Tuesday, 30 November 2021

அதிகாரம் 36 மெய்யுணர்தல் CHAPTER 36 CONSCIOUSNESS/ TO PERCEIVE TRUTHFULNESS 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 36 மெய்யுணர்தல்
CHAPTER 36
CONSCIOUSNESS/
TO PERCEIVE TRUTHFULNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு

விளக்கம்:
பொய்மையை உண்மை என்று உணர்வோர் மற்றும் பிறர்க்கும் அதை உணர்த்துவோரின் பிறப்புநிலை இழிவானதாகும்.

Explanation in English:
The stance of ones who perceive falsehood to be true and those who perceive it to others is contemptible.
-----------------------
குறள் 352:
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு

விளக்கம்:
ஒருவர் குற்ற நிலையிலிருந்து நல்ல நிலைக்கு வரும்பொழுதுதான் இன்பநிலைகளை நிறைய பெறுவர்.

Explanation in English:
One can get a lot of pleasures only when one skips him from a state of guilt to a state of good.
-----------------------
குறள் 353:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து

விளக்கம்:
அச்சத்திலிருந்து நீங்கி தெளிந்த அறிவு பெறுபவர்களுக்கு இந்த வானமும் வசப்படும்.

Explanation in English:
This heaven will be subdued for those who are freed from fear and receive enlightened.
-----------------------
குறள் 354:
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு

விளக்கம்:
ஒருவருக்கு ஐம்புலன்களை அடக்கியாள தெரிந்திருந்தும், மெய்யுணர்வு எது என்று அறியா நிலையில் அவர் இருந்தால் யாதொரு பயனும் இல்லை.

Explanation in English:
It is of course useless for a person to know how to suppress five senses, but if he does not know what consciousness is.
-----------------------
குறள் 355:
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

விளக்கம்:
கூறும் பொருள் எத்தகையதாகினும், யார் அதை கூறினாலும் அதிலுள்ள உண்மைப் பொருளை கண்டறிவதே சாணக்கியத்தனம்.

Explanation in English:
Whatever the meaning of whatever is said, the wisdom is to find the reality in whoever says it.
-----------------------
குறள் 356:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

விளக்கம்:
நன்கு கற்றறிந்து மெய்ப்பொருள் கண்டறிந்தோர்க்கு மறுப்பிறப்பு துன்பம் வந்து சேராது.

Explanation in English:
Those who are well educated and find the truth would not meet out the misery of rebirth
-----------------------
குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

விளக்கம்:
உண்மைநிலையறிந்து அதில் உறுதியாய் இருப்போர், மறுப்பிறப்பு நிலை குறித்து அஞ்சவேண்டியதில்லை.

Explanation in English:
Ones those who know by distinguishing the facts and are firm in it, do not have to fear about the state of rebirth.
-----------------------
குறள் 358:
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு

விளக்கம்:
பிறப்பு எனும் மடைமையை நீங்கச்செய்து, சிறப்பு எனும் உண்மை பொருளை கண்டறிவதே சிறந்த ஞானமாகும்.

Explanation in English:
The best wisdom is to cut off the clutter of birth and discover the true meaning of features of life.
-----------------------
குறள் 359:
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்

விளக்கம்:
மெய்பொருளின் சார்பு என்னவென்று அறிந்து அதனை பின்பற்றி பற்றின்றி வாழ்ந்தால் துன்பங்கள் வாழ்வில் அணுகாது.

Explanation in English:
Miseries will not tend in life of ones if they know what the bias is and follow it and live without dedires.
-----------------------
குறள் 360:
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்

விளக்கம்:
காமம், சினம், ஆசை இவை மூன்றையும் விடாவிட்டால், சமூகத்தில் ஒருவர் தன் நற்பெயரை இழந்து தீமைகளை மட்டுமே பெறுவர்.

Explanation in English:
If the bad senses such as lust, anger and desire are not given up, one will lose one's reputation in the society and only gain evil.
-----------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖



அதிகாரம் 35 துறவு CHAPTER 35 ASCETICISM 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 35
துறவு
CHAPTER 35
ASCETICISM
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 341:
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் அலன்

விளக்கம்:
ஒருவர் ஒன்றின் மீதுள்ள பற்றை துறந்துவிட்டால், அதன்மூலம் ஏற்படும் துன்பத்தை அடையமாட்டார்.

Explanation in English:
If one quits all desires of a thing, he will be away from miseries caused by such thing.
---------------------------
குறள் 342:
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல

விளக்கம்:
விரும்பத்தக்கதாக ஒன்று இருப்பினும் அதை துறந்துவிட்டால் அதனால் அடையும் இன்பங்களோ பற்பல.

Explanation in English:
If one quits a thing that is such a admirable one of him, many more immense happiness would cummulate to him.
---------------------------
குறள் 343:
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு

விளக்கம்:
ஐம்புலன்களையும் அடக்கியாளும் வித்தையை அறிந்து கொள்ளும்பட்சத்தில் அவை விரும்பும் அனைத்தையும் துறந்துவிடலாம்.

Explanation in English:
If one knows to control all five senses, he can quit the desires caused by those five senses.
---------------------------
குறள் 344:
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து

விளக்கம்:
தவ நிலையின் இயல்பு எதுவென்றால் யாதொரு உடைமை மீதும் பற்றில்லாமல் இருத்தலே. உடைமைபால் மதிமயங்கி பற்று கொண்டால் துறவு பெறமுடியாது.

Explanation in English:
The base of penance is that to quit the desire put on anything. If one affectionates lovingly on anything, Hardly to get the stance of asceticsm.
---------------------------
குறள் 345:
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை

விளக்கம்:
பிறவியின் துன்பம் வேண்டாம் என நினைப்போருக்கு அவர் தன்  உடம்பே மிகையாக இருக்கும்பொழுது பிற ஆசைகளுக்கு இடமே இல்லை.

Explanation in English:
The entire body alone is a gift to ones those who don't want the miseries of births. Being so, other desires are unnecessary.
---------------------------
குறள் 346:
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்

விளக்கம்:
நான் தான் எல்லாம் என்ற செருக்கை அறுத்தாலே போதும் வானுலத்தை விட உயர்ந்த உலகத்தில் உட்புகலாம்.

Explanation in English:
If one cuts out the haughtiness thought "Only I am all", he will have been living in better than the heavenly world.
---------------------------
குறள் 347:
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

விளக்கம்:
ஆசைகளை விடாமல் அகத்தில் கொள்வோரை துன்பங்கள் விடாமல் பற்றிக்கொள்ளும்.

Explanation in English:
Miseries would strongly hug those who don't quit desires but pasting them in their mind.
---------------------------
குறள் 348:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்

விளக்கம்:
அனைத்து ஆசைகளையும் துறந்தவரே முற்றும் துறந்தவராவர். ஏனேயோர் ஆசையெனும் வலையில் சிக்கிக்கொண்டவராவர்.

Explanation in English:
Only those who quit all desires are known as complete ascetics. Others are those who are trapped in the net of greed.
---------------------------
குறள் 349:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

விளக்கம்:
ஆசைகளற்ற வாழ்க்கையே மறுபிறப்பை அறுக்கும். இல்லேல் பிறந்து பிறந்து சாகும் நிலைதான் தொடரும்.

Explanation in English:
Only the desireless life would cut off the stance of rebirths. Otherwise, should get rebirths and meet out suffering ever.
---------------------------
குறள் 350:
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

விளக்கம்:
பற்று அற்றவர்களின் பற்று யாதென்று அறிந்து அதனை பற்றிக்கொண்டாலே பற்றுகளனைத்தையும் விட்டுவிடலாம்.

Explanation in English:
If one knows the desire of ones those who quit all desires, he can quit all of his desires.
-------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Sunday, 28 November 2021

அதிகாரம் 34 நிலையாமை Chapter 34 INSTABILITY 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 34 
நிலையாமை
Chapter 34
INSTABILITY
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------
குறள் 331:
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை

விளக்கம்:
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று உணரும் அறிவு இழிவானதாகும்.

Explanation in English:
The wisdom that says instability is stability is silly one.
--------------------
குறள் 332:
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அருவிளிந் தற்று

விளக்கம்:
பெருஞ்செல்வம் இருப்பது நாடகத்தின் பொழுது கூட்டம் குழுமி இருப்பதுபோல். நிலையானதல்ல. நாடகம் முடிந்து கூட்டம் கலைந்து செல்வதுபோல் அச்செல்வமும் விலகிப் போகும்.

Explanation in English:
Having a sack of wealth is like a crowd infront of drama. As if the crowd disassemble after the drama, big wealth too can go away.
--------------------
குறள் 333:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்

விளக்கம்:
செல்வம் நிலையற்றது. நிறைந்திருக்கும்பொழுதே அதைக் கொண்டு பல அறச்செயல்கள் செய்வது நல்லது.

Explanation in English:
Having big wealth is instable. when it exists, has to utilise it for doing goodness for others.
--------------------
குறள் 334:
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின்

விளக்கம்:
உயிரும் நிலையற்றதே. நாள் அல்லது காலம் என்பது, உயிர் உடம்பிலிருப்பதை குறித்து வைத்துக்கொள்ளும் ஒரு வாள் என்பதை சான்றோர் அறிவர்.

Explanation in English:
Live is instable. Day or time is like a sword that counts the days of staying time of live in body.
--------------------
குறள் 335:
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்

விளக்கம்:
நா அடைத்து விக்கல் வருவதுபோல் இறப்பு வருவதற்கு முன்பே  அறச்செயல்களனைத்தையும் செய்துவிடவேண்டும்.

Explanation in English:
Live is instable so the service of doing all goodness should be completed before live is leaving the body as if getting hickup due to block of tongue.
--------------------
குறள் 336:
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு

விளக்கம்:
நேற்றிருப்போர் இன்றில்லை என்கிற நிலையாமையை  பெருமைக்குறியதாக கொண்டதுதான் இந்த உலகம்.

Explanation in English:
Life is instable because this world proudly contains the stance that is one who was alive yesterday but he is no more today.
--------------------
குறள் 337:
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல

விளக்கம்:
வாழ்வின் உண்மையான அர்த்தத்தை ஒரு பொழுது உணர்ந்து அறிந்து கொள்ள முயற்ச்சிப்பதை விடுத்து அவ்வாழ்விற்காக காணும் கனவுகளோ கோடிக்கும் மேல்.

Explanation in English:
One is dreaming crores and more for his life but failing to know the exact meaning of the life.
--------------------
குறள் 338:
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு

விளக்கம்:
உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவு, பறவை தன் கூட்டை பிரிந்து பறந்துவிடுவது போல் நிலையற்றதாகும். 

Explanation in English:
The relationship between live and body is instable because live too would fly away from body as if a bird is flying away from its nest.

--------------------
குறள் 339:
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

விளக்கம்:
வாழ்க்கை நிலையற்றது. இறப்பு என்பது உறங்கச் செல்வதுபோல். அது போல பிறப்பு என்பதும் உறங்கி விழிப்பதுபோல் தான்.

Explanation in English:
Death means that one is going to sleep due to tired. Likewise birth means that one is waking up from his sleepy.
--------------------
குறள் 340:
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு

விளக்கம்:
உடல் உயிர்க்கு நிலையானதல்ல. அது உயிரை தன் ஓர் ஓரத்தில் வந்து அமர இடம்தரும் ஒரு புகலிடமே!

Explanation in English:
Body is just like a sanctuary to live. It just provides a place to live for dwelling so body too is instable to live.
-------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Saturday, 27 November 2021

அதிகாரம் 33 கொல்லாமை CHAPTER 33 NOT TO SLAUGHTER/KILL 📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)

அதிகாரம் 33 கொல்லாமை
CHAPTER 33
NOT TO SLAUGHTER/KILL
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
---------------------------
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்

விளக்கம்:
அறங்களிலேயே முதன்மையான அறம் எது என்றால் உயிர்களை வதை செய்யாதிருத்தல்தான். இவ்வறம் பிற நல்வினைகள் எல்லாவற்றையும் தரும்.

Explanation in English:
The prime Morality is that not to kill any living being. Being so, all goodness would reach them.
-------------------------
குறள் 322:
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை

விளக்கம்:
கிடைத்ததை மற்றோர்க்கும் பகிர்ந்து அளித்து உண்டு மகிழ்வதே சிறந்த அறம் என்று சான்றோர் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.

Explanation in English:
Great men have quoted in their books that the stance of living and eating by sharing food to others is the best Morality.
-------------------------
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று

விளக்கம்:
கொல்லாமையே முதல் சிறந்த அறமாகும் பொய் சொல்லாமை அடுத்த சிறந்த அறமாகும்.

Explanation in English:
Not killing is the first Morality in one's life. Not lying is the next Morality.
-------------------------
குறள் 324:
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழும் நெறி

விளக்கம்:
சிறந்த அறநெறி என்பது எதுவென்றால், எந்த உயிரையும் எச்சூழலிலும்  கொல்லாமலிருப்பதே.

Explanation in English:
The best Morality in one's life is that not to kill any living being at any circumstance.
-------------------------
குறள் 325:
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

விளக்கம்:
வாழ்வின் அறநிலைக்கு அஞ்சி துறவறம் மேற்கொள்வோரை காட்டிலும் உயிர்பலி கூடாது என்ற அறநிலைக்கு அஞ்சி வாழ்பவரே சிறந்தவராவார்.

Explanation in English:
The persons who fear to Morality and being not killing any living being are greater than ones who become as sages by obeying the Morality.
-------------------------
குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லா துயிருண்ணுங் கூற்று

விளக்கம்:
உயிர் கொல்லா நிலை கொண்ட நல்லோரை கண்டு உயிர்கொண்டு செல்லும் நமனும் பின்நாளில் அவர் உயிரை பறிக்க அஞ்சுவான்.

Explanation in English:
The Naman who plucks the lives too would fear to pluck the live of the persons who are living with good Morality by having sence of not killing manner.
-------------------------
குறள் 327:
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை

விளக்கம்:
தன் உயிரே போகும் சூந்நிலை ஏற்பட்டாலும், பிற உயிரை பறிக்கும் எண்ணத்தை மனதில்கொள்ளக்கூடாது.

Explanation in English:
One should not even think for killing any living being even if he is in the situation as losing his live.
-------------------------
குறள் 328:
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை

விளக்கம்:
உயிர் பலியிடுதல் பயன் தரும் என்கிற அற்ப கூற்றை நல்லோர் எவரும் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

Explanation in English:
Good virtual persons wouldn't agree the stance of saying killing living beings spiritually would cause gain for life.
-------------------------
குறள் 329:
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து

விளக்கம்:
மாபாதக செயல் என்று அறியாமல் கொலை செய்வதை தொழிலாக கொண்ட மானிட பதர்கள் சான்றோர் கண்களுக்கு அற்ப பொருளாக தெரிவார்கள்.

Explanation in English:
Persons who commit killing is their profession without knowing such is an earth shaking activity will be seen by good moralitised persons as very silly people.
-------------------------
குறள் 330:
உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்

விளக்கம்:
ஒரு உடம்பிலிருந்து உயிரை நீக்கி அற்ப செயல் செய்பவர்கள், தன் உடம்பிலிருக்கும் நோய் என்றுமே போகாத நிலையிலேயே கடைசிவரை வாழ்வர்.

Explanation in English:
Those who do ugly affairs that is plucking soul from a body will be suffering in their life by carrying unrecoverable diseases till they die.
-------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this interpretation work are reserved by me, and it's my own property.
Copying, plagiarising, modifying, rewriting this work at any respect without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

NOW YOU CAN AVAIL OUR VISITING CLASS IN YOUR INSTITUTION.. Read here...👇

Visiting class is available now.

Dear Institutions,

If you are in need of visiting class at your cabin or auditorium for your students or staff members to train SPOKEN ENGLISH, you may contact us.

We would visit your place and train for hourly basis or basis of package.

For more details please contact 9842490745.

MAHENDIRAN V

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 

MOBILE 9842490745


Friday, 26 November 2021

அதிகாரம் 32 இன்னா செய்யாமை CHAPTER 32 Features of not doing evil 📖📖📖📖📖📖📖📖 (Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 32
இன்னா செய்யாமை
CHAPTER 32
Features of not doing evil
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English is written by Mahendiran
V Northpoigainallur)

📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------------------
குறள் 311:
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விளக்கம்:
துன்பம் செய்தால் அளப்பறிய பணம் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், மாசற்ற நன்மக்கள் பிறர்க்கு துன்பம் தர எண்ணமாட்டார்கள்.

Explanation in English:
Immaculate good people would never think to do evil even if they get an opportunity to get a plenty of money for doing evil.
-------------------------------------
குறள் 312:
கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

விளக்கம்:
கடுந்துன்பம் ஒருவர் தந்திருந்தாலும் அதற்கு பதிலடியாக துன்பம் தர நினைக்காததே மாசற்றவர்களின் கொள்கை.

Explanation in English:
The principle of immaculate people is not to reply evil to ones who had done severe evil to them.
-------------------------------------
குறள் 313:
செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்

விளக்கம்:
யாதொரு துன்பமும் தராத ஒருவருக்கு துன்பம் செய்யுங்கால், மீளா துன்பம் நிச்சயம் வந்துசேரும்.

Explanation in English:
If one does misery to one who had never done any misery to anyone, an insoluble big misery will reach to him.
-------------------------------------
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

விளக்கம்:
தீங்குசெய்தவருக்கு சரியான பதிலடி யாதெனில், அவர் வெட்க்கும்படி அவருக்கு நல்லது செய்துவிடுவதே.

Explanation in English:
The best reply to one who had done evil is that to do goodness as far as he is shying a lot.
-------------------------------------
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற் போற்றாக் கடை

விளக்கம்:
பிற உயிர்க்கு வரும் துன்பத்தை தன் துன்பம் போல் நினைக்காவிட்டால் அறிவு இருந்தும் என்ன பயன்?

Explanation in English:
If one doesn't feel that other's misery is like his own, what's else gain despite being wisdom?
-------------------------------------
குறள் 316:
இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்

விளக்கம்:
துன்பநிலை என்னவென்று அறிந்தபின்பும் பிறர்க்கு துன்பம் செய்ய நினைப்பது தவறு.

Explanation in English:
It's a great fault if one does evil to others though he had known the sadness of evil.
-------------------------------------
குறள் 317:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை

விளக்கம்:
யாருக்கும் எந்த காலத்திலும் ஒரு சிறு துன்பம் கூட தராமலிருப்பதே சிறப்பான குணம்.

Explanation in English:
The best character is that not doing even a bit evil to any one  at any circumstance.
-------------------------------------
குறள் 318:
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

விளக்கம்:
தன்னுயிர்க்கு துன்பம் வந்தால் மனவலியால் துடிக்கும் ஒருவன் பிற உயிர்க்கு துன்பம் தர நினைப்பது என்ன நியாயம்?

Explanation in English:
While one who is getting suffering when he is getting evil, if he wants to do misery to others is not justice.
-------------------------------------
குறள் 319:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்

விளக்கம்:
பிறர்க்கு துன்பம் தந்து இன்பம் அடைந்து கொண்டிருக்கும்பொழுதே துன்பம் அவனுக்கு துரிதமாக வந்து சேரும்.

Explanation in English:
Evil will reach to one in no time if he is cheerful for his having done evil to some other.
-------------------------------------
குறள் 320:
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

விளக்கம்:
பிறர்க்கு தீமை செய்தால் அத்தீமை தனக்கே வரும் என்ற உண்மையை அறிந்தவர்கள் பிறர்க்கு தீமை செய்ய விழையமாட்டார்.

Explanation in English:
Persons who know that an evil done to others will surely return to them will never dare to do evils.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Sunday, 21 November 2021

அதிகாரம் 31 வெகுளாமை CHAPTER 31 STANCE OF NOT GETTING ANGER. (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V Northpoigainallur)

அதிகாரம் 31 வெகுளாமை
CHAPTER 31  STANCE OF NOT GETTING ANGER.
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V
Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------------------
குறள் 301:
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்

விளக்கம்:
தன் கோபம் பலித்துவிடும் என்கிற சூழ்நிலையில் அஞ்சி சினம் கொள்ளாதவனே புத்திசாலி. மற்ற இடங்களில் கோபம் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது ஒரு பொருட்டாகாது.

Explanation in English:
If one controls himself by knowing that his anger would effect badly because of the situation, he is intelligent. Other types of anger is not considered as a matter.
-------------------------------------
குறள் 302:
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற

விளக்கம்:
வலியோரிடத்தில் சினங்கொண்டால் தீமைதான் விளையும் அதுபோல எளியோரிடம் சினம் காட்டுதல் அறத்திற்கு புறம்பானது.

Explanation in English:
Angering on strong persons would cause to one numberless evils. Likewise angering on weak persons is against the Morality.
-------------------------------------
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்

விளக்கம்:
எவரிடத்திலும் சினம் கொள்வதை மறப்பது நலம். இல்லேல் அந்த சினத்தாலேயே தீமைகள் வரும்.

Explanation in English:
It's better to forget angering on anyone from the root. Otherwise it would bring an infinite evils.
-------------------------------------
குறள் 304:
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ பிற

விளக்கம்:
சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரும் கோபத்தை விட ஒருவனுக்கு  பகை வேறொன்றுமில்லை.

Explanation in English:
No one is as a big enemy to one as an anger is, even if it may cause happiness and laugh.
-------------------------------------
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்

விளக்கம்:
தன் சினமே ஒருவனை அழித்துவிடுமாகையால், தன்னை காபந்து செய்துகொள்ள வேண்டுமாயின் சினம்கொள்ளாமல் இருப்பது நலம்.

Explanation in English:
If one wants to protect himself, he ought not to getting anger on anyone because it would surely destroy him.
-------------------------------------
குறள் 306:
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்

விளக்கம்:
சினம் தன்னை மட்டுமின்றி, தன்னை காத்து நிற்கும் சுற்றத்தையும் அழித்துவிடும்.

Explanation in English:
Anger would destroy not only oneself but also all who are protecting him.
-------------------------------------
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

விளக்கம்:
கைகளால் நிலத்தை அறைந்தால் கைகளுக்கு தான் கேடு அதுபோல சினம்தான் தன்னை காக்கும் கைப்பொருள் என்று நினைப்பனுக்கு கேடு தான் வரும்.

Explanation in English:
The act of slamming the land by hands would cause pain only to hands. Likewise if one thinks that his anger is a safeguard for him, he would surely meet evils.
-------------------------------------
குறள் 308:
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

விளக்கம்:
சுடும் நெருப்பைக் காட்டிலும் மோசமான துன்பத்தை தந்தவனாகினும் நாடி வருங்கால், பகையை நினைத்து சினம் கொள்ளுதல் கூடாது.

Explanation in English:
If one nears to one to make friendliness eventhough he had done infinite evils that are worst than burning fire, one should not get anger on him by thinking past events.
-------------------------------------
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி யெனின்

விளக்கம்:
உள்ளத்திலிருந்து சினம் எனும் குணத்தை அகற்றிவிட்டால், அனைத்து இன்பமும் அவனிடம் வந்துசேரும்.

Explanation in English:
If one removes the root of anger from his heart, all wealth would cummulate to him.
-------------------------------------
குறள் 310:
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

விளக்கம்:
சினம் எனும் குணம் கொண்டோர் இறந்தோர்க்கு சமமானவர்கள். சினத்தை தூக்கியெறிந்தோர் துறவிகளுளுக்கு ஒப்பானவர்கள்.

Explanation in English:
Angering guys are equallent to dead persons likewise, those who have given up their anger are parellel to sages.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved by me.
Copying, plagiarising, modifying, rewriting at any respect is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Saturday, 20 November 2021

அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS. (Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 30 வாய்மை CHAPTER 30 TRUTHFULNESS
📖📖📖📖📖📖📖📖
(Thirukkural. Explanation in Tamil and English written by Mahendiran V  Northpoigainallur)
📖📖📖📖📖📖📖📖
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-------------------------------------
குறள் 291:
வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்
தீமை யிலாத சொலல்

விளக்கம்:
வாய்மை என்பது என்னவென்றால், பிறருக்கு தீங்கு தராத வார்த்தைகளை மட்டும் பேசுதல் ஆகும்.

Explanation in English:
What the truthful honesty is that to  pronounce/speak only good words that should not cause any evil to others.
-------------------------------------
குறள் 292:
பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்

விளக்கம்:
பொய்மை உரைத்தல் ஆகாது தான் எனினும், பொய்மையால்  நன்மைபயக்கும் பட்சத்தில் பொய்மை கூட வாய்மையாகும்.

Explanation in English:
Lying is not good but if it is spoken for any good affair that too is considered a kind of truthfulness.
-------------------------------------
குறள் 293:
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்

விளக்கம்:
பேசுவது பொய்மையென்று அறிந்தும் பொய் பேசுபவர்களின் மனசாட்சியே அவர்களை உறுத்தும்.

Explanation in English:
One's conscience would be punishing him if one speaks lies despite knowing that is not good.
-------------------------------------
குறள் 294:
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்

விளக்கம்:
உள்ளத்துள் பொய் பேசாது வாழ்பவர்கள் உலகத்தார் உள்ளத்துள் குடியிருப்பார்கள்.

Explanation in English:
Those who don't speak lies at any circumstance would be tending in all people's heart.
-------------------------------------
குறள் 295:
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை

விளக்கம்:
தவத்தின் மூலம் ஞானம் பெற்று விளங்குபவர்களை விட பொய் பேசாது வாழும் மக்களே உயர்ந்தவர்கள்.

Explanation in English:
Those who live without lying are considered as greater people than the people who had obtained wisdom by their penance.
-------------------------------------
குறள் 296:
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்

விளக்கம்:
பொய் பேசாது வாழும் நிலையே உயர்ந்தது. புண்ணியம் அனைத்தும் தானாய் வந்துசேரும்.

Explanation in English:
The life without lies is the highest one. Graces would cummulate to them who observe such life.
-------------------------------------
குறள் 297:
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று

விளக்கம்:
பொய்மை பேசாது வாழ்ந்தாலே போதும். அது பலருக்கு அறம் செய்து வாழும் நிலைக்கு ஒப்பாகும்.

Explanation in English:
It's enough living without speaking lies. That stance is equallent to the stance of life doing infinite Morality.
-------------------------------------
குறள் 298:
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்

விளக்கம்:
புறத்தூய்மை நீரால் ஏற்படுவதுபோல அகத்தூய்மை வாய்மையால் ஏற்படும்.

Explanation in English:
As if making tidyness of body washing by using water, tidyness of mind and heart are made by being honest.
-------------------------------------
குறள் 299:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

விளக்கம்:
இருளை போக்கும் எல்லா விளக்குகளையும் விட உயரிய விளக்கு உள்ளத்துள் நிற்கும் பொய்யாமை குணமே ஆகும்.

Explanation in English:
The stance of having trait of without lying is concerned as a greater holy lamp than all lamps which hurl up darks in the world.
-------------------------------------
குறள் 300:
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற

விளக்கம்:
யாமறிந்த வகையில், வாய்மைக்கு நிகரான சிறப்புநிலையாக எதையும் ஒப்பிட்டு கூற இயலாது.

Explanation in English:
As far I have known no any stance can be said as greater one than one's being truthful.
-------------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com
📖📖📖📖📖📖📖📖
All rights of this work are reserved. Copying, plagiarising without my permission is prohibited.
Thanks.
MAHENDIRAN V)
📖📖📖📖📖📖📖📖

Thursday, 18 November 2021

Visiting class is available now.

Visiting class is available now.

Dear Institutions,

If you are in need of visiting class at your cabin or auditorium for your students or staff members to train SPOKEN ENGLISH, you may contact us.

We would visit your place and train for hourly basis or basis of package.

For more details please contact 9842490745.

MAHENDIRAN V

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 

MOBILE 9842490745


எளிதாக அறிவோம் ஆங்கிலம். பகுதி 2 Author: MAHENDIRAN V MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745

எளிதாக அறிவோம் ஆங்கிலம். 

பகுதி 2

Author:

MAHENDIRAN V

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745

முதலில், நம் தாய்மொழியை நாம் சரியாக பேசகிறோமா என்பதை பார்ப்போம்... 

பல நாடுகளில் தமிழ் முக்கியமான மொழியாக பேசப்படுகிறது. 

நம்மை விட அழகாக தமிழ் பேசுபவர்கள் இலங்கை தமிழர்கள்.

எழுத்தளவில், பெரிய மாற்றங்கள் ஏதும் பெரிதாக இல்லை, ஆனால் சொல்வடிவம், சொல்வளம் உச்சரிப்புகள் இனிமையாக இருக்கும். (வெளிநாடுகளில் நான் கண்ட அனுபவம் இது) 

மொரிஷியஸ் தமிழர்கள் நம்மைக்காட்டிலும் பிரமாதமாக பேசுகிறார்கள். 

நாம் ஆங்கில வார்த்தைகளை தமிழினூடே பயன்படுத்துவதைபோல் அவர்கள் FRENCH வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், எப்படி சிங்கையில் 'லா... லா' போட்டு பேசுகிறார்களோ அதைப்போல. 

இலங்கை தமிழர்களின்  தமிழில் ஆங்கில கலப்பு அதிகம் இருக்காது அவ்வப்பொழுது சிங்கள வார்த்தைகள் தென்படும். 

மலேஸிய தமிழ்,  இலங்கை மற்றும் சென்னை சாயலில் இருக்கும். 

மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் (பெரிய பதவிகளில் வகிப்போர்கூட),  ஒருவரையொருவோர்  சந்திக்கும்பொழுது தமிழில் மட்டுமே உரையாடுகிறார்கள் (அப்பாடா பாலைவனத்தில் ஒரு நீரூற்று என்பதை போல்).

தென் அமெரிக்க கண்டத்தில் ஆங்கில மொழிக்கு வேலை இல்லை, ஆனால் பாருங்கள், CHILE நாட்டின் சில பகுதிகளில் வாழும் மக்கள் பேசும் ஒரு  மொழியில் நிறைய தமிழ் சொற்கள் காணப்படுவதாக ஒரு புத்தகத்தில் படித்தேன். 

ஆக, எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதெல்லாம் உண்மைதான், தமிழர்களாகிய நாம் தான்,  தமிழை கீறலாக்குகிறோம். 

ஹிந்தி இங்கு வந்து தமிழை அழித்துவிடாது, நாம் தமிழை அழிக்காமல் இருந்தால் போதும். 

தொடரும்...

Copyrights reserved by the Author. MAHENDIRAN V 

MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE 9842490745

 --------------------------------------------------------------

Monday, 15 November 2021

திருக்குறள். அதிகாரம் 29 கள்ளாமை CHAPTER 29 NOT TO STEAL OTHERS' (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 29 கள்ளாமை

CHAPTER 29 
NOT TO STEAL OTHERS'

(Explanation in Tamil and English written by Mahendiran V)


தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
----------------------------
குறள் 281:
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு

விளக்கவுரை:
பிறரிடம் அவப்பெயர் எடுக்க  வேண்டாமெனில் அடுத்தவரின் பொருளை கிஞ்சித்தும் அபகரிக்க நினைக்கக்கூடாது.

Explanation in English:
If ones don't want to get worst name in society, he ought not to think steal others.
--------------------------
குறள் 282:
உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்

விளக்கவுரை:
அடுத்தோரின் பொருளை அடைய நினைத்துப் பார்ப்பதே ஒரு வித கள்வத்தனம்.

Explanation in English:
Even one thinks about stealing others, that too is a kind of robriness.
--------------------------
குறள் 283:
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்

விளக்கவுரை:
பிறர் பொருளை களவி இன்பம் பெற்றால் பல மடங்காக தன் பொருள் அழியும்.

Explanation in English:
If one may be pleasant by stealing others', he would lose his things multiple times.
--------------------------
குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்

விளக்கவுரை:
ஒரு முறை களவு செய்து ஆசைக் கண்டுவிட்டால் பல முறை செய்ய நேர்ந்து அளவிலா துன்பம் பெற வழிவகுக்கும்.

Explanation in English:
If one desires stealing act one time, he would meet out infinite evils as he would be eager to steal often.
--------------------------
குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

விளக்கவுரை:
அருளும் அன்பும் மனதில் நிலைத்திருந்தால் களவு செய்யும் எண்ணம் கனவிலும் வராது.

Explanation in English:
If one is graceful and kindness, he would never think about stealing others'.
--------------------------
குறள் 286:
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

விளக்கவுரை:
இருப்பதை வைத்து வாழ்க்கை நடத்த விரும்பாது பேராசை நிரம்பியவருக்கே களவு செய்யும் தீமை எண்ணம் வரும்.

Explanation in English:
Only the greedy persons who aren't able to live with sufficient wealth would get the illy thoughts of stealing others'.
--------------------------
குறள் 287:
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்

விளக்கவுரை:
அளவறிந்து வாழும் ஆற்றல் பெற்றோர் களவு செய்யும் மாயவலையில் விழ மாட்டார்.

Explanation in English:
Ones who know to move their lives with codes of limitation wouldn't not fall on stealing greed.
--------------------------
குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு

விளக்கவுரை:
அளவோடு ஆசைப்பட்டு வாழ்பவர்கள் நெஞ்சில் அறம் இருக்கும். களவு செய்து வாழ்வோர் நெஞ்சில் வஞ்சம் மட்டும்தான் இருக்கும்.

Explanation in English:
Ones who live by feeling their wealth is sufficient would have morality. Thieves would have only aggressiveness.
--------------------------
குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்

விளக்கவுரை:
திருடும் தொழிலை தவிர பிற தொழில் மேல் நாட்டமில்லாதவர்கள் அதனாலேயே அழிந்துபோவர்.

Explanation in English:
Ones who don't experience and desire at any profession other than stealing would be destroyed because of that characteristic.
--------------------------
குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு

விளக்கவுரை:
கள்வர்களின் உயிர் அவர்களிடம் இருப்பதையே ஒரு பாவமாக நினைக்கும், களவு எண்ணம் இல்லாதோரின் உயிர்நிலைக்கு தேவர்களின் ஆசீர்வாதம் கிட்டும்.

Explanation in English:
Even soul too be shy and would think as a sin to tend on stealers. Those who don't have stealing thoughts in mind would be blessed by Gods.
--------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

Sunday, 14 November 2021

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்) பகுதி 1 Author: MAHENDIRAN V

எளிதாக அறிவோம் ஆங்கிலம். (தமிழில்)

பகுதி 1 

Author:

MAHENDIRAN V 

Writer, Translator, Motivational speaker

Formerly Professor of English

FOUNDER: MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA MOBILE: 9842490745, 6380406625    Email: poigaimahi@gmail.com 

[Copyright of all works seen in this domain is owned by Mahendiran V.]

முன்னுரை

ஆங்கில மொழி சம்பந்தமாக

என்னிடம் பலர் பல இடங்களில் கேட்ட சந்தேகங்களுக்கு, ஒரு கட்டுரை போல் அமைத்து பகுதிவாரியாக சில விளக்கங்களை  தந்துள்ளேன்... நியாயமான சந்தேகங்கள் அவைகள். அவை என்னவென்றுதான் பாருங்களேன்..!

MAHENDIRAN V - AUTHOR

எளிதாக அறிவோம் ஆங்கிலம். 

பகுதி 1

ஆங்கிலம் பேச அடிப்படை தகுதி என்ன? என்னிடம் ஒருவர் கேட்டார்.

முகநூலில் எழுதுகிறேன் படித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். இங்கும் அதை எழுதியுள்ளேன்.

அப்படி ஒரு கேள்வியை நீங்களும் வைத்திருந்தால் இதை படிக்கவும்.

யாதொரு தகுதியும் தேவையில்லை. ஆனால் முதலில் உங்கள் மொழியிலேயே ஒரு கருத்தை நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

அடுத்தவரை பொருட்படுத்தக்கூடாது. உதாரணத்திற்கு ஒரு பத்து பேர் முன்னிலையில் நீங்கள் எழுந்து நின்று ஒரு அரை மணி நேரம் ஒரு தலைப்பை பற்றி உங்கள் தாய் மொழியிலேயே பேசக் கூடிய ஆற்றல் இருக்க வேண்டும். 

சிலருக்கு அல்ல, பலருக்கும் ஒரு வித நாணம் அல்லது கூச்சம் ஏற்படும். அதனால் உங்களுக்கு உங்கள் மொழி தெரியவில்லை என்றா அர்த்தம்? 

அழகாய் தெரியும்... ஆனால் அந்த இடத்தில் ஒரு பதற்றம் அவ்வளவே!

தாய் மொழியிலேயே இப்படி சற்றொரு தடை ஏற்படும்போது ஆங்கிலம் பேசும் பொழுது ஏற்படாதா என்ன?

ஆக, சற்றும் அச்சம் இருக்கக் கூடாது - என்பதே முதல் தகுதி!

உங்களிடம் ஆங்கிலத்தில் ஒருவர் பேசும்பொழுது உங்கள் கருத்தை சற்றும் பயப்படாமல் ஆங்கிலத்திலேயே (தவறாக இருந்தாலும் பரவாயில்லை, என்ன வந்து விடப்போகிறது... என்ற தைரியத்துடன்) பேச வேண்டும். 

ஆங்கிலம் உங்கள் தாய் மொழி இல்லை, ஆதலால் தவறாகிவிடுமோ என்ற அச்சம் தேவையற்றது. 

தவறேதுமின்றி சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள் ஒரே நாளில் அப்படி உருவாகிவிடவில்லை. நீங்கள் செய்யும் தவறுகளை விட பெருந்தவறுகளை செய்திருப்பார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

வாகனம் ஓட்ட ஒரே நாளில் நாம் கற்று கொள்ளவில்லை. பல நாளைய பயிற்சி அது. 

அது போல தான் ஆங்கிலத்தில் பேசும் திறமையும்.

"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்" - கேள்வி பட்டதில்லை நீங்கள்?

"Practice makes one be perfect" என்பதின் தமிழாக்கம் தான் அது!

வார்த்தைகள் பற்றாக்குறை இலக்கண அறிவின்மை - என்பதல்லாம் சரியான காரணமில்லை. 

தாய் மொழியான தமிழில் உள்ள மொத்த வார்த்தைகளில் ஒரு பத்து சதவிகித வார்த்தைகளை தான் தமிழில் பேசும் பொழுது நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பிட்ட வார்த்தைகளே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. 

அதே கதை தான் ஆங்கிலத்திலும்.ஒரு 250, 300 வார்த்தைகளை தான் பயன்படுத்தப் போகிறீர்கள் ஆனால் ஒரு ஆங்கில அகராதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வார்த்தைகள் இருக்கலாம். அனைத்தும் உங்களுக்கு தேவையன்று. அனைத்து வார்த்தைகளையும் அறிந்தோர் யாருமில்லை! 

இலக்கணம் தெரிந்தால் தான் ஆங்கிலம் பேச முடியும் என்று இல்லை. இலக்கணத்தை படிக்காமலேயே அது உங்களுக்கு தெரிந்துவிடும், ஆமாம்...  அதாவது நீங்கள் ஆங்கிலம் என்ற சூழ்நிலையில் பழகிக் கொண்டே இருந்தால்!

ஆங்கில நாளிதழ்களை வாசித்தல், ஆங்கிலம் நன்கு பேசுபவர்களை கவனித்துக் கொண்டிருத்தல், அவர்களுடன் ஆங்கிலத்தில் (பயிற்சிக்காகவாவது) உரையாற்றிக் கொண்டிருத்தல், தமிழ் திரைப்படங்களை ஆங்கில சப் டைட்டிலுடன் காணுதல் போன்றவையையே ஆங்கிலச் சூழ்நிலை என்று இங்கு நான் குறிப்பிடுகிறேன். 

இம்மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்வதின் மூலமே நீங்கள் ஆங்கிலத்தில் சரளமாக உரையாற்ற முடியும். 

உங்களுக்கு ஆங்கிலத்தில் ஓரளவு பேச எழுத தெரிந்திருந்தால் தான் இலக்கணத்தை முழுமையாக தெரிந்து கொள்ள ஆர்வம் வரும்.

(தொடரும் ...)

-----------------------------------------------------------------

அதிகாரம் 28. கூடா ஒழுக்கம் CHAPTER 28. EVIL MORALITY. திருக்குறள் (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 28. கூடா ஒழுக்கம்

CHAPTER 28. EVIL MORALITY
(AVOIDABLE DISCIPLINES)

(Explanation in Tamil and English written by Mahendiran V)
தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
----------------------------
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

விளக்கவுரை:
ஒழுக்கமற்ற வஞ்சகத்தனமான குணமுள்ளவரை இந்த பஞ்சபூதங்களும் பார்த்து எள்ளிநகையாடும்.

Explanation in English:
The five 
Gods in this Universe would giggle at those who immoral dirty guys.

--------------------------
குறள் 272:
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்
தானறி குற்றப் படின்

விளக்கவுரை:
தன் குற்றத்தை தன் மனசாட்சியே உறுத்தியும் தொடருங்கால் தவம் செய்தும் புண்ணியமில்லை.

Explanation in English:
If one resumes his crime though his conscience reminds him, his doing penance is useless.
--------------------------
குறள் 273:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று

விளக்கவுரை:
தீயமனம் மனதில்கொண்டு நல்லோர் போல் நடிப்போர் புலித்தோல் போர்த்திக்கொண்டு பசுவை போல் புல் மேய்வதற்கு ஒப்பாகும்.

Explanation in English:
While carrying dirty a lot inside pretending honestly outside is like a cow is eating grass with tiger skinned.
--------------------------
குறள் 274:
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

விளக்கவுரை:
தவக்கோலம் பூண்டு தவறுகள் பல இழைத்தல், புதரில் மறைந்து நின்று வேட்டையாடுவதற்கு சமமாகும்.

Explanation in English:
Doing illy affairs a lot with a dress code of sages is as bad as a hunter is hunting by hiding in the bush.
--------------------------
குறள் 275:
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்

விளக்கவுரை:
பற்று அனைத்தும் துறந்தேன் என்று கூறிக்கொண்டு அவச்செயல்கள் செய்வோர்க்கு துன்பம்தான் பரிசாக வரும்.

Explanation in English:
If one says that he has quitted all desires without behaving so, he would  be gifted sadness.
--------------------------
குறள் 276:
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணா ரில்

விளக்கவுரை:
பற்று எதனையும் துறக்காமல் துறந்தது போல் நடிப்பவர்கள் தான் இவ்வுலகின் முதற்கண் இரக்கமற்றவர்கள்/ஏமாற்றுக்காரர்கள்.

Explanation in English:
Ones who are without quitting all greed but pretending as if he has done so are the first merciless persons/ cheaters.
--------------------------
குறள் 277:
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து

விளக்கவுரை:
அகத்தில் அழுக்கையும் புறத்தில் அழகையும் கொண்டுள்ளவர்களின் நிலைப்பாடு, குன்றிமணி சிகப்பாய் தோன்றினாலும் அதன் முனை கருப்பாக இருக்கும் நிலைக்கு ஒப்பானதாகும்.

Explanation in English:
The stance of those who are dirty inside but beauty outside is  like a rosary pea that looks beautiful outside but carries black in corner.
--------------------------
குறள் 278:
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்

விளக்கவுரை:
புறத்திலுள்ள மாசை அகற்ற நீராடினால் போதும் என்றாலும் அகத்திலுள்ள அழுக்கை அகற்ற வழி?

Explanation in English:
Dusts in body can be removed by bathing, but what is the way to wash the dusts that are inside?
--------------------------
குறள் 279:
கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற் கொளல்

விளக்கவுரை:
அம்பு (கணை) நேரானதாக இருந்து கொடிய செயல் செய்யக்கூடியதாலும். யாழ் வளைந்திருந்து இனிய ஓசை தரக்கூடியதாலும், உருவம் என்பது வினைபடும் தன்மையை பொறுத்தது.

Explanation in English:
Arrow is straight but it attacks. Veena is bended but it delivers sweety sound. so that Grading is not determined of one's appearance.
--------------------------
குறள் 280:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்

விளக்கவுரை:
உலகம் பழிக்கும் இழி செயல்களை முற்றிலும் துறந்தாலே போதும். முடி வளர்த்தல், முடி மழித்தல் போன்ற வேடங்கள் தேவையில்லை.

Explanation in English:
The status of sages is that quitting all indisciplinary activities that are against justice. It doesn't mean the act of growing a long hair or removing hair completely.
--------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில்.- வாருங்கள். எளிதாக அறிவோம் ஆங்கிலம் - வை.மகேந்திரன்

ஆங்கிலம் பேசுவது எளிது. கற்கும், கற்றுதரும் வித்தைகள் சரியாக இருக்கும்பட்சத்தில்.

பிற மொழிகளை விட ஆங்கிலம் எளிதானது. அதை கற்கும் அல்லது கற்பிக்கும் முறையில் உள்ள பிழையே அம்மொழி கடினமானது போல் தோன்றுகிறது.

ஒருவர் ஆங்கிலம் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தாலே, அம்மொழியை பேசும் திறன் வர ஆரம்பித்துவிடும். அதனால்தான் நான் தரும் பயிற்சியில் LISTENING SKILL - க்கு முக்கியத்துவம் தருகிறேன்.

தினந்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
முதல் ஒருவாரம் வந்து அமர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். அவ்வப்பொழுது நான் கேட்கும் (உங்களைப் பற்றிய) சிறுசிறு வினாக்களுக்கு ஒரு வார்த்தையில் ஆங்கிலத்தில் பதில் சொன்னால் போதும்.

பிறகு
தங்களின் அன்றாட நடவடிக்கைகளை சரியோ தவறோ ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கும் தைரியம் உங்களுக்கு தானாக வரும்.

ஆங்கிலத்தின் மீது ஆர்வம் வருவது இப்பொழுதுதான்.

தொடர்ந்து சிறுசிறு தலைப்புகள் தருவேன். நிறைய பேச வேண்டியதில்லை. தவறாக இருந்தாலும் பரவாயில்லை.. கச்சிதமாக பேசினால் போதும்.

எந்தெந்த இடத்தில் இலக்கண பிழைகள் செய்கிறீர்கள் என்பதை தாங்களே உணரும் பக்குவம் வரும்.

முக்கியமான விஷயம் யாதெனில், இலக்கணத்தை ஒரு தலைப்பாக எடுத்து பயில்வது இலக்கணத்தின் மீதே கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தலாம். ஆதலால் தான் உரையாடலின் பொழுது எந்த இடத்தில் எந்த இலக்கணம் தேவைப்படுகிறது என்பதை உங்களை அறிந்து கொள்ள செய்கிறேன்.
பயிற்சி எடுக்க எடுக்க பிழைகள் தவிர்க்கப்படுவதை தாங்களே உணர்வீர்கள்.
இதை தான் நான் Imitative type of learning என்கிறேன்.

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பயிற்சி இது.

பட்டம் மற்றும் பட்டய படிப்பு படிப்பவர்கள் படித்து முடித்து நேர்முகத் தேர்விற்கு ஆயத்தமாகுபவர்கள், இப்பயிற்சியில் சேரலாம்.
பயிற்சியில் சேர
விபரங்கள் வேண்டுமாயின்,
தொடர்புகொள்ளவும்.
நன்றி.
MAHENDIRAN V
(Writer, Translator, Formerly professor of English)
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM
Mobile: 9842490745, 6380 406 625

திருக்குறள். அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 27. தவம் Chapter 27. PENANCE
(Explanation in Tamil and English written by Mahendiran V)

தெய்வப்புலவரின் திருக்குறள்.
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
----------------------------

குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு

விளக்கவுரை:
தனது துன்பத்தை தாங்கிக்கொள்வதும், பிறருக்கு துன்பம் தராமல் இருப்பதே பெரும் தவமாகும்.

Explanation in English:
The prime penance is that the state of being patient despite having difficulties, and not to do illy activities to others.
----------------------------
குறள் 262:
தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள்வது

விளக்கவுரை:
தவம் செய்யும் ஒழுக்கநெறிமுறைகளை அறிந்தோரே தவம் செய்யமுடியும் மற்றோர் தவம் செய்தலாகாது.

Explanation in English:
Only the persons who know the disciplines of penance can do penance. Others can't do it.
----------------------------
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள் தவம்

விளக்கவுரை:
துறவறம் பூண்டோர்க்கு பணிவிடை செய்வதே ஒரு தவம் என்றெண்ணி தவம் செய்ய மறப்பார்கள் பலர்.

Explanation in English:
Some might forget to perform penance since they are enthusiastically servicing to those who have quitted all desires.
----------------------------
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

விளக்கவுரை:
தவ வலிமையால் தீயோரை திருத்தமுடியும். நல்லோரை மிக வல்லோராக்க முடியும்.

Explanation in English:
Surely, Through one's penance, he  can correct evil guys to bring to the right path, and can enhance purists more and more.
----------------------------
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

விளக்கவுரை:
விரும்பியவற்றை விரைந்து பெற்றுக்கொள்ளும் பாக்கியம் தவ வலிமைக்கு உண்டு.

Explanation in English:
One can obtain all betterments rapidly by doing a strong penance morally.
----------------------------
குறள் 266:
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

விளக்கவுரை:
நற்குணம் கொண்ட நல்லவர்களே தவம் செய்ய முற்படுவர். ஏனையோர் ஆசைக்குட்பட்டு அவலநிலை அடைவர்.

Explanation in English:
Only disciplined persons would desire to do penance. Others would be spinned in greedy net and get evils a lot.
----------------------------
குறள் 267:
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

விளக்கவுரை:
சூட்டினால் தங்கம்  மென்மேலும் மிளிர்வது போல, தன்னை மென்மேலும் வருத்தி தவம் செய்வோருக்கு பிரகாச வாழ்க்கை கிட்டும்.

Explanation in English:
As if gold is glittering more and more since it is heated, ones who do penance more and more would get glittering in their life.
----------------------------
குறள் 268:
தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்

விளக்கவுரை:
தன் உயிரே முக்கியம், தன் வாழ்க்கையே செளக்கியம் என்று நினைக்காதவர்களை   இம் மண்ணிலுள்ள அனைத்து உயிர்களும் வணங்கும்.

Explanation in English:
All living beings in this earth would be praising ones who don't consider that only their lifes are important for them.
----------------------------
குறள் 269:
கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

விளக்கவுரை:
இறப்பையும் எதிர்கொள்ளும்/வெல்லும் ஆற்றலை தூய்மையான தவத்தின் பயனால் பெற முடியும்.

Explanation in English:
One can defeat his death too by virtue of his pure penance.
----------------------------
குறள் 270:
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

விளக்கவுரை:
இவ்வுலகில் பலருக்கு எதுவுமில்லா நிலை ஏற்படுவதற்கு காரணம் ஒழுக்கம் நிறைந்த தவநிலை மேற்கொள்ளாததே. சிலருக்கு மட்டும் அருள் கிடைப்பதற்கு காரணம் துன்பத்தையும் பொறுத்து தவநிலையை பின்பற்றுவதே.

Explanation in English:
Nil betterment in many persons' life is happening because of their ignorance of moral penance. Likewise a few are getting grace of God because of their strong penance despite having difficulties.
----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------


Friday, 12 November 2021

அதிகாரம் 26 திருக்குறள் புலால் மறுத்தல் CHAPTER 26 TO AVOID EATING FLESHES/MEAT (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 26 

புலால் மறுத்தல் CHAPTER 26
TO AVOID EATING FLESHES/MEAT

(Explanation in Tamil and English written by Mahendiran V)
தெய்வப்புலவரின் திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
-----------------------------
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

விளக்கவுரை:
இன்னொரு உயிரைக் கொண்டு தன் உடலை வளர்ப்பவனை எப்படி கருனையுள்ளவனாக இருக்க முடியும்?

Explanation in English:
How can one be merciful if he grows his body by killing other living beings?
-----------------------------
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு

விளக்கவுரை:
புலால் உண்பதால் ஒருவன் அருளில்லாதவனாகிறான் அவன். அவனிடம் பொருள் குவிந்திருந்தாலும் அது அநீதியாகும்.

Explanation in English:
Though one is having infinite wealth, if he eats meat, he is known as graceless fellow.
-----------------------------
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை யுண்டார் மனம்

விளக்கவுரை:
புலால் சுவை அறிந்தவன், தீமை வழிக்காக படை கொண்டு எச்செயலையும் செய்பவனுக்கு சமமானவன்.

Explanation in English:
One who tastes meat and flesh is a person like a person who has troops for collapsing by illy ways.
-----------------------------
குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்

விளக்கவுரை:
பிற ஜீவராசிகளின் உயிரை பரித்தல் அருள் இல்லை. அப்படி பரிப்பவர்கள் கருணையற்றவர்கள். அதிலும் புலால் புசித்தல் அர்த்தமற்ற செயல்.

Explanation in English:
Killing other living beings is graceless activity and merciless characteristic. More over, eating meat is sinful.
-----------------------------
குறள் 255:
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு

விளக்கவுரை:
புலால் உண்ணாதிருத்தலே உயர்நிலை. தவறுபவர்கள் நரகத்தின் வாயிலுக்கு செல்கிறார்கள் என்று பொருள். நரகம் அவர்களை கவ்விகொள்ளும்.

Explanation in English:
The status of not eating flesh is the highest grace. Failing which would go to the gate of hell. The hell would crawl them.
-----------------------------
குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்

விளக்கவுரை:
உண்பதற்காக உயிர்வதை செய்யாமலிருந்தால் புலால் கிடைக்காத நிலை ஏற்படும். புலால் உண்ணும் வழக்கமும் இல்லாமல் போகும்.

Explanation in English:
If there is no slautering living beings (catle), none can avail meat, and habit of eating meet wouldn't exist.
-----------------------------
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

விளக்கவுரை:
புலால் இன்னொரு உயிரின் ரணம் என்றறிந்தவர்கள் புலால் உண்ணமாட்டார்கள்.

Explanation in English:
One who knows that meat is the hurt of another living being would not eat it.
-----------------------------
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

விளக்கவுரை:
குற்றமில்லா நெஞ்சுடையார் உயிர் பிரிந்த உடலை உண்ணமாட்டார்கள்.

Explanation in English:
One who is crimeless hearted characteristic would never eat the meat that is a derived one from a soul.
-----------------------------
குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

விளக்கவுரை:
ஓர் உயிரை கொல்லாதிருத்தல் ஆயிரம் வேள்விகள் (யாகங்கள்) செய்ததற்கு சமமானதாகும்.

Explanation in English:
The stance of not killing a living being is equallent to perform thousands of spiritual disciplines.
-----------------------------
குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்

விளக்கவுரை:
எவ்வுயிரையும் கொல்லாதிருப்போரை அனைத்து உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

All living beings would pray ones who don't kill any living being for any reason.
----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

Thursday, 11 November 2021

திருக்குறள். அதிகாரம் 25 அருளுடைமை CHAPTER 25 GRACEFULNESS (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 25   அருளுடைமை

CHAPTER 25
GRACEFULNESS
(Explanation in Tamil and English written by Mahendiran V)
தெய்வப்புலவரின் திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
--------------------------
குறள் 241:
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள

விளக்கவுரை:
எவ்வளவுதான் பொருள் செல்வம் யாரிடத்தில் இருந்தாலும் அது அருள் என்கிற செல்வத்திற்கு ஈடாகாது.

Explanation in English:
How far ever wealth can be had by whoever. Such is not equallent to the wealth of grace.
--------------------------
குறள் 242:
நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை

விளக்கவுரை:
எவ்வழிச் சென்றாலும் கிடைக்கும் செய்தி, நல்வழி நாடிச் சென்று பெற்ற நல்லருள் ஒன்றே கடைசிவரை துணையாக நிற்கும்.

Explanation in English:
Any path of religious say that one should go on right path to get great grace.
--------------------------
குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

விளக்கவுரை:
அருள் சேர்ந்த உள்ளமுடைவர்களுக்கு இருள் சூழ்ந்த துன்பம் என்றும் வருவதில்லை.

Explanation in English:
A graceful hearted person would never get darky illy life ever.
--------------------------
குறள் 244:
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை

விளக்கவுரை:
அனைத்து உயிர்களையும் நேசித்து வாழ்பவர்களுக்கு பேரருள்கிட்டுவதால் உயிருக்கு அஞ்சி வாழவேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்காது.

Explanation in English:
If ones are loving all living beings in the world, as they are blessed immensely they can be away from the fear of death.
--------------------------
குறள் 245:
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி

விளக்கவுரை:
காற்று நிறைந்திட்டு இவ்வுலகை காப்பதுபோல் அருள் நிறைந்திட்டு நல்லோர்க்கு துன்பம் வருவதில்லை.

Explanation in English:
As if the wind stands and protects this world, graceful persons would be away from all evils.
--------------------------
குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்

விளக்கவுரை:
அருளில்லாதோர, தான் அடையப்போகும் துன்ப நிலையையும் அறியும் வாயப்பு கிட்டாதாவர்.

Explanation in English:
Graceless ones couldn't come to know what they are to meet difficulties in the future time.
--------------------------
குறள் 247:
அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு

விளக்கவுரை:
பொருட்செல்வம் இல்லாது ஒருவர்க்கு இவ்வுலகம் இன்பம் தராதது போல் அருட்செல்வம் இல்லாதோர்க்கு மோட்சத்தில் இடமில்லை

Explanation in English:
No pleasant in the present life to ones who don't have wealth likewise there would not be place in the heaven to those who don't have graces from god.
--------------------------
குறள் 248:
பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது

விளக்கவுரை:
பொருட்செல்வம் இழந்திருந்திருந்தாலும் மீட்டு விடலாம், இழந்த அல்லது இல்லாது போன அருட்செல்வத்தை மீட்டு பெறமுடியாது.

Explanation in English:
The lost wealth can be retrieved by one but not the lost graces can be gotten back.
--------------------------
குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

விளக்கவுரை:
அருள் இல்லாதவனின் அறச்செயல்கள் அறிவிலிகளின் நூல்களில் காணும் கருத்தை போன்றதாகும்.

Explanation in English:
Moralities done by graceless persons are equallent to the concepts of the books written by utter fools.
--------------------------
குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து

விளக்கவுரை:
தன்னை விட பலம் குன்றியவர்களிடம் தன் வீரத்தை காட்டுவதற்கு முன், தன்னைவிட பலசாலியிடம் எதிர்கொள்ளும் ஆற்றல் தனக்கு உள்ளதா என்பதை ஒருவன் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Explanation in English:
One should think about whether he is strong enough to dash against one who is stronger than him before showing his bravery to one who is weaker.

----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

Wednesday, 10 November 2021

திருக்குறள். அதிகாரம் 24 புகழ் CHAPTER 24 PRIDE (Explanation in Tamil and English written by Mahendiran V)

அதிகாரம் 24 புகழ்

CHAPTER 24  PRIDE
(Explanation in Tamil and English written by Mahendiran V)


தெய்வப்புலவரின் திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625
--------------------------
குறள் 231:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை உயிர்க்கு

விளக்கவுரை:
ஏழைகளுக்கு உதவுவதனால் கிடைக்கும் புகழை விட ஒரு மனிதனுக்கு பெரும் சம்பாதித்யம் ஏதுமில்லை

Explanation in English:
No any other earning is the best to one as he earns prides by helping poor people.
--------------------------
குறள் 232:
உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்

விளக்கவுரை:
வறுமையில் இருப்போர்க்கு உதவுவதை கண்டு பிறர் புகழும் புகழ்ச்சியே முதன்மையான புகழ்.

Explanation in English:
The perfect pride is that others applaud one because of his doing immense help to people who are under poverty.
--------------------------
குறள் 233:
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்

விளக்கவுரை:
ஒருவனின் நற்செயல்களால் கிடைக்கும் புகழே என்றும் நிலைத்து நிற்குமேயன்றி வேறெதுவும் இல்லை.

Explanation in English:
None would stably stand but the pride of one done by good activities.
--------------------------
குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு

விளக்கவுரை:
இவ்வுலகம் தேவர்கள் முனிவர்களை கூட வாழ்த்தாது ஆனால் நற்செயல் புரிந்து புகழ்பெற்றவர்களை வாழ்த்தும்.

Explanation in English:
The world would no applaud even sages or saints but ones who get prides of his good acts.
--------------------------
குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது

விளக்கவுரை:
அத்தனை துன்பத்திலும் கஷ்ட்டத்திலும் புகழை தாங்கி நிற்கும் தன்மை சாவிற்கு பிறகும் நிலைத்து நிற்கும்.

Explanation in English:
Retaining prides despite being infinite difficulties would ever stand even after death too.
--------------------------
குறள் 236:
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

விளக்கவுரை:
நற்செயல் புரிந்து புகழ்பெற்று வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும். இல்லேல் வாழ வந்ததே அர்த்தமற்றதாகும்.

Explanation in English:
One should live with earning prides a lot by doing enormous betterments otherwise one's birth is meaningless.
--------------------------
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்

விளக்கவுரை:
புகழுடன் வாழ இயலாதவர் தன் இயலாமையை மறைத்து அதற்காக பிறரை இகழ்ந்து உரைப்பது சிறுமையாகும்.

Explanation in English:
It's meaningless what one who is not able to be granted prides because of his inability but accusing others instead of him.
--------------------------
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்

விளக்கவுரை:
வாழ்வில் எஞ்சி நிற்பது புகழ் தான் என்றெண்ணி வாழ்வில் புகழ் பெற வாழ தவறுவது ஒரு பழியாகும்.

Explanation in English:
Failing being granted prides despite knowing that only pride remains ever is a crime.
--------------------------
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

விளக்கவுரை:
புகழ்பெற்று வாழ முயற்சிக்காதவரை சுமந்ததற்காக இந்த புவியே வெட்கி நிற்கும்.

Explanation in English:
The earth too would shy and lose its dignity for carrying ones who fail to live with prides of good activites.
--------------------------
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

விளக்கவுரை:
பழி/குற்றமில்லாமல் வாழ்பவரே வாழ்பவர்களாவார்கள். அது போல புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் வாழ லாயக்கற்றவர்களாவார்கள்.

Explanation in English:
Only the life of ones without crime is the best life likewise the life of ones without prides is the worst life.
----------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

Part 2 Imitative type of learning.

https://youtu.be/Ufp7uw_nbfk 

What does Imitative type of learning? Watch this video..

 https://youtu.be/XCBf6UMjDMQ

Tuesday, 9 November 2021

அதிகாரம் 23 ஈகை CHAPTER 23 DONATION/HELP தெய்வப்புலவரின் திருக்குறள் விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.

அதிகாரம் 23 ஈகை

CHAPTER 23 DONATION/HELP

தெய்வப்புலவரின் திருக்குறள்
விளக்கவுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியவர் வை.மகேந்திரன் வடக்குபொய்கைநல்லூர்.
Founder:
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA
MOBILE 9842490745, 6380406625

குறள் 221:
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து

விளக்கவுரை:
ஏதுமில்லாதோர்க்கு வழங்குவதே ஈகையாகும் மற்றவையெல்லாம்  எதையோ எதிர்பார்த்து வழங்குவது போலாகும்.

Explanation in English:
Helping to people who are under poverty is not an expectable help. If one does the same for others, that means that is expectable one.
--------------------------
குறள் 222:
நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

விளக்கவுரை:
ஒருவரிடமிருந்து ஈகை பெறுவது அத்தனை நன்மையன்று. இல்லார்க்கு ஈகை தருவதால் பின்னாளில் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைப்பதும் ஒருவித எதிர்பார்ப்பே.

Explanation in English:
The stance of looking for help from others is not fair. Likewise, one's expecting heaven for his having done help is also not fair.
--------------------------
குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள

விளக்கவுரை:
தன் ஏழ்மை நிலையை பிறரிடம் காட்டிக்கொள்ளாது தன் சக்திக்கேற்றவாறு  உதவிக்கரம் நீட்டுபவரே உயர்ந்த குடிமக்கள்.

Explanation in English:
The good citizen is who doesn't reveal his poorness but donating for other's needs as much as his ability.
--------------------------
குறள் 224:
இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு

விளக்கவுரை:
ஈகை பெற்றவுடன் மலர்ந்த முகம் காட்டினாலும், பெறும்வரை இரக்கம் தோய்ந்த முகத்துடன் நிற்கும் நிலை பரிதாபத்திற்குரியது.

Though one who comes for aid gets blossomed face after getting food or things from one, the stance of his standing with pitiable face till he is donated is tragedious.
--------------------------
குறள் 225:
ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

விளக்கவுரை:
தவவலிமையால் பசியை தாங்கித் கொள்ளும் ஆற்றலை விட பசியை போக்க உணவளிக்கும் ஆற்றலே பெரியது.

The stance of tackling one's hunger through spiritual meditation is not stronger than abating the hunger by serving food.
--------------------------
குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

விளக்கவுரை:
ஒருவரின் பசிப்பிணியை போக்க உணவளித்து மகிழ்பவனின் செல்வமனைத்தும் அழியாமல் நிற்கும்.

One who stops one's hunger by distributing food pleasantly will not lose his wealth in his life. It will stably stand for him for years.
--------------------------
குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது

விளக்கவுரை:
தன் உணவை பிறர்க்கும் பகிர்ந்தளித்து தானும் உண்பவனுக்கு பசிப்பிணி என்றும் வராது.

One who is eating his food by distributing others would never get hunger sick in his life.
--------------------------
குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

விளக்கவுரை:
ஈகை அளித்து அதிலுள்ள மகிழ்ச்சியை அறியாதவரே தன் பொருள் அனைத்தையும் யாரிடமோ எங்கோ இழப்பர்.

Ones who aren't aware of that 'only helping others would cause happiness' would lose their sources to someone and somewhere in the future.
--------------------------
குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

விளக்கவுரை:
தேடிய பொருளனைத்தையும் தானே உண்டு அனுபவித்து வாழும் நிலை, அடுத்தோரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்கும் நிலையைவிட கொடுமையானது.

The stance of enjoying all his properties himself without assisting to any one is worse than standing infront of one and begging for help.
--------------------------
குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை

விளக்கவுரை:
சாவது தான் பெரும் துன்பமென்றாலும், பிறர்க்கு உதவ ஏதுமில்லாத நிலை சாவதைவிட பெரும் துன்பமாகும் என்பர் சான்றோர்.

Intellectuals would say that 'death is not an extreme tragedy but the stance of being not able to help others is the most extreme tragedy'.
------------------------------
Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

(Copyright of this work is mine. Copying, plagiarising without my permission is prohibited. MAHENDIRAN V)
--------------------------

அதிகாரம் 22. ஒப்புரவறிதல். (HELPING TENDENCY.) திருக்குறள். விளக்கவுரை தமிழிலும் ஆங்கிலத்திலும் Written by Mahendiran V

அதிகாரம் 22 

ஒப்புரவறிதல்

CHAPTER 22
HELPING TENDENCY 

Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 9842490745, 6380406625
Email: poigaimahi@gmail.com

குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு

விளக்கவுரை:
மழை எப்படி எந்த பிரதிபலனும் எதிர்பாராது புவிக்கு நீரை தருகிறதோ அதுபோல ஒருவர் செய்யும் உதவி, கைமாறு எதிர்பார்த்து செய்தல் கூடாது.

Explanation in English:
As if rain provides water to the earth without expecting any compensation, one's help should be so.
-----------------------------------
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு

விளக்கவுரை:
உழைத்து சம்பாதிப்பவர்கள் ஈட்டிய பணத்தை உழைக்க இயலாமல் போவோர்க்கு கொடுத்து உதவுவதே பேருதவியாகும்.

Explanation in English:
The stance of helping money earned by one's hard work to unables is the greatest help.
-----------------------------------
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற

விளக்கவுரை:
உழைக்க இயலதாவர்களுக்கு தன் உழைப்பால் பலன் எதிர்பாராது கொடுத்து உதவும் மாண்பு மிக்கவர்கள் தேவலோகத்தில் கூட காண்பதற்கு அரிதானவர்கள்.

Explanation in English:
Those who help by their hard work and without any gain to ones who are unable to work are great. They are equqllent to God.
-----------------------------------
குறள் 214:
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்

விளக்கவுரை:
உழைக்க இயலாதோர்க்கு கொடுத்து உதவுவர்களே உயிர்வாழ தகுதியுள்ளவர்கள்.மற்றோர் இறந்தோர்க்கு சமம்.

Explanation in English:
Ones who help to who are unable to work and earn due to their inability are eligible to have live, others are equallent to be dead.
-----------------------------------
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

விளக்கவுரை:
தன் சம்பாதித்யம் அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற மனப்பான்மையுடைவர்கள், உயிர்வாழ ஊர் உலகிற்கு பயன்படும் நீர் நிலைகளுக்கு ஒப்பானவர்கள்.

Explanation in English:
Ones who think that their earnings should be useful to all are equallent to the water sources that are factors for all living beings to live.
-----------------------------------
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்

விளக்கவுரை:
உதவும் மனப்பான்மை உள்ள நல்ல மனிதர்களிடம் செல்வம் குவிவது, மரங்களில் பழங்கள் பழுத்து நிறைந்திருப்பதற்கு ஒப்பாகும்.

Explanation in English:
The stance of cummulating wealth to aiding persons is as if trees are having ripped fruits a lot.
-----------------------------------
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்

விளக்கவுரை:
நல் மனிதர்களிடம் செல்வம் நிறைந்திருந்து, அனைவருக்கும் பயன்படுமேயானால், மரத்தின் அனைத்து உறுப்புகளும் மருந்தாக பயன்படுவது போலாகும்.

Explanation in English:
Richers' having a lot of money is like trees are used as medicines by its all organs.
-----------------------------------
குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்

விளக்கவுரை:
உதவி செய்தே வாழ்ந்து பழகிப்போனவர்கள், தங்களால் இயலாத காலத்திலும் கடன் பெற்றாவது உதவி செய்வர்.

Explanation in English:
Richers who are habitually helping to others would be helping by borrowing incase of standing with poverty.
-----------------------------------
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு

விளக்கவுரை:
செல்வம் மிகுந்தவர் வறுமையடைந்தால், அவர் வருந்துவது எதற்காக என்றால், பிறருக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதே என்று எண்ணுவதுதான்.

Explanation in English:
If rich men supposed to be loss and meet poverty since they  helped to inabilities, they would be worried out only for the reason that they aren't able to help to others.
-----------------------------------
குறள் 220:
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து

விளக்கவுரை:
நல்லதொரு செல்வந்தன் அடுத்தோர்க்கு அள்ளி கொடுப்பதால் தீமையை சந்திக்கும் நிலை ஏற்பட்டால் தன்னை விற்றாவது அத்தீமையை எதிர்கொள்வான்.

Explanation in English:
If a good rich man meets evils because of his infinite helps to others, he would tackle such evils by mortgaging himself.
-----------------------------------

Thirukkural.
Explanation in Tamil and English is written by Mahendiran.V
MAHENDIRAN GLOBAL ENGLISH NORTHPOIGAINALLUR NAGAPATTINAM TAMILNADU INDIA 611106
MOBILE: 98424907456380406625
Email: poigaimahi@gmail.com

Featured post

How to speak this ...?

 https://youtu.be/n-KYtqpQ0oE