்பதை கழன்று விழும் என் வளையல்கள் சொல்கின்றன.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Although my cool man is spinning me with love a lot, my bangles that are to come out are signifying that he is to be parted shortly.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1278:
நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
- தெய்வப்புலவர்

விளக்கம்:
அவர் என்னை பிரிந்தது நேற்று தான் என்றாலும், அது பல நாட்களுக்கு சமமானது என்று என் மேனியின் பசலை நிறம் சொல்கிறது.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Though it is true that my man has left me last day, the PASALAI issue that shows on full of my skin says that it is long days.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1279:
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது
- தெய்வப்புலவர்

விளக்கம்:
காதலரை பிரிவதால் மனம் வாடிப்போய் அவள் கழன்று விழப்போகும் தன் வளையல்களையும் பார்க்கிறாள். மெலியப் போகும் தன் தோள்களையும் பார்க்கிறாள். இவற்றை தவிர்க்க அவரைப்பின்தொடர்ந்தால் என்ன என்பது போல் தன் பாதங்களையும் பார்க்கிறாள்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
What a beautiful sense it is! Because her man is to be parted, with worries a lot, She looks at her bangles that are to come out from her hands. She looks at her arms that become leaned. To avoid these, she looks at her feet that why she doesn't follow the way that her man walks out.
- MAHENDIRAN V
------------------------
குறள் 1280:
பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு
- தெய்வப்புலவர்

விளக்கம்:
பிரிவால் ஏற்படும் துயரம் தாங்கிக் கொள்ள முடியாதது என்பதை கண்களாலேயே  அவள் தெரிவிக்கும் அந்த தன்மையே  பெண்மையின் தலையாய இலக்கணமாகும்.
- வை.மகேந்திரன்

Explanation in English:
Her significance showed through her eyes that the parting of love is misery one is the prime status of the femininity.
- MAHENDIRAN V
----------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
----------------------------------
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect without my permission is prohibited.
Thanks.
V. MAHENDIRAN M.A., M.A., ELT.,
------------------------------


Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE